பீகாரில் லோக்சபா தேர்தலில் எந்த கட்சி அதிக தொகுதிகளை வெல்லும்? ஏபிபி சர்வே பரபர
Recommended Video

டெல்லி: பீகாரில் லோக்சபா தேர்தலில் பாஸ்வான் கட்சியுடன் குஷ்வாஹா கட்சி இணைந்தால் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெறும் என்று கூறியுள்ளது.
தேசத்தின் மனநிலை என்ற பெயரில் ஏபிபி தொலைக்காட்சி- சிவோட்டர் சர்வே நடத்தியுள்ளது. பல்வேறு அரசியல் விவாதங்களை முன்வைத்தும், அடுத்து நடக்க உள்ள தேர்தலை முன்வைத்தும் இந்த சர்வே நடத்தப்பட்டு இருக்கிறது.

இதில் நாடாளுமன்றத் தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது குறித்து மாநில வாரியான கருத்துக் கணிப்பை நடத்தியது. இதில் பீகாரில் லோக்சபா தேர்தலில் எந்த கட்சி அதிக இடங்களை பிடிக்கும் என்ற கணிப்பு வெளியாகியுள்ளது.
ராம்விலாஸ் பாஸ்வான் கட்சி, குஷ்வாஹா கட்சிகள் பாஜக கூட்டணியில் தொடர்ந்தால் லாபம். 40 லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணி 31 தொகுதிகளில் நிச்சயம் வெல்லும். காங்கிரஸ் கூட்டணி 9 தொகுதிகளை மட்டுமே வெல்ல முடியும் என்றும் சர்வே கூறுகிறது.












Click it and Unblock the Notifications