தாது மணல் கொள்ளையை மாநில முதல்வர்கள் தடுக்க வேண்டும்: ஜெயந்தி நடராஜன்

Subscribe to Oneindia Tamil

Centre has written to states to stop illegal sand mining'
தாதுமணல் கடத்தப்படுவதை தடுக்க நிரந்தர தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை அனைத்து மாநில முதல்வர்களும் மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் கூறினார்.

டெல்லி செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் செய்தியாளர்களிடம் பேசினார் அப்போது அவர் கூறியதாவது:

கடற்கரையோரங்களில் தோரியம் என்னும் தாதுமணல் கடத்தப்படுவதை தடுக்க நிரந்தர தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை, அனைத்து மாநில முதல்வர்களும் மேற்கொள்ள வேண்டும் என்றும், இது குறித்து எல்லா மாநில முதல்வர்களுக்கும் கடிதம் எழுத இருக்கிறேன் என்றும் தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், சத்தியமங்கலம்- மைசூர் இடையே ரயில் போக்குவரத்திற்கு அனுமதித்தால் இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல்கள் பாதிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

ஈழத்தமிழர்கள் பிரச்னை தொடர்பாக மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் கூறிய கருத்து அவரது சொந்த கருத்து என்றும் ஜெயந்தி நடராஜன் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+