Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மனைவியை மறைத்து.. இளம்பெண்ணுடன் உல்லாசம்.. ரூ.20 லட்சம்+ 200 கிராம் நகை + தங்கையையும் விடாத இளைஞர்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: தனக்கு மனைவி இருப்பதை மறைத்து பெங்களூர் அருகே திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி மைனர் பெண்ணை பலாத்காரம் செய்த இளைஞர், அந்த பெண்ணின் அக்காவுடன் ‛லிவ் இன் ரிலேஷன்ஷிப்'பில் உல்லாசமாக இருந்துள்ளார். மேலும் ரூ.20 லட்சம் ரொக்கம் மற்றும் 200 கிராம் தங்க நகைகளை ‛அபேஸ்' செய்தார். இதுபற்றிய புகாரில் தற்போது அந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ள நிலையில் பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.

பெங்களூரில் வசித்து வருபவர் சுபம் சுக்லா. இவருக்கு வயது 29. இவருக்கும் பெங்களூர் புறநகர் மாவட்டம் நெலமங்களாவை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறி உள்ளது.

29-year-old-married-man-arrested-after-charges-of-alleged-cheating-sexual-exploitation-with-live-in

சுபம் சுக்லா, திருமணம் செய்து கொள்வதாக இளம்பெண்ணிடம் கூறியுள்ளார். மேலும் வீட்டை விட்டு வெளியேறி தன்னுடன் சேர்ந்து சிறிது காலம் வாழ வேண்டும் என்றும், அதன்பிறகு இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார்.

இதையடுத்து அந்த இளம்பெண் தனது குடும்பத்தினரிடம் வேலைக்காக மும்பை செல்வதாக கூறி வீட்டை விட்டு கிளம்பினார். ஆனால் அவர் மும்பை செல்லவில்லை. பெங்களூரில் சுபம் சுக்லாவுடன் வீடு எடுத்து தங்கினார். இருவரும் திருமணம் செய்யாமல் 3 ஆண்டுகள் வரை கணவன் - மனைவி போல் வாழ்ந்தனர்.

இந்த சமயத்தில் அவ்வப்போது வெவ்வேறு காரணத்தை கூறி சுபம் சுக்லா, அந்த பெண்ணிடம் இருந்து நகை, பணத்தை வாங்கி உள்ளார். மொத்தமாக ரூ.20 லட்சம் ரொக்கம் மற்றும் 200 கிராம் தங்க நகையை சுபம் சுக்லா வாங்கியிருந்தார். இதற்கிடையே தான் சுபம் சுக்லா அவரை ஏமாற்றியது தெரியவந்தது.

சுபம் சுக்லாவிற்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி இருப்பதை அந்த இளம்பெண் கண்டுபிடித்தது. இதுபற்றி கேள்வி கேட்டு அவர் பிரச்சனை செய்தார். அதற்கு சுபம் சுக்லா, மனைவியை விவாகரத்து செய்துவிட்டு திருமணம் செய்வதாக கூறினார். இதனால் இளம்பெண் மீண்டும் அவரை ஏற்றுக்கொண்டுள்ளார்.

ஆனால் சுபம் சுக்லா, தனது மனைவியை கைவிடாமல் தொடர்ந்து இளம்பெண்ணை ஏமாற்றி உல்லாசம் அனுபவிததுள்ளார். இதனால் மோசடியை அறிந்த இளம்பெண் சுபம் சுக்லா மீது போலீசில் புகார் செய்தார். மனைவி இருப்பதை மறைத்து திருமண ஆசைகாட்டி ரூ.20 லட்சம் ரொக்கம் மற்றும் 200 கிராம் நகையை பறித்து கொண்டதாகவும், லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் ஏமாற்றியதாகவும் புகார் அளித்தார்.

அதுமட்டுமின்றி அந்த பெண்ணின் சகோதரியான மைனர் பெண்யையும் ஏமாற்றி சுபம் சுக்லா பலாத்காரம் செய்ததும் தெரியவந்தது. இந்த புகாரின் பேரில் பாகலகுண்டே போலீசார் வழக்குப்பதிவு செய்து சுபம் சுக்லாவை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+