நடிகர் தர்ஷன் ரசிகர்களால் தொல்லை.. போலீஸ் ஸ்டேஷனையே துணிபோட்டு மூடிய போலீஸ்! பரபர பெங்களூர்
பெங்களூர்: பெங்களூரில் நடிகர் தர்ஷனின் ரசிகர்களின் தொடர் தொல்லையால் அவர்களை போலீசார் விரட்டியடித்து வரும் நிலையில் தற்போது போலீஸ் ஸ்டேஷனையே துணிபோட்டு மூடியுள்ளனர்.
கன்னட திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தர்ஷன். இவரும் நடிகை பவித்ரா கவுடாவும் நண்பர்கள். இந்நிலையில் தான் பவித்ரா கவுடாவுக்கு இன்ஸ்டாகிராமில் சித்ரதுர்காவை சேர்ந்த 33 வயது நிரம்பிய ரேணுகாசாமி என்பவர் ஆபாசமாக மெசேஜ் அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது. அதோடு ஆபாசமான படங்களையும் அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது.

இதுபற்றி பவித்ரா கவுடா, நடிகர் தர்ஷனிடம் தெரிவித்துள்ளார். இத்தகைய சூழலில் தான் திடீரென்று ரேணுகாசாமி சித்ரதுர்ககாவில் உள்ள வீட்டில் இருந்து மாயமாகி உள்ளார். அவரை குடும்பத்தினர் தேடிவந்தனர்.
இத்தகைய சூழலில் தான் அவரது உடல் பெங்களூர் சும்மன்னஹள்ளியில் கால்வாயில் பிணமாக மீட்கப்பட்டது. உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அப்போது நடிகர் தர்ஷன் மற்றும் அவரது கூட்டாளிகள் ரேணுகாசாமியை கடத்தி பட்டணகெரேயில் உள்ள கார் ஷெட்டில் அடைத்து சித்ரவதை செய்து கொன்று உடலை கால்வாயில் வீசியது தெரியவந்தது.
இதற்காக நடிகர் தர்ஷன் பணம் கொடுத்துள்ளதாக கூறப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா கவுடா உள்பட 13 பேரை அதிரடியாக கைது செய்துள்ளனர். இவர்களை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி பெங்களூர் அன்னபூர்னேஸ்வரி நகர் போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இத்தகைய சூழலில் தான் பெங்களூர் போலீசாருக்கு எதிராக நடிகர் தர்ஷனின் ரசிகர்கள் திரும்பி உள்ளனர். நடிகர் தர்ஷனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று அவருக்கு ஆதரவாக வலைதளங்களில் கருத்துகள் பதிவிட்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி தர்ஷனிடம் விசாரணை நடத்தப்படும் போலீஸ் நிலையத்தில் தினமும் அவரது ரசிகர்கள் கூடி வருகின்றனர்.
இதனால் போலீஸ் நிலையத்தை சுற்றி 200 மீட்டர் தூரத்துக்கு 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. ஆனாலும் ரசிகர்கள் தொடர்ந்து அங்கு கூடி வருகின்றனர். இதனால் நேற்றைய தினம் போலீசார் ரசிகர்கள் மீது லேசான தடியடி நடத்தி விரட்டினர். இதற்கிடையே மீடியாக்களும் அங்கு கூடி போலீஸ் நிலையம் தொடர்பான வீடியோக்களை சேனல்களில் வெளியிட்டு வருகின்றன.
இதனால் ரசிகர்கள் மற்றும் மீடியாக்களை சமாளிக்கும் வகையில் பெங்களூர் போலீசார் அன்னபூர்னேஷ்வரி நகர் போலீஸ் நிலையத்தை துணிபோட்டு மூடியுள்ளனர். அதாவது அன்னபூர்னேஸ்வரி நகர் போலீஸ் நிலையத்தில் நடக்கும் செயல்கள் வெளியே தெரியாத வகையில் சுற்றிலும் சாமியானா பந்தல் துணி போட்டு மறைத்துள்ளனர். போலீஸ் நிலையத்தில் மீடியா, ரசிகர்கள் குவிவதால் இப்படி போலீஸ் நிலையத்தை துணிப்போட்டு மறைப்பது பெங்களூர் வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.
-
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்!












Click it and Unblock the Notifications