"எனக்கே சரக்கு இல்லையா.." ஒயின் ஷாப்பிற்கு தீ வைத்த இளைஞர்! தீபாவளி நாளில் பெரும் பரபரப்பு
விசாகப்பட்டினம்: தனக்கு மது வழங்கவில்லை என்பதால் ஆத்திரமடைந்த இளைஞர் ஒருவர் மொத்தமாக மதுக் கடையைக் கொளுத்திய பகீர் சம்பவம் அரங்கேறியுள்ளது.
நேற்றைய தினம் தீபாவளி பண்டிகை நாடு முழுக்க கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. தீபாவளியை முன்னிட்டு பொதுமக்கள் அனைவரும் தங்கள் ஊருக்குத் திரும்பி தீபாவளியைக் கொண்டாடினர்.

அதேநேரம் தீபாவளியை முன்னிட்டு மது விற்பனையும் அதிகரித்தது. நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் மது விற்பனை அதிகமாகவே இருந்தது. தீபாவளிக்கு முதல்நாளே மது குடிப்போர் மது வகைகளை வாங்கி குவித்தனர். இதனால் மது விற்பனையும் அதிகரித்தது.
மதுக் கடை: இதற்கிடையே ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம் மதுர்வாடா பகுதியில் வினோத சம்பவம் அரங்கேறியது. அதாவது மதுக் கடை ஒன்றில் தனக்கு மது கிடைக்காததால் ஆத்திரமடைந்த இளைஞர் ஒருவர், அப்படியே மொத்தமாக மதுக் கடைக்கு தீ வைத்த பகீர் சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைதும் செய்தனர்.
மதுர்வாடா பகுதியைச் சேர்ந்தவர் மது. இவர் அப்பகுதியில் அமைந்துள்ள ஒயின் ஷாப் ஒன்றில் மது வாங்க சென்றுள்ளார். இருப்பினும், கடை க்ளோஸ் செய்யும் நேரம் வந்துவிட்டதால் ஒயின் ஷாப் ஊழியர் அவருக்கு மது வழங்க மறுத்துவிட்டார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒயின் ஷாப் ஊழியர்கள் அவரை எச்சரித்த நிலையில், அவர் அங்கிருந்து கிளம்பிவிட்டார்.
தீ வைப்பு: இருப்பினும், இதனால் ஆத்திரமடைந்த அவர், நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை ஒரு பெட்ரோல் டேங்குடன் கடைக்குத் திரும்பினார். ஒயின் ஷாப்பிற்கு பெட்ரோல் ஊற்றி கடைக்கு அவர் தீ வைத்தார். அங்கே உள்ளே ஊழியர்கள் இருந்த போதிலும், அதை அவர் கண்டுகொள்ளவில்லை. இந்தச் சம்பவம் அங்கே பெரும் பரபரப்பைக் கிளப்பியது.
ஒயின் ஷாப்பில் அந்த நபர் பெட்ரோல் ஊற்றத் தொடங்கியவுடன் அச்சமடைந்த ஊழியர்கள் அங்கிருந்து தெறித்து ஓடினர். அவர்கள் நெருப்பை அணைக்க முயன்றனர். இருப்பினும், பெட்ரோல் ஊற்றியதாலும், உள்ளே இருந்தது மது வகைகள் என்பதால் தீ மளமளவென பரவியது. வெறும் சில நிமிடங்களில் ஒட்டுமொத்தமாகக் கடை நாசமடைந்தது.
கைது: இதில் 1.5 லட்ச ரூபாய் மதிப்பிலான மது வகைகள், கணினி, பிரிண்டர் ஆகியவை சேதமடைந்ததாக கூறப்பட்டது. அந்த நபருக்கு எதிராக ஐபிசி 307 மற்றும் 436 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரிடம் முதற்கட்ட விசாரணையை ஆரம்பித்துள்ளனர். கோபம் காரணமாக இப்படிச் செய்தாரா இல்லை அவருக்கு வேறு எதாவது திட்டம் இருக்கிறதா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை












Click it and Unblock the Notifications