Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெங்களூர் குண்டு வெடிப்பு.. தொப்பியுடன் கூலாக சென்ற சந்தேக நபர்.. வெளியான புதிய திடுக் தகவல்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பெங்களூர் ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்புடையதாக சந்தேக நபரின் புதிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. ஹோட்டலுக்கு பையுடன் வரும் அந்த நபர்.. திரும்பி செல்லும் போது வெறுங்கையுடன் செல்கிறார். இந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளியை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள பிரபல உணவகம் ராமேஸ்வரம் கஃபே. இந்த உணவகத்தின் ஒயிட் லீட் கிளையானது 80 அடி சாலையில் அமைந்திருக்கிறது. இந்த கஃபேயானது நேற்று வழக்கம் போல் செயல்பட்டு வந்தது. அப்போது மதிய நேரத்தில் கஃபேயில் இருந்து மர்ம பொருள் ஒன்று திடீரென வெடித்து சிதறியது. இதனால் ஹோட்டல் முழுவதும் புகை மண்டலமாக மாறியது.

 Bangalore Rameshwaram Cafe Blast Fresh CCTV footage shows the suspect walking with a bag

ஹோட்டலில் இருந்த கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. தரையில் பதிக்கப்பட்டு இருந்த கிரானைட் கற்களும் உடைந்து சிதறின. ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டு இருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியேறினர். குண்டுகள் வெடித்த சம்பவத்தில் ஒரு பெண் மற்றும் ஓட்டல் ஊழியர்கள் உள்பட 9 பேர் படுகாயம் அடைந்தனர். பெங்களூரு ஓட்டலில் நடத்தப்பட்ட தாக்குதல் வெடிகுண்டு தாக்குதல் சம்பவம் கர்நாடகா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிசிடிவி காட்சி வெளியீடு: ஹோட்டலில் குண்டு வெடிக்கும் போது பதிவான சிசிடிவி காட்சிகளும் வெளியானது. ஹோட்டலில் வாடிக்கையாளர்கள் கை கழுவும் பகுதியில் தான் அந்த குண்டுகள் வெடித்து சிதறியது தெரியவந்தது. பெங்களூரு நகரை உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக கர்நாடக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வாடிக்கையாளர் போல வந்த ஒருவர் ரவா இட்லி ஆர்டர் செய்துவிட்டு அதை வாங்காமலே சென்றது சிசிடிவியில் தெரியவந்தது.

தடயவியல் ஆய்வாளர்கள் சோதனை: வெடிகுண்டு அடங்கிய பையை கைகழுவும் பகுதி அருகே வைத்து சென்றது இந்த நபராக இருக்ககூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, ஹோட்டலில் இருந்து தொப்பி அணிந்த படி சந்தேக நபர் வெளியே செல்லும் காட்சிகளும் வெளியாகியுள்ளது. கஃபே ஓட்டல் அருகே ஒரு பஸ் ஸ்டாப் உள்ளது.

இந்த பஸ் ஸ்டாப்பில் நின்ற பஸ் ஒன்றில் இருந்து இறங்கிய சந்தேக நபர் ஹோட்டலுக்கு செல்கிறார். வரும் போது கையில் பையுடன் வந்த நபர்.. செல்லும் போது வெறும் கையோடு செல்லும் காட்சியும் சிக்கியுள்ளது. தொப்பி அணிந்தபடி செல்லும் இந்த இளைஞர் குறித்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். வெடி குண்டுக்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள் என்ன? என்பது குறித்து தடயவியல் ஆய்வாளர்கள் சோதனை நடைபெற்று வருகிறது.

ஷாரிக், அவரது கூட்டாளியிடம் விசாரணை: மங்களூர் குண்டு வெடிப்புக்கு பயன்படுத்தப்பட்ட பொருட்களே இந்த குண்டு வெடிப்புக்கு பயன்படுத்தப்பட்டு இருக்கலாம் என முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இதன் அடிப்படையில் மங்களூர் குண்டு வெடிப்பு குற்றவாளி ஷாரிக் மற்றும் அவனது கூட்டாளிகளிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ஷாரிக் தற்போது பெங்களூர் பரப்பன அக்ராஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பெங்களூர் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று பல்வேறு இடங்களில் வெடிகுண்டு சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், பெங்களூரில் நேற்று முதலே பரபரப்பான சூழல் நிலவுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+