‘பப்ஜி' கேமால் சிதைந்த குடும்பம்.. தந்தை - அக்காளை கொன்ற இளைஞர்.. தாய் உயிருக்கு போராட்டம்
பெங்களூர்: கர்நாடகாவில் 'பப்ஜி' விளையாட்டால் மொத்த குடும்பமும் சிதைந்துள்ளது. 18 வயது நிரம்பிய இளைஞர் பப்ஜி கேமுக்கு அடிமையாகி இருந்ததோடு தனது தந்தை, அக்காளை கத்தியால் குத்தி கொன்றுள்ளார். அவரது தாய் கத்திக்குத்து காயங்களுடன் மருத்துவ சிகிச்சை பெற்று வரும் நிலையில் அந்த இளைஞரும் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

தற்போது சிறுவர்கள், இளைஞர்கள் செல்போனில் கேம் விளையாடுவது மற்றும் குறிப்பிட்ட சமூக வலைதளங்களை பயன்படுத்துவதற்கு அடிமையாகிவிடுகின்றனர். இந்நிலையில் தான் மிகவும் பிரபலமாக இருக்கும் 'பப்ஜி' கேமுக்கு அடிமையான இளைஞரால் அவரது மொத்த குடும்பமும் சிதைந்துள்ளது.
அப்படி என்ன நடந்தது? 'பப்ஜி' கேம் எப்படி ஒரு குடும்பத்தையே சிதைத்தது? என்பது பற்றி இங்கு பார்க்கலாம். கொப்பல் மாவட்டம் கங்காவதி தாலுகா அயோத்தி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடசாமி நாயுடு (வயது 45). இவருக்கு திருமணமாகி சவுஜன்யா(40), என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு பிரகதி(19) என்ற மகளும், வெங்கடமணி (18) என்ற மகனும் உள்ளனர்.
வெங்கடமணி கங்காவதியில் உள்ள பி.யூ. கல்லூரி ஒன்றில் படித்து வந்ததோடு 'பப்ஜி' விளையாட்டுக்கு அடிமையாகி இருந்தார். இதனை குடும்பத்தினர் கண்டித்து வந்தனர். ஆனால் வெங்கடமணி தனது நிலைப்பாட்டை மாற்றி கொள்ளவில்லை. காலை எழுந்தவுடன் பப்ஜி விளையாடுவது, மாலையில் கல்லூரி முடிந்து வந்தவுடன் 'பப்ஜி' விளையாடுவது என்று அந்த 'கேமுக்கு' அடிமையாகி இருந்தார்.
நேற்று இரவு 9 மணியளவில் குடும்பத்தினர் அனைவரும் சாப்பிட்டு விட்டு தூங்கினர். திடீரென இரவு 10 மணியளவில் வெங்கடசாமி நாயுடு மற்றும் அவரது மனைவி, மகள் உள்ளிட்டோர் அலறும் சத்தம் கேட்டது. அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தனர். வீட்டில் வெங்கடசாமி நாயுடு, அவரது மனைவி சவுஜன்யா, மகள் பிரகதி ஆகியோர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்தனர். வெங்கடமணி கையில் கத்தியுடன் நின்றதோடு, அவர் தன்னை தானே குத்தி கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்தவர்கள் 4 பேரையும் மீட்பு கொப்பல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வெங்கடசாமி நாயுடு மற்றும் அவரது மகள் பிரகதி ஆகியோர் இறந்தனர். வெங்கடமணிக்கும், அவரது தாய் சவுஜன்யாவுக்கு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுபற்றி போலீசார் விசாரித்தனர். அப்போது 'பப்ஜி' விளையாட்டுக்கு அடிமையான வெங்கடமணி, தொடர்ந்து அதில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். அதை குடும்பத்தினர் கண்டித்துள்ளனர். நேற்று இரவும் இதுதொடர்பாக அவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் 3 பேரையும் கொன்றுவிட்டு தற்கொலை செய்ய திட்டமிட்டார். அதன்படி தந்தை, அக்காவை கொன்றார். தாய் கத்திக்குத்து காயங்களுடன் சிகிச்சையில் உள்ளதோடு, வெங்கடமணியும் தற்கொலைக்கு முயன்று சிகிச்சை பெற்று வருவது தெரியவந்துள்ளது.
-
டிகே சிவக்குமாருக்கு அடுத்த ஷாக்.. ராமலிங்க ரெட்டியை தொடர்ந்து இன்னொரு அமைச்சர் ராஜினாமா? கர்நாடகாவில் குழப்பம் -
பெங்களூர் நகர வளர்ச்சி துறை அமைச்சர் யார் தெரியுமா? கர்நாடக அமைச்சர்களின் இலாகா விவரம் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications