கோவா: 4 வயது குழந்தை கொலை-பெங்களூர் பெண் சிஇஓ கைது-உலகின் AI பிரபலங்கள் பட்டியலில் இடம் பிடித்தவர்!
பெங்களூர்: கோவாவில் ஹோட்டல் அறையில் 4 வயது ஆண் குழந்தையை கொடூரமாக கொன்ற கர்நாடகா மாநிலம் பெங்களூரை சேர்ந்த பெண் தொழிலதிபர் சுசானா சேத் கைது செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடகாவையும் கோவாவையும் ஒரு சேர அதிர வைத்துள்ளது 4 வயது ஆண் குழந்தையின் படுகொலை. The Mindful AI Lab என்ற நிறுவனத்தை உருவாக்கி அதன் தலைமை செயல் அதிகாரியாக இருப்பவர் சுசானா சேத். செயற்கை நுண்ணறிவு- Artificial intelligence துறை சார்ந்த நிறுவனம் இது. இந்நிறுவனம் 4 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தை உருவாக்குவதற்கு முன்னர் சீனியர் டேட்டா சயின்டிஸ்டாக பணிபுரிந்தார் சுசானா சேத்.

கோவாவில் 4 வயது மகனுடன் சொகுசு அப்பார்ட்மெண்ட்டில் அறை எடுத்து தங்கி இருந்தார். சுசானா சேத். ஆனால் அந்த அறையை காலி செய்யும் போது குழந்தை இல்லாமல் வெளியேறி இருக்கிறார் சுசானா சேத். இதனால் கோவா அப்பார்ட்மெண்ட் ஊழியர்கள் சுசானா சேத் மீது சந்தேகப்பட்டு போலீசில் புகார் செய்தனர். இதனையடுத்த விசாரணையில் சுசானா சேத் ஹோட்டலை விட்டு கிளம்பிய போது தனியாகவே பயணித்தார் என கால் டாக்சி ஓட்டுநரும் போலீசாரிடம் தெரிவித்தார்.
பின்னர் கர்நாடகா போலீசாருக்கு கோவா போலீசார் தகவல் தெரிவித்தனர். இதனடிப்படையில் சித்ரதுர்காவில் நேற்று சுசானா சேத்திடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையின் போது 4 வயது குழந்தையை கொன்று பேக் ஒன்றில் உடலை எடுத்து வந்ததாக ஒப்புக் கொண்டார் சுசானா சேத். இதனையடுத்து சுசானா சேத்தை போலீசார் நேற்று கைது செய்தனர்.
#WATCH | Panaji: Goa Police takes the woman accused of killing her four-year-old son into custody and presents her before Mapusa court. https://t.co/JX2GFdT0XN pic.twitter.com/9kWksyykAf
— ANI (@ANI) January 9, 2024
சுசானா சேத்துக்கு 2010-ல் திருமணம் நடைபெற்றது. 2019-ல்தான் குழந்தை பிறந்தது. சுசானா சேத், 2020-ல் கணவரை விவகாரத்து செய்தார். அப்போது குழந்தையை ஞாயிற்றுக்கிழமைகளில் பார்க்க கணவருக்கு அனுமதி தந்தது நீதிமன்றம். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் குழந்தையை பார்க்க கணவர் வந்து செல்வதை சுசானா சேத் விரும்பவில்லையாம். இதனால் குழந்தையுடன் கோவா சென்ற சுசானா சேத், ஹோட்டல் அறையிலேயே குழந்தையை கொலை செய்து பேக் ஒன்றில் உடலை அடைத்து கர்நாடகாவுக்கு எடுத்து வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
கொல்கத்தா பல்கலைக் கழகத்தில் பிளாஸ்மா இயற்பியலில் மாஸ்டர் டிகிரி பட்டம் பெற்றவர் சுசானா சேத். ராமகிருஷ்ணா மிஷனில் சமஸ்கிருதத்தில் முதுகலை டிப்ளமோவில் முதல் ரேங்க் பெற்றவர் சுசானா சேத். கல்லூரி காலங்களில் பல்வேறு வினாடி வினா போட்டிகளில் ஆக்டிவ்வாக பங்கேற்றிருக்கிறார் என்கின்றன போலீஸ் வட்டாரங்கள். செயற்கை நுண்ணறிவு துறையில் உலகின் டாப் 100 பேரில் ஒருவர் சுசானா சேத் எனவும் போலீசார் தெரிவித்தனர்.
-
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு?












Click it and Unblock the Notifications