தயவு செய்து மீண்டும் வேலைக்கு வாங்க.. பெங்களூரு மருத்துவர் உருக்கமான வேண்டுகோள்
பெங்களூரு: கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் உடனே முன் வர வேண்டும் என்று பெங்களூருவில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் தாஹா மாத்தீன் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பெங்களூரு சிவாஜிநகரில் உள்ள எச்பிஎஸ் என்ற தனியார் மருத்துவமனை, கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அளிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அங்கு இல்லை. இதனால் குவிந்து வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் மருத்துவமனை நிர்வாகம் தவித்து வருகிறது.

44 மருத்துவர்கள்
சமீபத்தில் வரை 20 செவிலியர்கள் மற்றும் 44 மருத்துவர்கள் அந்த மருத்துவமனையில் இருந்துள்ளனர். ஆனால் தற்போது ஐந்து மருத்துவர்கள் மற்றும் 12 செவிலியர்கள் மட்டுமே உள்ளனர். சிவாஜ்நகர் எச்.பி.எஸ் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் தாஹா மாத்தீன் மருத்துவர்கள் உடனே வந்து மீண்டும் வேலைக்கு சேருமாறு உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பெட் கிடைப்பது சவால்
அந்த வீடியோவில் அவர் கூறுகையில், "நான் எச்.பி.எஸ் மருத்துவமனையின் கோவிட் வார்டின் ஐசியூவில் இருந்து பேசுகிறேன். நான் காலை 7.30 மணிக்கு மருத்துவமனைக்கு வந்தேன். தற்போது நள்ளிரவு ஆகிவிட்டது. இப்போது வரை எனக்கு தொடர்ந்து அழைப்புகள் வந்து கொண்டே இருக்கிறது. என் அப்பாவுக்கு மூச்சுவிட முடியவில்லை. என் அம்மாவால் மூச்சுவிட முடியவில்லை. என் அண்ணனால் மூச்சுவிட முடியவில்லை என்று என்னை அழைத்தபடி இருக்கிறார்கள். ஏனெனில் பெங்களூருவில் கொரோனா சிகிச்சைக்கு பெட் கிடைப்பது சவாலாக உள்ளது.

மருத்துவர்கள் இல்லை
ஆனால் இங்கே பாருங்கள். என்னுடன் டாக்டர் சிவா இருக்கிறார். எங்களுடன் ஐந்து பேர் தான் வேலை செய்கிறார்கள். எங்கள் மருத்துவமனையில் மற்ற மருத்துவர்கள் வேலை செய்ய விரும்பவில்லை. எங்கள் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் வசதி, பெட்கள், வெண்டிலேட்டர்கள். 30 பெட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் என எல்லாமே இருக்கிறது. ஆனால் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இல்லை. நான் எனது வாட்ஸ் அப் நம்பரை வெளியிட்டுள்ளேன்.

முன்வரிசை வீரர்கள்
மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உடனே தேவை. ஒரு நாளைக்கு 6 மணி நேரம் வேலை பார்த்தால் போதும். உங்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். தயவு செய்து பணியாற்ற வாருங்கள். ஒரு சமயம் ராணுவத்தினர் மக்களை காக்கும் போரில் முன்வரிசை வீரர்களாக இருந்தாரகள் ஒரு சமயம் தீயணைப்பு வீரர்கள் முன்வரிசை வீரர்களாக இருந்தார்கள். ஒரு சமயம் போலீசார் முன்வரிசையில் இருந்தார்கள். அந்த வகையில் தற்போது மருத்துவர்களாகிய நாம் முன்வரிசை போர் வீரர்களாக உள்ளோம்.

மக்களை காக்க வாருங்கள்
மருத்துவமனையில் சிகிச்சைக்கு வருபவர்கள் உங்களின் அப்பாவாக, சகோதரானா, அம்மாவாக, சகோதரியாக, உங்கள் உறவினர்களாக நினைத்து வாருங்கள். தயவு செய்து வாருங்கள், நாம் மக்களை காக்கலாம். தொடர்புக்கு டாக்டர் சித்திக் வாட்ஸ் அப் நம்பர், 9986024862." இவ்வாறு கூறியுள்ளார்.
-
உலுக்கிடுச்சே.. மூடிய அறைக்குள் சிக்கிய காதலன்.. அரண்டு போன பிசினஸ்மேன் கணவன்! பெங்களூரு பகீர் -
கர்நாடக அரசியலில் அதிரடி.. 1 முதல்வர், 4 துணை முதலமைச்சர்கள்.. டிகே.சிவக்குமார் மாஸ்டர் பிளான்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications