நீங்க நினைக்கிற மாதிரி தமிழ்நாட்டுடன் சண்டை போட முடியாது: பாஜகவுக்கு டிகே சிவகுமார் பொளேர் பதிலடி!
பெங்களூர்: அண்டை மாநிலமான தமிழ்நாட்டுடன் காவிரி விவகாரத்தில் மோதல் போக்கை கர்நாடகா அரசு கடைபிடிக்க விரும்பவில்லை என பாஜகவுக்கு கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவகுமார் பதிலளித்துள்ளார்.
காவிரி நதிநீர் பிரச்சனை தொடர்பாக பெங்களூரில் செய்தியாளர்களிடம் இன்று டிகே சிவகுமார் கூறியதாவது: காவிரி பிரச்சனையில் புதிய பெஞ்ச் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆகஸ்ட் மாதம் வரைக்கும் 10,000 கன அடிநீரை திறந்துவிட உத்தரவிட்டுள்ளது. இதற்கு நாம் கால அவகாசம் கோரியிருக்கிறோம். ஏனெனில் கர்நாடகா அணைகளில் நீர் பற்றாக்குறை இருக்கிறது.

காவிரி பிரச்சனையில் தமிழ்நாட்டுடன் இணைந்து நாங்கள் என்ன செய்யப் போகிறோம்? தமிழ்நாட்டுக்காக நாங்கள் செயல்படுவதாக பாஜக, மஜத தலைவர் குமாரசாமி ஆகியோர் அர்த்தமற்ற, ஆதாரமற்ற அறிக்கைகளை வெளியிடுவதை நிறுத்த வேண்டும். காவிரி நீரை வைத்துக் கொண்டு தமிழ்நாடும் என்ன செய்யும்? விவசாயத்துக்குதானே பயன்படுத்தப் போகிறது? பாஜக, மஜத குற்றம்சாட்டுவதைப் போல தமிழ்நாட்டுக்கு கூடுதல் நீர் திறந்துவிடவே இல்லை. தமிழ்நாட்டுக்கு எவ்வளவு நீர் திறந்துவிடப்பட்டது என்பதற்கான முழுமையான விவரம் எங்களிடம் இருக்கிறது. தேவைப்படும் நேரத்தில் அதனை நாங்கள் வெளியிடவும் தயாராக இருக்கிறோம்.
கர்நாடகா விவசாயிகளின் பாதுகாப்பு எங்களுக்கு முதன்மையானது. அதற்காகவே நாங்கள் செயல்பட்டு வருகிறோம். ஆனால் பாஜக, மஜத கட்சிகள் என்ன செய்கின்றன? செய்தன? என்பதை மக்கள் நன்றாகவே அறிவார்கள். நமது விவசாயிகளின் நலனுக்காக காவிரி நீர் திறக்கப்பட்டு வருகிறது. காவிரி நதிநீர் பிரச்சனை குறித்து விவாதிக்க ஆகஸ்ட் 23-ந் தேதி அனைத்து கட்சிக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்தக் கூட்டத்துக்கு அழைக்கப்பட்டுள்ளனர். அவர்களுடைய ஆலோசனைகளையும் கேட்டு பெற இந்த அரசு தயாராக உள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்திடமும் நாம் மேல்முறையீடு செய்துள்ளோம். அனைத்து கட்சிகள் மற்றும் சட்ட வல்லுநர்களுடன் தொடர்ந்து நாம் ஆலோசித்து முடிவு எடுப்போம். வறட்சி காலங்களில் நதிநீர் பங்கீடு எப்படி இருக்க வேண்டும் என்பதை விவாதித்து முடிவு செய்வோம். இவ்வாறு டிகே சிவகுமார் கூறினார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications