பெங்களூர் நர்ஸ்.. 50 வயதில் தடுமாறிய கணவன்.. சுவரில் படிந்த மனைவியின் தலை.. பெங்களூரு புறநகரில் பரபர
பெங்களூர்: பெங்களூரு புறநகர் மாவட்டத்தில் நடந்த சம்பவம், அப்பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை தந்து கொண்டிருக்கிறது.. இது தொடர்பாக குற்றவாளியை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். என்ன நடந்தது?
கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் மாவட்டம், தொட்டபள்ளாப்புரா அருகே உள்ளது நெரலகட்டே என்ற கிராமம்.. இங்கு வசித்து வருபவர் லட்சுமணா.. இவருக்கு 50 வயதாகிறது.. இவரது மனைவி பெயர் ராதாம்மா.. 42 வயதாகிறது.. இந்த தம்பதிக்கு 2 மகன்கள்.. இதில், மூத்த மகன் உடம்பு சரியில்லாமல் இறந்து விட்டார்.

குடிகார கணவர்
லட்சுமணா கட்டிட தொழிலாளி ஆவார்... ராதாம்மா அங்குள்ள ஒரு மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து வருகிறார்.. லட்சுமணனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது.. தினமும் குடித்துவிட்டு, ராதாம்மாவுடன் தகராறு செய்வதையே வாடிக்கையாக வைத்திருந்துள்ளார்..
இப்படித்தான் நேற்று முன்தினமும் மூக்கு முட்ட குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த லட்சுமணா, ராதாம்மாவுடன் தகராறு செய்துள்ளார்.. பிறகு திடீரென்று ராதாம்மாவை கண்மூடித்தனமாக அடித்து தாக்க துவங்கினார்.. ஒருகட்டத்தில், ராதாம்மாவின் தலையை பிடித்து, சுவரில் வேகமாக முட்டியிருக்கிறார். இதில், மண்டை உடைந்து ரத்தம் கொட்டி, ராதாம்மா அதே இடத்தில் பரிதாபமாக இறந்து விட்டார்.
திரண்டு வந்த கிராம மக்கள்
போதை தெளிந்ததுமே, சடலத்தை பார்த்து பதறிப்போனார் லட்சுமணா.. இதனால், என்ன செய்வதென்றே தெரியாமல், ராதாம்மா வீட்டில் தவறி விழுந்து தலையில் காயமடைந்து இறந்து விட்டதாக உறவினர்களிடமும், கிராம மக்களிடமும் சொல்லி அழுதார்.. இதைக்கேட்டு மொத்த பேரும் திரண்டு வந்து ராதாம்மாவின் சடலத்தை பார்த்து கதறி அழுதனர்.. பிறகு ராதாம்மாவின் இறுதிச்சடங்குக்கான ஏற்பாடுகளும் துரிதமாக நடைபெற்றன.
ஆனால், அந்த நேரம் பார்த்து, தொட்டபள்ளாப்புரா புறநகர் போலீசாருக்கு, யாரோ ஒருநபர் போன் செய்து, லட்சுமணா தன்னுடைய மனைவியை கொலை செய்து விட்டதாகவும், போலீசாருக்கு தெரியாமல் இறுதிச்சடங்கு நடத்த முயற்சிப்பதாகவும் தகவல் தந்துள்ளார்.
அவசர அவசரமாக இறுதிச்சடங்கு
இதனால் போலீசார், நெரலகட்டே கிராமத்திற்கே நேரடியாக கிளம்பி வந்தனர்.. லட்சுமணாவிடம், மனைவி இறந்தது குறித்து கேட்டனர். அப்போதும், கீழே விழுந்து இறந்துவிட்டார் என்று சொன்னார். இதற்கு பிறகுதான், போலீசார் தங்கள் பாணியில் விசாரித்தபோது மனைவியை கொன்றுவிட்டதாக உண்மையை ஒப்புக் கொண்டார்..
அதாவது, ராதாம்மாவின் நடத்தை மீது ஆரம்பத்திலிருந்தே லட்சுமணாவுக்கு சந்தேகம் இருந்து வந்துள்ளது.. எப்போதுமே மனைவியை சந்தேகப்பட்டு கொண்டேயிருப்பாராம்..
பரபர வாக்குமூலம்
குடும்ப சூழலுக்காக, தனியார் மருத்துவமனையில் ராதாம்மா நர்சாக இருந்ததால், இந்த சந்தேகம் கணவனுக்கு அதிகமாகியிருக்கிறது.. இதனால் தினந்தோறும், ராதாம்மாவை சந்தேகப்பட்டு, குடிபோதையில் அடித்து உதைத்து வந்துள்ளார். சம்பவத்தன்று, தகராறு அதிகமாகி, ராதாம்மாவின் தலையை பிடித்து சுவற்றில் மோதியதில் இறந்துவிட்டதாக போலீசில் வாக்குமூலம் தந்துள்ளார் லட்சுமணா.
இதனிடையே, தன்னுடைய மூத்த மகன் இறந்த பிறகு, ராதாம்மாவும் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டதாக அந்த கிராம மக்கள் சொல்கிறார்கள். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, கைதான லட்சுமணாவிடம் தொடர்ந்து விசாரித்து கொண்டிருக்கிறார்கள்.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications