மனைவியை மறைத்து.. இளம்பெண்ணுடன் உல்லாசம்.. ரூ.20 லட்சம்+ 200 கிராம் நகை + தங்கையையும் விடாத இளைஞர்
பெங்களூர்: தனக்கு மனைவி இருப்பதை மறைத்து பெங்களூர் அருகே திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி மைனர் பெண்ணை பலாத்காரம் செய்த இளைஞர், அந்த பெண்ணின் அக்காவுடன் ‛லிவ் இன் ரிலேஷன்ஷிப்'பில் உல்லாசமாக இருந்துள்ளார். மேலும் ரூ.20 லட்சம் ரொக்கம் மற்றும் 200 கிராம் தங்க நகைகளை ‛அபேஸ்' செய்தார். இதுபற்றிய புகாரில் தற்போது அந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ள நிலையில் பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.
பெங்களூரில் வசித்து வருபவர் சுபம் சுக்லா. இவருக்கு வயது 29. இவருக்கும் பெங்களூர் புறநகர் மாவட்டம் நெலமங்களாவை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறி உள்ளது.

சுபம் சுக்லா, திருமணம் செய்து கொள்வதாக இளம்பெண்ணிடம் கூறியுள்ளார். மேலும் வீட்டை விட்டு வெளியேறி தன்னுடன் சேர்ந்து சிறிது காலம் வாழ வேண்டும் என்றும், அதன்பிறகு இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார்.
இதையடுத்து அந்த இளம்பெண் தனது குடும்பத்தினரிடம் வேலைக்காக மும்பை செல்வதாக கூறி வீட்டை விட்டு கிளம்பினார். ஆனால் அவர் மும்பை செல்லவில்லை. பெங்களூரில் சுபம் சுக்லாவுடன் வீடு எடுத்து தங்கினார். இருவரும் திருமணம் செய்யாமல் 3 ஆண்டுகள் வரை கணவன் - மனைவி போல் வாழ்ந்தனர்.
இந்த சமயத்தில் அவ்வப்போது வெவ்வேறு காரணத்தை கூறி சுபம் சுக்லா, அந்த பெண்ணிடம் இருந்து நகை, பணத்தை வாங்கி உள்ளார். மொத்தமாக ரூ.20 லட்சம் ரொக்கம் மற்றும் 200 கிராம் தங்க நகையை சுபம் சுக்லா வாங்கியிருந்தார். இதற்கிடையே தான் சுபம் சுக்லா அவரை ஏமாற்றியது தெரியவந்தது.
சுபம் சுக்லாவிற்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி இருப்பதை அந்த இளம்பெண் கண்டுபிடித்தது. இதுபற்றி கேள்வி கேட்டு அவர் பிரச்சனை செய்தார். அதற்கு சுபம் சுக்லா, மனைவியை விவாகரத்து செய்துவிட்டு திருமணம் செய்வதாக கூறினார். இதனால் இளம்பெண் மீண்டும் அவரை ஏற்றுக்கொண்டுள்ளார்.
ஆனால் சுபம் சுக்லா, தனது மனைவியை கைவிடாமல் தொடர்ந்து இளம்பெண்ணை ஏமாற்றி உல்லாசம் அனுபவிததுள்ளார். இதனால் மோசடியை அறிந்த இளம்பெண் சுபம் சுக்லா மீது போலீசில் புகார் செய்தார். மனைவி இருப்பதை மறைத்து திருமண ஆசைகாட்டி ரூ.20 லட்சம் ரொக்கம் மற்றும் 200 கிராம் நகையை பறித்து கொண்டதாகவும், லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் ஏமாற்றியதாகவும் புகார் அளித்தார்.
அதுமட்டுமின்றி அந்த பெண்ணின் சகோதரியான மைனர் பெண்யையும் ஏமாற்றி சுபம் சுக்லா பலாத்காரம் செய்ததும் தெரியவந்தது. இந்த புகாரின் பேரில் பாகலகுண்டே போலீசார் வழக்குப்பதிவு செய்து சுபம் சுக்லாவை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
-
IPL 2026: அடேங்கப்பா..! ஐபிஎல் பரிசுத்தொகை எவ்வளவு? வைபவ் சூர்யவன்ஷி காட்டில் கொட்டிய பணமழை! -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
நள்ளிரவில் ஜொலிக்கும் பெங்களூர்.. RCB வெற்றியால் ரசிகர்கள் செய்த சம்பவம்.. இந்த வீடியோ பாருங்க -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications