Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோவா: 4 வயது குழந்தை கொலை-பெங்களூர் பெண் சிஇஓ கைது-உலகின் AI பிரபலங்கள் பட்டியலில் இடம் பிடித்தவர்!

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கோவாவில் ஹோட்டல் அறையில் 4 வயது ஆண் குழந்தையை கொடூரமாக கொன்ற கர்நாடகா மாநிலம் பெங்களூரை சேர்ந்த பெண் தொழிலதிபர் சுசானா சேத் கைது செய்யப்பட்டுள்ளார்.

கர்நாடகாவையும் கோவாவையும் ஒரு சேர அதிர வைத்துள்ளது 4 வயது ஆண் குழந்தையின் படுகொலை. The Mindful AI Lab என்ற நிறுவனத்தை உருவாக்கி அதன் தலைமை செயல் அதிகாரியாக இருப்பவர் சுசானா சேத். செயற்கை நுண்ணறிவு- Artificial intelligence துறை சார்ந்த நிறுவனம் இது. இந்நிறுவனம் 4 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தை உருவாக்குவதற்கு முன்னர் சீனியர் டேட்டா சயின்டிஸ்டாக பணிபுரிந்தார் சுசானா சேத்.

Bengalore Startup CEO Suchana Seth murders 4 year old son in Goa

கோவாவில் 4 வயது மகனுடன் சொகுசு அப்பார்ட்மெண்ட்டில் அறை எடுத்து தங்கி இருந்தார். சுசானா சேத். ஆனால் அந்த அறையை காலி செய்யும் போது குழந்தை இல்லாமல் வெளியேறி இருக்கிறார் சுசானா சேத். இதனால் கோவா அப்பார்ட்மெண்ட் ஊழியர்கள் சுசானா சேத் மீது சந்தேகப்பட்டு போலீசில் புகார் செய்தனர். இதனையடுத்த விசாரணையில் சுசானா சேத் ஹோட்டலை விட்டு கிளம்பிய போது தனியாகவே பயணித்தார் என கால் டாக்சி ஓட்டுநரும் போலீசாரிடம் தெரிவித்தார்.

பின்னர் கர்நாடகா போலீசாருக்கு கோவா போலீசார் தகவல் தெரிவித்தனர். இதனடிப்படையில் சித்ரதுர்காவில் நேற்று சுசானா சேத்திடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையின் போது 4 வயது குழந்தையை கொன்று பேக் ஒன்றில் உடலை எடுத்து வந்ததாக ஒப்புக் கொண்டார் சுசானா சேத். இதனையடுத்து சுசானா சேத்தை போலீசார் நேற்று கைது செய்தனர்.

சுசானா சேத்துக்கு 2010-ல் திருமணம் நடைபெற்றது. 2019-ல்தான் குழந்தை பிறந்தது. சுசானா சேத், 2020-ல் கணவரை விவகாரத்து செய்தார். அப்போது குழந்தையை ஞாயிற்றுக்கிழமைகளில் பார்க்க கணவருக்கு அனுமதி தந்தது நீதிமன்றம். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் குழந்தையை பார்க்க கணவர் வந்து செல்வதை சுசானா சேத் விரும்பவில்லையாம். இதனால் குழந்தையுடன் கோவா சென்ற சுசானா சேத், ஹோட்டல் அறையிலேயே குழந்தையை கொலை செய்து பேக் ஒன்றில் உடலை அடைத்து கர்நாடகாவுக்கு எடுத்து வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

கொல்கத்தா பல்கலைக் கழகத்தில் பிளாஸ்மா இயற்பியலில் மாஸ்டர் டிகிரி பட்டம் பெற்றவர் சுசானா சேத். ராமகிருஷ்ணா மிஷனில் சமஸ்கிருதத்தில் முதுகலை டிப்ளமோவில் முதல் ரேங்க் பெற்றவர் சுசானா சேத். கல்லூரி காலங்களில் பல்வேறு வினாடி வினா போட்டிகளில் ஆக்டிவ்வாக பங்கேற்றிருக்கிறார் என்கின்றன போலீஸ் வட்டாரங்கள். செயற்கை நுண்ணறிவு துறையில் உலகின் டாப் 100 பேரில் ஒருவர் சுசானா சேத் எனவும் போலீசார் தெரிவித்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+