திடீர் பல்டி.. பந்த்துக்கு ஆதரவு இல்லை என கூறி பெங்களூரை அலறவிட்ட வாட்டாள் நாகராஜ்! போலீஸ் அதிரடி
பெங்களூர்: பெங்களூரில் இன்று பந்த் நடக்கும் நிலையில் அதற்கு ஆதரவு இல்லை என வாட்டாள் நாகராஜ் அறிவித்து இருந்தார். இந்நிலையில் திடீர் ட்விஸ்ட்டாக அவரும், அவரது ஆதரவு கன்னட அமைப்பினரும் பெங்களூர் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற நிலையில் குண்டுகட்டாக தூக்கி கைது செய்தனர்.
தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறப்பதை கண்டித்து பெங்களூரில் இன்று பந்த் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு வாட்டாள் நாகராஜ் தலைமையிலான கன்னட அமைப்பினர் ஆதரவு அளிக்கவில்லை. இவர்கள் தனியாக வரும் 29ம் தேதி மாநிலம் முழுவதும் பந்த் நடத்தப்பட உள்ளதாக கூறியுள்ளனர்.

29ம் தேதி சேர்ந்தே கர்நாடகா பந்த் நடத்துவதாக வாட்டாள் நாகராஜ் அழைப்பு விடுத்தார். ஆனால் பெங்களூர் பந்த் அறிவித்த கர்நாடகா ஜல ரக்சனே சமீதி மற்றும் விவசாய அமைப்பினர் அதற்கு உடன்படவில்லை. இதையடுத்து இன்றைய பெங்களூர் பந்த்துக்கு ஆதரவு இல்லை என வாட்டாள் நாகராஜ் அறிவித்து இருந்தார்.
மேலும் வாட்டாள் நாகராஜ் தலைமையில் நடக்கும் பந்த் என்பது மிகவும் ஆக்ரோஷமாக இருக்கும். கடைகள், தியேட்டர்கள் மூடப்படும். அதோடு போக்குவரத்து என்பது முற்றிலுமாக நிறுத்தப்படும் என்பதால் பெங்களூர் பந்த்துக்கு ஆதரவு வழங்கிய பல அமைப்பினர் திடீரென பின்வாங்கினர். இன்றைய பந்த் மற்றும் 29 ம் தேதி நடக்கும் பந்த் என 2க்கும் ஆதரவு அளித்தால் தொழிலில் நஷ்டம் ஏற்படும் என நஅவர்கள் நினைத்தனர்.
இதனால் சில அமைப்புகள் இன்றைய பந்த்துக்கு பதில் கர்நாடகா பந்த்துக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளனர். இதற்கிடையே தான் இன்ற திடீர் ட்விஸ்ட்டாக வாட்டாள் நாகராஜ் மற்றும் அவரது தலைமையிலான வெவ்வேறு கன்னட அமைப்பை சேர்ந்தவர்கள் பெங்களூரில் இன்று போராட்டம் நடத்தினர். பெங்களூர் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட அவர்கள் முயன்றனர்.
இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவர்களை தடுத்து நிறுத்தி அதிரடியாக கைது செய்தனர். இதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு போலீசாருக்கும், கன்னட அமைப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் முற்றவே வாட்டாள் நாகராஜ், சாரா கோவிந்த், பிரவீன் செட்டி உள்பட கன்னட அமைப்பை சேர்ந்த 100க்கும் அதிகமானவர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் பெங்களூரில் இன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications