Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உரிமைகளுக்காக வீதியில் இறங்கிய பெங்களூர் ஐடி ஊழியர்கள்! சங்கம்னா சும்மாவா

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: எந்த அளவுக்கு வேலை செய்கிறோமோ.. அதே அளவுக்கு குடும்பத்துடன் நேரத்தை செலவழிக்க வேண்டும் என்பதைதான் Work-Life Balance என்கிறார்கள். இதற்காக பெங்களூரில் ஐடி ஊழியர்கள் வீதியில் இறங்கி முழக்கம் எழுப்பியுள்ள சம்பவம் கவனம் பெற்றிருக்கிறது.

சமீப காலமாக ஐடி துறையில் பணியாற்றும் ஊழியர்கள் பணி அழுத்தத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் தொழிலாளர்களின் இந்த பேரணி இயக்கம் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

Bengaluru IT job jobs

கர்நாடக மாநில ஐடி/ஐடிஇஎஸ் ஊழியர்கள் சங்கம் (KITU) சார்பில் பேரணி முன்னெடுக்கப்பட்டிருக்கிறது. இதில் பங்கேற்றவர்கள் Work-Life Balance கேட்டு முழக்கங்களை எழுப்பியுள்ளனர். ஐடி துறையிலும் தொழிலாளர் நல சட்டங்களை முறையாக அமல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். 12-14 மணி நேரம் வரை உழைப்பு சுரண்டப்படுவதாகவும், கூடுதலாக வேலை செய்யும் நேரத்திற்கு எந்த வித பண பலன்களும் கொடுக்கப்படுவதில்லை என்றும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

பணி சூழல் மிக மோசமானதாக இருப்பதால் மன அழுத்தம், உடல்நல பாதிப்பு உள்ளிட்டவற்றை ஊழியர்கள் எதிர்கொண்டுள்ளனர், இதற்கு நிறுவனங்கள் பொறுப்பேற்க வேண்டும் என்றும், 70% ஐடி ஊழியர்கள் கடுமையான மனநல பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். மட்டுமல்லாது கர்நாடக கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் சட்டம் 1961-ல் திருத்தங்கள் மேற்கொள்வதற்கும் ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர்.

கர்நாடக மாநிலத்தில் உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் நலனுக்காக இந்த சட்டம் இயற்றப்பட்டது. ஊழியர்கள் எவ்வளவு நேரம் வேலை செய்ய வேண்டும், வார விடுப்பு என்ன? வேலை செய்யும் இடத்தில் பாதுகாப்பை உறுதி செய்தல், வேலை பாதுகாப்பை உறுதி செய்தல் உள்ளிட்ட விஷயங்களை இந்த சட்டம் வரையறுக்கிறது.

ஆனால் கர்நாடகாவில் உள்ள வணிக நிறுவனங்கள் இனி 24 மணி நேரமும் வேலை செய்யலாம் என்கிற வகையில் இந்த சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டிருக்கிறது. அப்படியெனில் தொழிலாளர்கள் நலன்களை பாதுகாக்கவும் திருத்தம் கொண்டுவரப்பட்டிருக்க வேண்டுமே? என்று ஐடி ஊழியர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். சட்டத்திருத்தம் எங்களை மேலும் பிழிந்து எடுக்கதான் செய்யும் என்று விமர்சித்திருக்கின்றனர். பேரணியில் பங்கேற்ற ஐடி ஊழியர் ராம்குமார் கூறுகையில்,

"சட்டத்திருத்தம் அமல்படுத்தப்பட்டால் எங்கள் மீதான உழைப்பு சுரண்டல் அதிகரிக்க செய்யும். இதிலிருந்து ஐடி ஊழியர்களால் தப்பிக்கவே முடியாது" என்று கவலை தெரிவித்திருக்கிறார். KITU தொழிற்சங்கத்தின் துணைத் தலைவர் ரஷ்மி சவுத்ரி கூறுகையில்,

"தொடர் புறக்கணிப்பால் பெண்கள் ஐடி துறையிலிருந்து வெளியேற்றப்படுகிறார்கள். அவர்களின் பணி பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். நாங்கள் இப்போதைய சூழலில் ஒரு நாளைக்கு 14-16 மணி வரை வேலை செய்கிறோம். கூடுதல் மணி நேரம் வேலை செய்வதற்கு அவர்கள் எந்த பணமும் கொடுப்பதில்லை. ஆனால் கார்ப்பரேட் முதலாளிகள், வாரத்திற்கு 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்று கூறுகிறார்கள். அப்படியெனில் இப்போது நாங்கள் அனுபவித்து வரும் பணி சிக்கலை அவர்கள் இயல்பாக்க முயற்சிக்கிறார்கள்" என்று குற்றம்சாட்டியுள்ளார்.

இந்தியாவை பொறுத்தவரை பாதிக்கும் அதிகமான தொழிலாளர்கள் வாரத்திற்கு 49 மணி நேரத்திற்கும் அதிகமாக வேலை செய்கிறார்கள். ஒருநாளைக்கு 8 மணி நேரம் வீதம் வாரத்திற்கு 48 மணி நேரம்தான் ஊழியர்களை வேலை வாங்க வேண்டும் என்று சட்டம் சொல்கிறது. சில துறைகளில் வேலை 60 மணி நேரத்திற்கும் அதிகமாக இருக்கிறது என புள்ளிவிரவங்கள் தெரிவிக்கின்றன.

நீங்கள் எவ்வளவு நேரம் வேலை செய்கிறீர்கள் வாசகர்களே?

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+