காவிரி: நாளை மறுநாளும் பந்த்! போச்சு ரூ4,000 கோடி..தலையில் துண்டை போட்டு கதறும் கர்நாடகா தொழில்துறை!
பெங்களூர்: காவிரி பிரச்சனைக்காக நேற்று பெங்களூர் பந்த் நடத்தப்பட்டது; இதனைத் தொடர்ந்து நாளை மறுநாள் (செப்டமப்ர் 29) கர்நாடகா பந்த் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஒரே வாரத்தில் 2 முறை முழு அடைப்புப் போராட்டம் நடத்துவதால் சுமார் ரூ4,000 கோடி இழப்பு ஏற்படுவதாக கர்நாடகா தொழில்துறையினர் கதறி உள்ளனர்.
காவிரியில் தமிழ்நாட்டுக்கு உரிய நீரை திறக்க வேண்டும் என்பது காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவு. இதனையே உச்சநீதிமன்றமும் உறுதி செய்தது.

ஆனால் காவிரியில் தமிழ்நாட்டுக்கு சொட்டு நீரைக் கூட திறந்துவிடக் கூடாது என கர்நாடகாவின் பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகள், கன்னட விவசாய அமைப்புகள், கன்னட இனவாத அமைப்புகள் போராட்டம் நடத்துகின்றன. மண்டியா மாவட்டத்தில் செப்டமப்ர் 23-ந் தேதி பந்த் போராட்டம் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து பெங்களூர் பந்த் போராட்டம் நேற்று நடந்தது.
நாளை மறுநாள் பந்த்: இது போதாது என நாளை மறுநாள் (செப்டம்பர் 29) கர்நாடகா தழுவிய முழு அடைப்பு போராட்டம்- பந்த் நடத்தப்படும் என கன்னட சலுவாளி அமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் அறிவித்துள்ளார். கர்நாடகா தழுவிய பந்த் போராட்டத்துக்கு 2,000 அமைப்புகள் ஆதரவு தெரிவித்துவிட்டன என்கிறார் வாட்டாள் நாகராஜ்.
ரூ4,000 கோடி இழப்பு: கர்நாடகாவில் நேற்றும் நாளை மறுநாளும் நடைபெறும் பந்த் போராட்டத்தால் தொழில்துறையினர் பெரும் கலக்கத்தில் உள்ளனர். கொரோனா காலத்துக்குப் பின்னர் மீண்டு வந்த தொழில்துறையை இந்த முழு அடைப்பு போராட்டங்கள் முடக்கிப் போடுகிறது என்பது கர்நாடகா தொழில்துறையினரின் குமுறல். இந்தப் போராட்டங்களால் சுமார் ரூ4,000 கோடி இழப்பு ஏற்படுமாம்.
720 நிறுவனங்கள் மூடல்: கர்நாடகாவில் அடுத்தடுத்து நடத்தப்படும் இந்த முழு அடைப்புப் போராட்டங்களால் சுமார் ரூ4,000 கோடி இழப்பு ஏற்படுகிறது என்பது தொழில்துறையினரின் கதறல். கர்நாடகா தொழில் உரிமையாளர் சங்கத்தில் மட்டும் 720 நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. முழு அடைப்புப் போராட்டங்களால் 720 நிறுவனங்களும் மூடப்பட வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. இது மிகப் பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்துகிறது என்கின்றனர் அந்த அமைப்பினர்.
ஜிஎஸ்டி இழப்பு: மேலும் ஒருநாள் வர்த்தகம் முடங்கினாலே ஜிஎஸ்டி வரி என்பது ரூ100 கோடி இழப்பு ஏற்படுகிறது. இதில் வாரத்துக்கு 2 நாட்கள் முழு அடைப்புப் போராட்டம் என்பது அரசுக்குதான் பேரிழப்பாக அமையும் எனவும் சுட்டிக்காட்டப்படுகிறது.
ஹோட்டல் தொழில்: கர்நாடகாவின் ஹோட்டல் சார்ந்த தொழில்களில் மட்டும் சுமார் 10 லட்சம் பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த முழு அடைப்புப் போராட்டங்களால் நாள் ஒன்றுக்கு ரூ100 கோடி நஷ்டத்தை இந்த ஹோட்டல்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது என்பது அத்துறையினரின் குமுறல்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications