திடீர் பல்டி.. பந்த்துக்கு ஆதரவு இல்லை என கூறி பெங்களூரை அலறவிட்ட வாட்டாள் நாகராஜ்! போலீஸ் அதிரடி
பெங்களூர்: பெங்களூரில் இன்று பந்த் நடக்கும் நிலையில் அதற்கு ஆதரவு இல்லை என வாட்டாள் நாகராஜ் அறிவித்து இருந்தார். இந்நிலையில் திடீர் ட்விஸ்ட்டாக அவரும், அவரது ஆதரவு கன்னட அமைப்பினரும் பெங்களூர் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற நிலையில் குண்டுகட்டாக தூக்கி கைது செய்தனர்.
தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறப்பதை கண்டித்து பெங்களூரில் இன்று பந்த் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு வாட்டாள் நாகராஜ் தலைமையிலான கன்னட அமைப்பினர் ஆதரவு அளிக்கவில்லை. இவர்கள் தனியாக வரும் 29ம் தேதி மாநிலம் முழுவதும் பந்த் நடத்தப்பட உள்ளதாக கூறியுள்ளனர்.

29ம் தேதி சேர்ந்தே கர்நாடகா பந்த் நடத்துவதாக வாட்டாள் நாகராஜ் அழைப்பு விடுத்தார். ஆனால் பெங்களூர் பந்த் அறிவித்த கர்நாடகா ஜல ரக்சனே சமீதி மற்றும் விவசாய அமைப்பினர் அதற்கு உடன்படவில்லை. இதையடுத்து இன்றைய பெங்களூர் பந்த்துக்கு ஆதரவு இல்லை என வாட்டாள் நாகராஜ் அறிவித்து இருந்தார்.
மேலும் வாட்டாள் நாகராஜ் தலைமையில் நடக்கும் பந்த் என்பது மிகவும் ஆக்ரோஷமாக இருக்கும். கடைகள், தியேட்டர்கள் மூடப்படும். அதோடு போக்குவரத்து என்பது முற்றிலுமாக நிறுத்தப்படும் என்பதால் பெங்களூர் பந்த்துக்கு ஆதரவு வழங்கிய பல அமைப்பினர் திடீரென பின்வாங்கினர். இன்றைய பந்த் மற்றும் 29 ம் தேதி நடக்கும் பந்த் என 2க்கும் ஆதரவு அளித்தால் தொழிலில் நஷ்டம் ஏற்படும் என நஅவர்கள் நினைத்தனர்.
இதனால் சில அமைப்புகள் இன்றைய பந்த்துக்கு பதில் கர்நாடகா பந்த்துக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளனர். இதற்கிடையே தான் இன்ற திடீர் ட்விஸ்ட்டாக வாட்டாள் நாகராஜ் மற்றும் அவரது தலைமையிலான வெவ்வேறு கன்னட அமைப்பை சேர்ந்தவர்கள் பெங்களூரில் இன்று போராட்டம் நடத்தினர். பெங்களூர் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட அவர்கள் முயன்றனர்.
இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவர்களை தடுத்து நிறுத்தி அதிரடியாக கைது செய்தனர். இதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு போலீசாருக்கும், கன்னட அமைப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் முற்றவே வாட்டாள் நாகராஜ், சாரா கோவிந்த், பிரவீன் செட்டி உள்பட கன்னட அமைப்பை சேர்ந்த 100க்கும் அதிகமானவர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் பெங்களூரில் இன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
விஜய்யுடன் சேர்ந்து முதல்வராக முயன்ற எடப்பாடி! நான்தான் முறியடித்தேன்.. போட்டு உடைத்த செங்கோட்டையன் -
பக்கத்திலேயே இருந்தும் கூட.. முகத்தை கூட பார்க்கவில்லை.. நோ சொன்ன ராகுல்.. கவனித்த ஸ்டாலின் -
மாதம் 1.2 கோடியா... இன்ஸ்டா அஸ்வினி அஷ் கல்லா கட்டுவது உண்மையா.. வாயை பிளக்கும் நெட்டிசன்கள் -
பிடிஆர் ஐ வீழ்த்த மதுரை மத்திய தொகுதியில் சுந்தர் சி வீசும் 1 மேஜர் அஸ்திரம்.. திமுகக்கு நெருக்கடி? -
3 மாநில சட்டசபை தேர்தல் LIVE: புதுச்சேரியில் மாலை 6 மணி நிலவரப்படி 89.2% வாக்குகள் பதிவு -
இன்னொரு சர்வேயும்.. கரெக்ட்டா இதையே சொல்லதே.. தவெக கட்சிக்கு தோல்வி.. அடித்து சொன்ன 4 கணிப்புகள்! -
ஈரான் வேலையை காட்டியது.. ஹார்முஸ்-ல் கப்பல் செல்ல அனுமதி மறுப்பு.. அமெரிக்கா ஷாக்! -
Durga Stalin: துர்கா என்னிடம் கோபித்துக் கொண்டு ஒரு வாரம் பேசலை! 5 ஆண்டு ரகசியத்தை உடைத்த ஸ்டாலின் -
இது இந்தியா இல்லை.. நேபாளத்தில் குட்கா போட்டு துப்பிய சுற்றுலா பயணிகளுக்கு மறக்க முடியாத சம்பவம் -
நிர்மலா சீதாராமன் கணவர் எடுத்த "ஜீரோ பிஜேபி" விஸ்வரூபம்.. 27 தொகுதிகளிலும் பாஜக காலி..? திடுக்கிட்ட தாமரை -
தவெக 4 - 6 சீட்களில் வெல்ல வாய்ப்பு.. 20% வாக்குகளை அள்ளக்கூடும்.. ABP Nadu கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
விஜய் இந்த தேர்தலில் ஆட்டக்காரர் தான்.. மே 4 தவெகவுக்கு பல பாடங்களை கற்பிக்கும்.. இயக்குநர் அமீர்!












Click it and Unblock the Notifications