பெங்களூர் கலவரம்.. கோவிலை சுற்றி மனித சங்கிலி.. இஸ்லாமியர்கள் அமைத்த பாதுகாப்பு அரண்.. நெகிழ்ச்சி!
பெங்களூரில் நேற்று இரவு கலவரம் நடந்த நிலையில் அங்கிருந்த கோவில்களை சுற்றி இஸ்லாமியர்கள் பாதுகாப்பு அரண் அமைத்த சம்பவம் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
பெங்களூர்: பெங்களூரில் நேற்று இரவு கலவரம் நடந்த நிலையில் அங்கிருந்த கோவில்களை சுற்றி இஸ்லாமியர்கள் பாதுகாப்பு அரண் அமைத்த சம்பவம் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
Recommended Video
பெங்களூர் புலிகேசி நகர் காங்கிரஸ் எம்எல்ஏ சீனிவாச மூர்த்தி வீடு மீது நேற்று இரவு கலவரக்காரர்கள் கடுமையாக தாக்குதல் நடத்தியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எம்எல்ஏ சீனிவாச மூர்த்தியின் உறவினர் நவீன் என்பவர் இஸ்லாம் மதத்திற்கு எதிராக செய்த பேஸ்புக் போஸ்ட் காரணமாக இந்த கலவரம் வெடித்துள்ளது.

நவீனுக்கு எதிராக கொடுத்த புகாரை போலீசார் பதிவு செய்யவில்லை என்ற கோபத்தில் நேற்று அப்பகுதியை சேர்ந்த 1000க்கும் அதிகமான குழு கலவரத்தில் குதித்தது. இதில் பெங்களூர் டிஜே ஹள்ளி போலீஸ் நிலையம் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. அங்கு இருக்கும் வாகனங்கள் தீ வைக்கப்பட்டது.
அதேபோல் புலிகேசி நகர் காங்கிரஸ் எம்எல்ஏ சீனிவாச மூர்த்தி வீடு சூறையாடப்பட்டது. இந்த நிலையில் இந்த கலவரத்திற்கு இடையே இந்து கோவில்களுக்கு எதுவும் ஏற்படாமல் இஸ்லாமியர்கள் பாதுகாப்பாக அரண் அமைத்தனர்.
அந்த பகுதியில் இருந்த இந்து கோவில் ஒன்றை சுற்றி மனித சங்கிலி அமைத்து, பாதுகாப்பாக இவர்கள் அரண் அமைத்தனர். கலவரக்காரர்கள் கோவிலை தாக்காத வண்ணம், இவர்கள் பாதுகாப்பாக நின்றனர். பேஸ்புக் போஸ்ட் தொடர்பான பிரச்சனை மத பிரச்சனையாக மாறிவிட கூடாது என்பதால் இவர்கள் கவனமாக கோவிலை பாதுகாத்தனர்.
That's the beauty of India
— 𝗠𝘂𝗵𝗮𝗺𝗺𝗮𝗱 𝗡𝘂𝗮𝗺𝗺𝗶𝗿 💞 ( نُعَمِّرْ ) (@iam_nuammir) August 11, 2020
Muslims created human chain to guard a Temple in #Bengaluru during violence.
Stay calm make peace #BengaluruViolence
pic.twitter.com/bHNXJQ9rPchttps://t.co/43VcdpfDjo
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது. கோவில்களை சுற்றி இஸ்லாமியர்கள் பாதுகாப்பு அரண் அமைத்த சம்பவம் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்த கலவரத்தில் மொத்தம் 3 பேர் கொல்லப்பட்டனர். போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் இவர்கள் பலியானார்கள்.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி!












Click it and Unblock the Notifications