Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விமான பணிப்பெண் பலாத்காரம்.. பெங்களூர் 5 ஸ்டார் ஹோட்டலில் வக்கிரத்தை காட்டிய 60 வயது பைலட்.. ஷாக்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பெங்களூரில் 60 வயது நிரம்பிய விமானி ஒருவர் 26 வயது விமான பணிப்பெண்ணை ஹோட்டலில் வைத்து கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்த திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

விமான பயணங்களின்போது விமானப்பணிப்பெண்களுக்கு விமானிகளும், உடன் பயணிக்கும் பயணிகளுக்கும் தான் பாதுகாப்பு தர வேண்டும். ஆனால் பெங்களூரில் 26 வயது விமான பணிப்பெண்ணை ஏமாற்றி கட்டாயப்படுத்தி 60 வயது நிரம்பிய விமானி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த திடுக்கிட வைக்கும் தகவல் பற்றிய விவரம் வருமாறு:

26-year-cabin-crew-woman-raped-by-pilot-in-bengaluru-and-case-registered

நவம்பர்18 ம் தேதி ஆந்திர பிரேதச மாநிலம் புட்டபர்தியில் இருந்து பெங்களூருவுக்கு ‛சார்ட்டர்' விமானம் வந்தது. இந்த விமானத்தில் ரோகித் சரண் என்பவர் விமானியாக இருந்தார். அவருக்கு வயது 60. இந்த விமானத்தில் 26 வயது இளம்பெண் பணிப்பெண்ணாக இருந்தார்.

பெங்களூர் வந்தவுடன் அவர்களால் மீண்டும் உடனடியாக புறப்பட முடியவில்லை. நவம்பர் 19 ம் தேதி தான் அவர்களின் விமானம் ‛புக்' செய்யப்பட்டு இருந்தது. இதனால் ரோகித் சரண், விமான பணிப்பெண் ஆகியோர் ஹோட்டலில் தங்கியிருந்தனர். ரோகித் சரண் 5 ஸ்டார் ஹோட்டலில் அறையில் நவம்பர் 18 ம் தேதி தங்கினர்.

இரவில் ரோகித் சரண், விமான பணிப்பெண்ணும் சந்தித்தனர். அப்போது சிகரெட் புகைத்த பைலட் ரோகித் சரண், விமான பணிப்பெண்ணுடன் பேசியபடி தனது ஹோட்டல் அருகே அழைத்து சென்றார். அதன்பிறகு தனது அறைக்கு வரும்படி கூறியுள்ளார். விமான பணிப்பெண் மறுத்துள்ளார். ஆனால் பைலட் ரோகித் சரண் விடவில்லை.

விமான பணிப்பெண்ணை கட்டாயப்படுத்தி தனது அறைக்கு அழைத்த சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளாரதாக கூறப்படுகிறது. விமான பணிப்பெண் எவ்வளவு கெஞ்சியும் அவரை விமானி ரோகித் சரண் விடவில்லை. அதன்பிறகு மறுநாளான நவம்பர் 29 ம் தேதி அவர்களின் விமானம் மீண்டும் ஹைதராபாத்தில் உள்ள பேகும்பேட்டைக்கு சென்றது.

அங்கு சென்றவுடன் பாதிக்கப்பட்ட பணிப்பெண் பேகும்பேட்டை போலீசில் புகார் செய்தார். அங்கு ஜீரோ எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. பைலட் ரோகித் சரண் மீது பிஎன்எஸ் சட்டப்பிரிவு 63ல்(பலாத்காரம்) வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதோடு சம்பவம் நடந்த இடம் பெங்களூர் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதி என்பதால் வழக்கு ஹலசூருக்கு மாற்றப்பட்டது. தற்போது ஹலசூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+