Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அதிர்ந்து போன பெங்களூர்.. பெண் ஊழியரை பலாத்காரம் செய்த மேனேஜர்.. எப்படி ஏமாற்றினார் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பெங்களூரில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் 32 வயது பெண்ணை ஏமாற்றி மேனேஜர் ஒருவர் பலாத்காரம் செய்து கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பெங்களூரில் பல்வேறு முன்னணி ஐடி மற்றும் பிபிஓ நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு ஆண்களுக்கு நிகராக பெண்களும் பணியாற்றி வருகின்றனர். மேலும் அலுவலகங்களில் ஒன்றாக பணியாற்றும் சூழல் உள்ளதால் பாலின பாகுபாடு இன்றி அனைவரும் நட்பாக பழகுவது இயல்பான ஒன்றாகும்.

BPO woman employee raped by Manager and now arrested in Bangalore

இருப்பினும் கூட சிலர் இந்த நட்பை தவறாக பயன்படுத்தி பெண்களை ஏமாற்றி அவர்களின் வாழ்க்கையை சிதைத்து விடுகின்றனர். அப்படி ஒரு சம்பவம் தான் தற்போது பெங்களூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பெங்களூர் பசவேஸ்வரா நகரில் கால் சென்டர் செயல்பட்டு வருகிறது. இதில் மேனேஜராக கேஆர் புரத்தை சேர்ந்த சையத் அக்ரம் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்த நிறுவனத்தில் 32 வயது பெண் ஒருவர் தனது கணவருடன் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் தான் 2024ம் ஆண்டு புத்தாண்டுக்கு முந்தைய நாள் சையத் அக்ரம் அந்த பெண்ணிடம் பேசினார். அப்போது அவர் புத்தாண்டுக்கு பார்ட்டி தருகிறேன். வாருங்கள் ஹோட்டல் சென்று சாப்பிட்டு வரலாம் என டிசம்பர் 31ம் தேதி அழைத்துள்ளார்.

ஆபாசத்தின் உச்சம்! ஓடும் ரயிலில் அலறிய இளம்பெண்.. 47 வயது நபர் செய்த அருவருப்பான செயல்.. அதிரடி கைது

இதையடுத்து அந்த பெண்ணும் அவருடன் பைக்கில் ஏறி அமர்ந்து பயணித்தார். இந்த வேளையில் சையத் அக்ரம் அவரை ஹோட்டலுக்கு அழைத்து செல்லாமல் ரூட்டை மாற்றினார். இதனால் சந்தேகம் அடைந்த அந்த பெண் அவரிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு, தனது வீட்டில் சிறிய வேலை உள்ளது. அதனை சில நிமிடங்களில் முடித்துவிட்டு ஹோட்டல் செல்லலாம் என தெரிவித்தார். இதையடுத்து பெண் ஊழியரை வீட்டுக்குள் அழைத்து சென்ற சையத் அக்ரம் அவரிடம் தவறாக நடக்க முயன்றார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் அவரை தள்ளிவிட்டு அங்கிருந்து ஓட முயன்றார். ஆனால் சையத் அக்ரம் வீட்டு கதவை பூட்டியிருந்ததால் அவரால் வெளியே போகமுடியவில்லை. இதனால் அவர் கூச்சலிட்டார். இந்த வேளையில் வாயை பொத்திய சையத் அகமது அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதோடு, சம்பவம் குறித்து வெளியே கூறினால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளார்.

‛‛மோடி போஸ்டரை நான் ஏன் பிடிக்கனும்’’.. மறுத்த பஞ்சாயத்து தலைவி பரிதா பேகம்! கொதித்துப்போன பாஜக

இதனால் அந்த பெண் ஊழியர் தனக்கு நேர்ந்த சம்பவம் குறித்து கணவர் உள்பட யாரிடமும் சொல்லாமல் இருந்தார். அதன்பிறகு கடந்த 2ம் தேதி அவர் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து கணவரிடம் கூறி அழுதுள்ளார். அதைக்கேட்டு அவரும் அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து கணவரின் உதவியுன் பாதிக்கப்பட்ட அந்த பெண் ஊழியர் சம்பவம் குறித்து பசவேஸ்வரா நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அந்த புகாரின் பேரில் விசாரணை நடத்தி வந்த போலீசார் தற்போது சையத் அகமதுவை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+