தற்கொலைப் படை தாக்குதல் பேச்சு- அகோரத்தைத் தொடர்ந்து பாஜகவின் அரியலூர் ஐயப்பன் கைது!
அரியலூர்: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கட்டளைப்படி அரியலூர் மாவட்டத்தில் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்துவோம் என பேசியதற்காக அரியலூர் மாவட்ட பாஜக தலைவர் ஐயப்பன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்தது முதலே பாஜக தலைவர்கள் மிரட்டும் தொனியில் பேசுவது தொடர்ந்து கொண்டே இருக்கிறது. குறிப்பாக தமிழக முதல்வரை பாஜக தலைவர்கள் அவதூறாக பேசி வருகின்றனர்.

கல்யாணராமன்
கடந்த மாதம் முதல்வர் மு.க.ஸ்டாலின், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆகியோர் குறித்து ட்விட்டரில் ஆபாசமாக பதிவிட்டார் பாஜகவின் கல்யாண ராமன். இதனையடுத்து சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் நள்ளிரவில் போலீசார் கைது செய்தனர். முன்னதாக போலீசாருடன் ஒத்துழைக்க மறுத்து வாக்குவாதம் செய்திருந்தார் கல்யாண ராமன். பின்னர் அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

அகோரம் கைதாகி விடுதலை
இந்த நிலையில் அண்மையில் அரியலூரில் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்க வலியுறுத்தி பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக ஓபிசி அணியின் மாநில துணைத் தலைவர் அகோரம், பாஜக மாவட்ட தலைவர் ஐயப்பன் உள்ளிட்டோர் சர்ச்சைக்குரிய வகையில் பேசினர். இதனைத் தொடர்ந்து அகோரம் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். ஆனால் அவருக்கு உடனடியாக ஜாமீன் வழங்கப்பட்டதால் விடுதலையானார்.

தற்கொலைப் படை தாக்குதல்
இதனிடையே அரியலூர் ஆர்ப்பாட்டத்தில், பெட்ரோல் டீசல் மீதான வாட் வரியை தமிழக அரசு ஒரு வாரத்தில் குறைத்தாக வேண்டும்; அப்படி தமிழக அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் அரியலூர் மாவட்டத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை உத்தரவுப்படி தற்கொலைப் படை தாக்குதல் நடத்துவோம் என அம்மாவட்ட பாஜக தலைவர் ஐயப்பன் பேசியிருந்தார். இந்த பேச்சுக்கு ஐயப்பன் மீது போலீசார் வழக்குப் பதிவு கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கடும் நடவடிக்கை இல்லை
பாஜகவினரின் அநாகரிகமான, அவதூறான பேச்சுகளுக்காக தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து கைது செய்கிறது. அதேநேரத்தில் கைது செய்யப்பட்டவர்களில் சிலருக்கு உடனே ஜாமீனும் வழங்கப்படுகிறது. ஜாமீன் வழங்குவதற்கு அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்படாததால் உடனடியாக அவர்கள் விடுதலை ஆகிவிடுகின்றனர். இந்த போக்கினால்தான் அகோரம், ஐயப்பன் போன்ற பாஜகவினர் தமிழக அரசையும் முதல்வர் மு.க.ஸ்டாலினையும் மிரட்டும் வகையில் பேசுவது வாடிக்கையாகிவிட்டது என்கின்றனர் மூத்த பத்திரிகையாளர்கள்.
-
திடீரென.. திமுக வேட்பாளர் காலில் விழுந்த அதிமுக வேட்பாளர்.. வேட்பு மனு தாக்கலின்போது ருசிகரம்! -
Rs 8000 Gift Voucher: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000 கூப்பன் எங்கே கிடைக்கும்? விண்ணப்பிப்பது எப்படி? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
“இன்று இரவுக்குள் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை ராகுல் காந்தி வெளியிடுவார்"- ஈரோட்டில் சொன்ன ஸ்டாலின் -
யாரு? எங்க? பாஜகவில் பரபர பஞ்சாயத்து! அதிமுகவால் கடுப்பான டெல்லி! மொடக்குறிச்சியில் அண்ணாமலை போட்டி? -
முடியவே முடியாது.. டெல்லியை எதிர்த்து நிற்கும் அண்ணாமலை! பாஜக பட்டியல் தாமதம்! இது தான் காரணம்! -
விஜயோடு சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைப்போம்! தமிழகத்தில் மத்திய அமைச்சரை வைத்து பல்ஸ் பார்க்கிறதா பாஜக? -
இறுதியான பாஜக வேட்பாளர்கள் பட்டியல்.. பியூஷ் கோயல் ஆலோசனையில் நடந்தது என்ன? அண்ணாமலைக்கு வாய்ப்பு? -
பொருளாக தராமல் ரூ.8,000 கூப்பன் கொடுப்பது ஏன்? மக்களிடம் முதல்வர் ஸ்டாலின் சொன்ன விளக்கம்! -
சுந்தர்.சி வேட்பாளர் ஆனதற்கு எதிர்ப்பு.. புதிய நீதி கட்சியின் அமைப்புச் செயலாளர் திடீர் விலகல்! -
கோவை வடக்கு தொகுதியில் பாஜக கதை குளோஸ்.. சத்தமே இல்லாமல் வேலை பார்க்கும் வேலுமணி ஆதரவாளர் -
புதுச்சேரி குறித்து பக்கம் பக்கமாக புகார்.. தமிழக அரசியல் குறித்து கப்சிப்.. அண்ணாமலைக்கு வந்த சோதனை











Click it and Unblock the Notifications