காலையிலேயே டென்ஷன்.. முதல்வர் பசவராஜ் பொம்மையின் வீட்டை சூழ்ந்த போலீஸ்.. ஒரே பரபரப்பு
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. இந்நிலையில் காலையிலேயே முதல்வர் பசவராஜ் பொம்மையின் வீட்டை போலீசார் சூழ்ந்ததால் டென்ஷனான சூழல் ஏற்பட்டது. இதுதொடர்பான பரபரப்பு தகவல் வருமாறு:
கர்நாடகாவில் உள்ள 224 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. மொத்தம் 73.19 சதவீத வாக்குகள் பதிவாகின. இநு்த ஓட்டுகள் இன்று எண்ணப்படுகின்றன. மொத்தம் 36 மையங்களில் காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.

கருத்து கணிப்புகளின் படி இந்த தேர்தலில் பாஜகவை விட காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சியினர் உற்சாகத்தில் உள்ளனர். மாறாக பாஜகவுக்கு பின்னடைவு ஏற்படும் எனவும், ஆட்சியை கூட இழக்கும் சூழல் வரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் முதல்வர் பசவராஜ் பொம்மை உள்பட பாஜக தலைவர்கள் கலக்கத்தில் உள்ளனர். இருப்பினும் கூட கர்நாடகா சட்டசபை தேர்தலில் பாஜக தனி மெஜாரிட்டி பெற்று ஆட்சியை தக்கவைக்கும் என பாஜக தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும் ஒருவேளை யாருக்கும் ஆட்சி அமைக்க தேவையான 113 இடங்கள் கிடைக்காவிட்டால் அடுத்ததாக என்ன செய்ய வேண்டும் என எடியூரப்பாவுடன், பசவராஜ் பொம்மை தீவிரமாக ஆலோசனை மேற்கொண்டார்.

இந்நிலையில் தான் இன்று காலையில் தார்வார் மாவட்டம் உப்பள்ளியில் அமைந்துள்ள முதல்வர் பசவராஜ் பொம்மையின் வீட்டை திடீரென போலீசார் சூழ்ந்தனர். இதனால் பரபரப்பான சூழல் உருவானது. அதாவது தேர்தல் ஓட்டு எண்ணிக்கையையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவரது வீட்டில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
மேலும் மோப்பநாய் மோப்பம் பிடித்தது. தேர்தலில் ரிசல்ட் நெகட்டிவ்வாக வந்தாலும் அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில் அவரது வீட்டில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் உப்பள்ளியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications