மேரேஜூக்கு "நோ" சொன்ன காதலி.. நடுரோட்டில்.. பட்ட பகலில் காதலன் செய்த சம்பவம்.. கர்நாடகாவில் ஷாக்
பெங்களூர்: கர்நாடகா மாநிலத்தில் திருமணத்திற்கு சம்மதிக்காத காதலியை நடுரோட்டில் வைத்து பட்டப்பகலில் படுகொலை செய்த காதலனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தையடுத்து காதலன் தற்கொலைக்கு முயன்றதால் அவரை காவல்துறையினர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
கர்நாடகாவின் தாவாங்கரேவை சேர்ந்தவர் சந்த் பீர். இவர் அதே பகுதியை சேர்ந்த 28 வயதான சந்த் சுல்தானா எனும் இளம்பெண்ணுடன் நட்பாக பழகி வந்துள்ளார்.
இதனையடுத்து, இருவரும் நீண்ட நாட்கள் ஒன்றாக பழகி ஒருவரையொருவர் புரிந்துகொண்டுள்ளனர். அப்போதுதான் சந்த் பீர், சுல்தானாவை காதலிப்பதாக கூறியுள்ளார்.

காதல்
இதற்கு சுல்தானாவும் சம்மதித்துள்ளார். இருவரும் கடந்த ஒரு சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்த காதலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல திட்டமிட்டு முதலில் விஷயத்தை சந்த் பீர் வீட்டில் கூறியுள்ளனர். இவர்களது வீட்டில் பெரிய அளவுக்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. எனவே மிகுந்த நம்பிக்கையுடன் சுல்தானா வீட்டில் தெரிவித்துள்ளனர். ஆனால் இங்குதான் பிரச்னை வெடித்திருக்கிறது. இவர்களின் திருமணத்திற்கு சுல்தானா குடும்பத்தினர் சம்மதிக்கவில்லை. பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் தலைதூக்கியுள்ளன. சந்த் பீர் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு பொருளாதார வசதி படைத்த குடும்பத்தை சேர்ந்தவர் கிடையாது.

பொருளாதாரம்
ஆனால் சுல்தானா குடும்பத்தினர் நடுத்தர வர்கத்தை சேர்ந்தவராவார்கள். எனவேதான் திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இந்நிலையில் காதலை முறித்துக்கொள்வோம் என்று சுல்தானா, சந்த்திடம் கூறியுள்ளார். இதற்கு சந்த் பீர் ஒப்புக்கெளாள்வில்லை. இது குறித்து பேசும்போதெல்லாம் சண்டைதான் வெடித்திருக்கிறது. ஒவ்வொரு முறையும் சண்டை போடுவதும் பின்னர் சமாதானம் ஆவதும் என இருந்து வந்துள்ளனர். ஆனால் எப்படி இருந்தாலும் கடைசி வரை சுல்தானா திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளவேயில்லை.

நிச்சயம்
இதற்கிடையில் சுல்தானாவுக்கு அயூப் எனும் நபருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் கேள்விப்பட்ட சந்த் பீர், சுல்லாதானவிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஆனால் இதுதான் தனது கடைசி சண்டை என சுல்தானாவுக்கு தெரிந்திருக்கவில்லை. இந்த சண்டை நடந்து இரண்டு நாட்கள் ஆன நிலையில் சந்த் பீர் பலமுறை சுல்தானாவை செல்போனில் அழைத்துள்ளார். ஆனால் சுல்தானா இதனை கண்டுக்கொள்ளவில்லை. பின்னர் நேற்று வேறு வழியின்றி எடுத்து பேசி இருக்கிறார். அப்போது உருக்கமாக பேசிய சந்த் பீர் "நீ சொன்னது சரிதான். நாம் பிரிந்துவிடலாம். ஆனால் கடைசியாக ஒருமுறை உன்னை வந்து பார்த்துவிட்டு போகிறேன். இனி உன்னை பார்க்க மாட்டேன்" என்று கூறியுள்ளார்.

கடைசி சந்திப்பு
இதனை நம்பி தாவாங்கரேவில் தான் பணி செய்யும் விடுத்திக்கு சுல்தானா அழைத்துள்ளார். அங்கு வந்த சந்த் பீர் கண்ணீர் மல்க பேசிக்கொண்டிருக்கையில் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சரமாரியாக அவரை தாக்கியுள்ளார். இதில் சுல்தானா சம்பவ இடத்திலேயே சரிந்துள்ளார். அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர். இதனை கண்டு சுதாரித்துக்கொண்ட சந்த் பீர் உடனே அங்கிருந்து சென்றுவிட்டார். சுல்தானாவின் நிலையை கண்டு அம்புலன்ஸ்க்கு பொதுமக்கள் போன் செய்துள்ளனர். ஆனால் மருத்துவர்கள் வந்து பார்ப்பதற்குள் சுல்தானா இறந்துவிட்டார்.

கைது
சம்பவம் குறித்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் சந்த் பீரை அடையாளம் கண்டனர். எனவே உடனடியாக அவரை தேடி புறப்பட்டனர். ஆனால் சந்த் பீர் அவரது வீட்டில் இல்லை. எனவே அவரின் நண்பர்களிடத்தில் விசாரித்து தேடி பிடித்து சந்த் பீரை கைது செய்தனர். ஆனால் அங்குதான் ஒரு அதிர்ச்சி காத்திருந்திருக்கிறது. அதாவது சந்த் பீர் இந்த சோகம் தாங்காமல் விஷம் குடித்துள்ளார். எனவே அவரை காவலர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததால் காதலியை இளைஞர் ஒருவர் கொலை செய்துள்ள சம்பவம் கர்நாடகாவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications