தினமும் 9 மணிநேரம் தூங்கியே.. ரூ.9.1 லட்சம் வென்ற புனே பெண்! நீங்களும் கலந்துக்கலாம்! ரூல்ஸ் இதுதான்
பெங்களூர்: பெங்களூரில் ‛ஸ்டார்ட்அப்' நிறுவனம் சார்பில் தூங்கும் சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டியில் 60 நாட்கள் தினமும் 9 மணிநேரம் தூங்கிய புனேவை சேர்ந்த பெண் முதல் பரிசாக ரூ.9.1 லட்சத்தை வென்றார். இப்போது 5வது சீசனுக்கான அப்ளிகேஷன் ஓபனாகி உள்ளது. விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்து போட்டியில் பங்கேற்கலாம். இந்த போட்டி குறித்த சுவாரசிய தகவல் வருமாறு:
ஒவ்வொருவருக்கும் தூக்கம் முக்கியம். தினமும் குறைந்தபட்சம் 8 மணிநேரமாவது நன்றாக தூங்க வேண்டும். ஆனால் தற்போதைய வாழ்க்கையில் நம்மில் பலரும் சரியாக தூங்குவது இல்லை. வேலைப்பளு, செல்போனை அதிகம் பயன்படுத்துதல் உள்ளிட்டவற்றால் பலரும் தூக்கத்தை தொலைத்து வருகின்றனர்.

இந்நிலையில் தான் தூக்கம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், தூக்கத்தை ஊக்கப்படுத்தும் விதமாகவும் பெங்களூருவைச் சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனம் தூங்கும் சாம்பியன்ஷிப் போட்டியை நடத்தி வருகிறது. இந்த போட்டியின் பெயர் ‛ஸ்லீப் சாம்பியன் ஆப் தி இயர்'. இதனை Wakefit மெத்தை நிறுவனம் நடத்தி வருகிறது. இந்த நிறுவனம் இந்த போட்டியை இன்டர்ன்ஷிப் போன்று நடத்தி வருகிறது.
இந்த ஆண்டு தூங்கும் சாம்பியன் போட்டி நடத்தப்பட்டது. 60 நாட்கள் தினமும் இரவில் 9 மணிநேரம் தொடர்ந்து தூங்கி புனேவை சேர்ந்த பூஜா மாதவ் வெற்றி பெற்றார். இவருக்கு முதல் பரிசாக ரூ.9.1 லட்சம் வழங்கப்பட்டது. பரிசு வென்ற பூஜா மாதவ் யுபிஎஸ்சி தேர்வுக்கு தயாராகி வருகிறார். ஐபிஎஸ் பணியில் சேர வேண்டும் என்ற ஆர்வத்தில் அவர் தேர்வுகளை எழுதி வருகிறார்.
இந்த wakefit நிறுவனம் கடந்த 2019 ம் ஆண்டு முதல் 3 சீசன்களை நடத்தி இருந்தது. தற்போது 4 வது சீசனையும் வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது. இந்த 4வது சீசனில் மொத்தம் 1 லட்சத்துக்கும் மேலான விண்ணப்பங்கள் வந்தன. அதில் 15 பேர் தேர்வு செய்யப்பட்டு தூங்கும் போட்டி நடத்தப்பட்டது.
ஒவ்வொரு நாள் இரவும் போட்டியாளர்கள் கண்விழிக்காமல் 9 மணிநேரம் வரை தூங்க வேண்டும். அவர்களின் தூக்கத்தின் தன்மையை கண்காணித்து மதிப்பெண் வழங்கப்பட்டது. அதில் பூஜா மாதவ் அதிக மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். பூஜா மாதவ் மொத்தம் 91.36 மதிப்பெண்கள் பெற்றார். அவருக்கு ரூ.9.1 லட்சம் பரிசு வழங்கப்பட்ட நிலையில் மற்றவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசாக வழங்கப்பட்டது.
தற்போது 5வது சீசனுக்கான அப்ளிகேஷன் ஓபன் செய்யப்பட்டுள்ளது.போட்டியின் ரூல்ஸ் என்னவென்றால் குறைந்தபட்சம் 22 வயது அல்லது அதைவிட கூடுதல் வயது இருக்க வேண்டும். ஒருவர் ஒரு விண்ணப்பம் மட்டுமே செய்ய முடியும். 2 அல்லது அதற்கு மேல் விண்ணப்பம் செய்தால் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள். சரியான தகவல்களை அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள். அப்ளிகேஷனை முழுவதுமாக நிரப்பினால் மட்டுமே தேர்வுக்கு எடுத்து கொள்ளலாம்.
தாமதமாக வரும் அப்ளிகேஷன் ஏற்கப்படாது. சீசன் 1, 2, 3, 4 சீசனில் பங்கேற்றவர்களுக்கு அனுமதி இல்லை. மேலும் விதிமுறையில் உள்ள கண்டிஷன்களுக்கு ஒப்புக்கொள்ள வேண்டும். இப்படி விண்ணப்பம் செய்வோர் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு போட்டிக்கு தேர்வு செய்யபப்படுவார்கள். போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் ரூ.1 லட்சம் பரிசுத்தொகை உறுதி என்பது குறிப்பிடத்தக்கது.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா? -
ஆண்டவரையே திகைக்க வைத்த அறிவாலயம்.. கமல்ஹாசன் எடுத்த கடைசி அஸ்திரம்! மநீம கூட்டத்தில் முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications