3000 ஆபாச வீடியோ-ரேவண்ணா கைதை தொடர்ந்து பிரஜ்வலுக்கு வலை-ப்ளூ கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்க பரிந்துரை!
பெங்களூர்: 300 பெண்களை நாசமாக்கி 3000 ஆபாச படங்கள் எடுத்த விவகாரத்தில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகன் ரேவண்ணா நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவரைத் தொடர்ந்து வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய மகன் பிரஜ்வலை கைது செய்வதற்காக ப்ளூ கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்க வேண்டும் என சிபிஐக்கு கர்நாடகா மாநில அரசின் சிறப்பு புலனாய்வுக் குழு (சி.ஐ.டி) பரிந்துரைத்துள்ளது.
கர்நாடகா மாநிலம் ஹாசன் தொகுதியில் பாஜக ஜேடிஎஸ் கூட்டணியின் வேட்பாளராகப் போட்டியிட்டவர் பிரஜ்வல் ரேவண்ணா. முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா. ஹாசன் தொகுதியில் ஏப்ரல் 26-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. அதற்கு முன்னதாக பிரஜ்வல் ரேவண்ணாவின் 3000 ஆபாச வீடியோக்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக கர்நாடகா மாநில அரசின் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில் பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டார்.
இதனிடையே ஆபாச வீடியோக்கள் விவகாரத்தில் பெண் ஒருவரை கடத்தி சித்ரவதை செய்த புகாரின் அடிப்படையில் தேவகவுடாவின் மகனும் பிரஜ்வல் தந்தையுமான ரேவண்ணா நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
தற்போதைய நிலையில் பிரஜ்வல், ரேவண்ணா இருவர் மீதும் தலா 2 வழக்குகள் போடப்பட்டுள்ளன. இருவர் மீதான அனைத்து வழக்குகளும் ஒருங்கிணைக்கப்பட்டு 3 வழக்குகளாக்கப்பட்டுள்ளன. முதல் வழக்கில் வீட்டில் வேலை செய்த பணிப் பெண்ணை பலாத்காரம் செய்தது, அவரது 16 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது; மற்றொரு வழக்கு ஜேடிஎஸ் கட்சியின் முன்னாள் கவுன்சிலர் கொடுத்த துப்பாக்கி முனையில் பிரஜ்வல் பலாத்காரம் செய்த வழக்கு. 3-வது வழக்கானது பெண்ணை கடத்தி ரேவண்ணாவும் அவரது ஆதரவாளர்களும் சித்ரவதை செய்தது தொடர்பானது.
இவ்வழக்குகளில் தற்போது ரேவண்ணா மட்டும் கைது செய்யப்பட்டுள்ளார். பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாட்டுக்கு ஓடிப் போனதால் அவருக்கு எதிராக ப்ளூ கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்க, சிபிஐக்கு மாநில சிறப்பு புலனாய்வுக் குழு பரிந்துரைத்துள்ளது. சிபிஐ விரைவில் ப்ளூ கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கும் என கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications