செல்போன் சார்ஜ் போடுறீங்களா? இந்த தவறை மட்டும் செய்யாதீங்க.. பெங்களூரில் இளைஞரின் உயிரே போச்சு
பெங்களூர்: நாம் அனைவரும் செல்போனை அடிக்கடி சார்ஜ் செய்யும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் உயிருக்கே ஆபத்து ஏற்படலாம். ஏனென்றால் பெங்களூரில் 24 வயது இளைஞர் செல்போனை சார்ஜ் செய்தபோது பலியாகி உள்ளார்.
கர்நாடகாவின் பீதரை மாவட்டத்தை சேர்ந்தவர் சீனிவாஸ் (வயது 24). இவருக்கு ஐடி நிறுவனத்தில் பணியாற்ற வேண்டும் என்பது தான் கனவாக உள்ளது. இதனால் சீனிவாஸ் சொந்த ஊரை விட்டு பெங்களூர் வந்தார்.

பெங்களூரில் உள்ள கோச்சிங் மையத்தில் ஐடி பணிக்கான திறமையை வளர்த்து கொள்ளும் வகையில் புதிய கோர்ஸ்களை படித்தார். சீனிவாஸ் பெங்களூர் ராஜாஜி நகர் அருகே மஞ்சுநாத் நகரில் உள்ள பிஜியில் தங்கி படித்து வந்தார்.
இந்நிலையில் தான் நேற்று இரவு 8 மணிக்கு சீனிவாஸ் தனது செல்போனை எடுத்து சார்ஜ் போட சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதனால் அவர் மயங்கினார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அதோடு அவர் மின்சாரம் தாக்கி இறந்ததாக தெரிவித்தனர்.
இருப்பினும் சீனிவாஸ் மீது எப்படி மின்சாரம் பாய்ந்தது? என்பது தெரியவில்லை. ஸ்விட்ச்சில் இருந்து மின்சாரம் பாய்ந்ததா? இல்லாவிட்டால் அவரது சார்ஜரில் இருந்து மின்சாரம் பாய்ந்ததா? என்பது தெரியவில்லை. இருப்பினும் ஸ்விட்சை அவர் ‛ஆன்' செய்து சார்ஜ் செய்தது தான் அவரது உயிரிழப்புக்கு காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதுபற்றிய புகாரின் பேரில் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
இதனால் வீட்டில் செல்போன், லேப்டாப்களை சார்ஜ் செய்யும்போதும் சரி, பிற மின்சாதன உபகரணங்களை பயன்படுத்தும்போதும் சரி மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் பயன்படுத்த வேண்டும். ஏனென்றால் சிறு தவறும் கூட உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம். ஏனென்றால் இப்படியான சம்பவம் நடப்பது இது முதல் முறையல்ல. தமிழகத்திலும் இதற்கு முன்பு பல சம்பவங்கள் நடந்துள்ளது.
அதாவது கடந்த மே மாதம் இறுதியில் சென்னையில் லேப்டாப் சார்ஜ் செய்தபோது பெண் டாக்டர் பலியானார். அதாவது கோவையில் இருந்து சென்னைக்கு பயிற்சிக்கு வந்த பெண் மருத்துவர் சரணிதா தனது லேப்டாப்பில் சார்ஜ் போடும்போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். அதன்பிறகு கடந்த மாதம் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சொக்கநாதன் புத்தூர் கிராமத்தில் செந்திமயில் என்ற பெண் தனது லேப்டாப்பை சார்ஜ் செய்தார். அப்போது மின்சாரம் தாக்கி அவரும் பலியானார். இதனால் தான் செல்போன், லேப்டாப் சார்ஜ் செய்யும்போது அதிக கவனத்துடன் இருக்க வேண்டும் என்பது முக்கியமானதாகும்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications