காஷ்மீரில் வீரமரணமடைந்த தமிழக வீரர்களின் குடும்பத்தில் தலா ஒருவருக்கு அரசு பணி.. முதல்வர் அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
அரியலூர்: காஷ்மீரில் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர்களின் குடும்பத்தில் தலா ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
ஜம்மு- காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் ராணுவ வாகனத்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் படையினர் வீரமரணமடைந்தனர். இவர்களில் இருவர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.

அவர்கள் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த சிவச்சந்திரன் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் ஆவார். வீரமரணமடைந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ. 20 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஏற்கெனவே அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது அவர்களது குடும்பத்தில் தலா ஒருவருக்கு அரசு பணி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications