ஓட்டு போட்டதுமே பிரசவ வலி.. வாக்குச்சாவடியிலேயே குழந்தை பெற்றெடுத்த கர்ப்பிணி பெண்.. அடடே!
பெங்களூர் : கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற்ற நிலையில், பெல்லாரி தொகுதியில் கோர்லகண்டி கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க வந்த கர்ப்பிணிப் பெண் ஆண் குழந்தையைப் பிரசவித்தார். அப்பெண் வாக்களித்ததும் பிரசவ வலி ஏற்பட்டதையடுத்டு உடனே தனி அறைக்கு கொண்டு சென்று அங்குள்ள பெண்கள் பிரசவம் பார்த்தனர்.
224 தொகுதிகள் கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் முடிவடைந்தது. விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், கர்நாடகாவில் 72.67% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பதிவான வாக்குகள் வரும் 13-ஆம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும். கர்நாடகா தேர்தலில் ஆளும் பாஜக - காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதாதளம் ஆகிய கட்சிகள் களத்தில் உள்ளதால் அங்கு மும்முனை போட்டி நிலவுகிறது. அங்கு ஆட்சியை பிடிக்கப் போவது என்பது வரும் 13-ஆம் தேதி தெரிந்துவிடும்.
இந்த நிலையில், இன்று கர்நாடகாவில் வாக்குப்பதிவின்போது பெல்லாரி மாவட்டத்தில் கோர்லகண்டி கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடி வளாகத்தில் பெண் ஒருவர் குழந்தையைப் பெற்றெடுத்தார். வாக்குச் சாவடி எண் 228ல் மணிலா என்ற நிறைமாத கர்ப்பிணி தனது வாக்கை செலுத்துவதற்காக வந்திருந்தார்.
அவர் வாக்களித்த பின்னர், வாக்குச் சாவடியிலேயே அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. உடனே பக்கத்து அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கிருந்த பெண்கள் பிரசவம் பார்த்தனர். அங்கு அப்பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது, தாயும் குழந்தையும் நலமாக உள்ளனர். பின்னர் அந்தப் பெண் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மாற்றப்பட்டார். இந்நிகழ்வு அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
-
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
புதுச்சேரியில் அமைச்சர்கள் நியமனம்.. முதல்வர் ரங்கசாமியுடன் கருத்து வேறுபாடு? நமச்சிவாயம் விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு












Click it and Unblock the Notifications