பெங்களூரில் பிரபல பெண் ஆடை வடிவமைப்பாளருக்கு காதல் தொல்லை.. இவிபி பிலிம் சிட்டி நிறுவனர் மீது வழக்கு
பெங்களூர்: கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள வயாலிகாவல் பகுதியில் திருமணமான பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். பிரபல ஆடை வடிவமைப்பாளராக உள்ள அந்த பெண், சென்னையைச் சேர்ந்த தொழில்அதிபரான சந்தோஷ் ரெட்டி என்பவர் என்பது காதல் தொல்லை அளிப்பதாக புகார் அளித்துள்ளார். இதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
கர்நாடகா மாநிலம் பெங்களூர் வயாலிகாவல் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் பெண் ஒருவர்வருகிறார். அவருக்கு கல்யாணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். அந்த பெண் பிரபல ஆடை வடிவமைப்பாளர் இருக்கிறார். இந்த நிலையில், வயாலிகாவல் போலீஸ் நிலையத்தில் அந்த பெண் சென்னையை சேர்ந்த தொழில்அதிபரான சந்தோஷ் ரெட்டி மீது அவர் புகார் அளித்துள்ளார்.

தொழில் அதிபரான சந்தோஷ் ரெட்டி யார் என்றால், சென்னை அருகே இ.வி.பி. பிலிம் சிட்டி என்ற திரைப்பட நகரின் உரிமையாளர் ஆவார். அந்த பெண் போலீசில் அளித்த புகாரில் கூறுகையில், "நான் ஆடை வடிவமைப்பாளராக இருந்து வருகிறேன். எனக்கு, தமிழ்நாட்டை சேர்ந்த தொழில் அதிபரான சந்தோஷ் ரெட்டியுடன் அறிமுகம் ஆனார். அவரது உறவுக்கார பெண்ணின் திருமணத்திற்காக ஆடைகளை வடிவமைத்து கொடுக்கும்படி கேட்டார். அதுவும் அவரது மகள் மூலமாக தான் என்னை தொடர்பு கொண்டார். அதன்பிறகு நாங்கள் செல்போன் எண்ணை பரிமாறிக் கொண்டு நல்ல நண்பர்களாக இருந்தோம்
முதலில் குடும்ப நண்பர்களாக தான் பழகி வந்தோம். எனது வீட்டுக்கு சந்தோஷ் ரெட்டி வந்து சென்றார். அப்போது எனது தொழிலுக்காக அவர் பணம் முதலீடு செய்வதாக கூறினார். அத்துடன் அவரது மகளுக்கு மாப்பிள்ளை பார்க்கும்படியும் என்னிடம் தெரிவித்தார். இதனால் எங்களுக்குள் இருந்த நட்பு விரிவடைந்தது.
எனது வீட்டுக்கு வந்த சந்தோஷ் ரெட்டி, எனது மகள் என்னிடம் ஒரு நாள் பேசவே இல்லை. எனக்கு நீங்கள் உதவ வேண்டும் என்றார். நானும் அவரை சமாதானப்படுத்தினேன். பின்னர் திடீரென்று என்னை காதலிப்பதாக கூறினார். என்னையும், அவரை காதலிக்கும்படி கேட்டார். ஆனால் நான் மறுத்து விட்டேன். இதனால் அவர் என்னை தாக்கினார். மேலும் என்னை காதலிக்க வேண்டும், இல்லையெனில் 2 குழந்தைகளையும், உன்னையும் கொன்றுவிடுவேன் மிரட்டினார். எனவே சந்தோஷ் ரெட்டி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பெண் புகாரில் கூறியிருந்தார்" இந்த புகாரின் பேரில் வயாலிகாவல் போலீசார், சந்தோஷ் ரெட்டி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இளம் பெண் கூறுவது உண்மை இல்லையா என்பது போலீசாரின் விசாரணையின் முடிவில் தான் தெரியவரும். அதேபோல் இந்த புகார் தொடர்பாக தொழில் அதிபர் சந்தோஷ் ரெட்டி தரப்பில் விளக்கம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
எம்.எல்.ஏ பதவியா? மேயர் நாற்காலியா? ஆட்சிக்கு வந்ததுமே ஸ்டாலினுக்கு ‘செக்’ வைத்த ஜெயலலிதா -
15 out of 16: சென்னை மாவட்டத்தில் எத்தனை தொகுதிகளில் திமுக போட்டி? சத்யராஜ் மகளுக்கு சீட் இல்லை! -
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
தலைநகர் சென்னையை மொத்தமாக அள்ள திமுக பிளான்.. 15 தொகுதிகளில் நேரடி போட்டி! 1ல் காங்கிரஸ்! -
Vijay: வேணும்னே பண்றாங்க.. 10 குற்றச்சாட்டுகளுடன் தலைமை செயலகத்துக்கு நேரில் போன விஜய்! -
தமிழகத்தின் முதல் பி.ஆர்.டி.எஸ்.. சென்னையில் பிரம்மாண்ட போக்குவரத்து மாற்றம்.. பணிகள் ஸ்டார்ட்! -
சென்னையில் வீடுகளுக்கு குழாய் மூலம் கேஸ்.. கட்டணம், பாதுகாப்பு எப்படி.. அதிகாரி விளக்கம் -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி












Click it and Unblock the Notifications