Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெங்களூரில் மாடல் அழகியை பார்த்ததும்.. டெலிவரிபாய் செய்த செயல்.. அடச்சீ.. அதிரடி கைது

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பெங்களூரில் உள்ள அப்பார்ட்மென்ட்டுக்கு மளிகை பொருட்களை கொடுக்க போன டெலிவரி பாய் பிரேசில் மாடல் அழகி தனியாக இருப்பதை பார்த்து அத்துமீறி பாலியல் தொல்லை கொடுத்தார். உடனடியாக சுதாரித்த மாடல் அழகி அவரை வெளியே தள்ளி கதவை பூட்டிய நிலையில் தற்போது டெலிவரி பாய் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெங்களூரில் வசித்து வருபவர் குமார் ராவ் பவார். இவருக்கு வயது 22. தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். கல்லூரி படிப்புக்கு நடுவே அவர்‛பார்ட் டைம்' முறையில்‛பிளிங்கிட்' நிறுவனத்தில் டெலிவரி பாயாக பணியாற்றி வருகிறார்.

a-blinkit-devlivery-agent-arrested-in-bengaluru-for-sexually-harassing-a-brazil-model-woman

அதேபோல் பிரேசில் நாட்டை சேர்ந்தவர் 22 வயது இளம்பெண். இவர் மாடல் அழகியாக உள்ளார். பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனம் சார்ந்த விளம்பரத்துக்காக அவர் வந்துள்ளார்.

கடந்த 2 மாதங்களாக பிரேசில் மாடல் அழகி பெங்களூரில் தங்கி உள்ளார். தனியார் நிறுவனம் சார்பில் அவருக்கு சுல்தான்பாளையாவில் வீடு ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டுள்ளது. அங்கு பிரேசில் மாடல் அழகியுடன் மேலும் 2 மாடல் அழகிகள் தங்கி உள்ளனர். கடந்த 17 ம்தேதி பிரேசில் மாடல் அழகி ‛பிளிங்கிட்' ஆன்லைன் டெலிவரி நிறுவனத்தில் மளிகை பொருட்களை ஆர்டர் செய்தார். பிற்பகல் 3.30 மணிக்கு மளிகை பொருட்களை எடுத்து கொண்டு குமார் ராவ் பவார் முதல் தளத்தில் உள்ள அவரது இல்லத்துக்கு சென்றார்.

வீட்டின் முன்பு உள்ள ‛காலிங்பெல்லை' அடித்தார். பிரேசில் மாடல் அழகி கதவை திறந்தார். அப்போது மாடல் அழகியிடம் அவர் தவறாக நடந்து கொண்டார். பொருட்களை அவரிடம் கொடுப்பது போல் தொடக்கூடாத இடங்களை தொட்டு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பிரேசில் மாடல் அழகி அவரை அங்கிருந்து வெளியே தள்ளி உடனடியாக கதவை பூட்டினார்.

இருப்பினும் பாதுகாப்பு கருதி பிரேசில் மாடல் அழகி போலீசில் புகார் கொடுக்கவில்லை. போலீசில் புகார் கொடுத்தால் ஏதாவது பிரச்சனை வருமோ என்ற அச்சத்தில் அவர் யோசித்து கொண்டிருந்தார். அதன்பிறகு அவர் சம்பவம் குறித்து தன்னுடன் தங்கியுள்ள மாடல் அழகிகளிடம் கூறினார். இதுதொடர்பக ஆர்டி நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது.

போலீசார் கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அதில் ‛டெலிவரி பாயின்' உருவம் பதிவாகி இருந்தது. அதனை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில் டெலிவரி பாய் குமார் ராவ் பவானை அதிரடியாக கைது செய்தனர். அதன்பிறகு அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைத்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+