கழுத்தை நெரித்த வரி பிரச்சனை.. அதிகாரிகளின் தொந்தரவு.. சித்தார்த் மாயத்திற்கு திடுக்கிடும் காரணம்!
Recommended Video
பெங்களூர்: சிசிடி நிறுவனர் விஜி சித்தார்த் மாயத்திற்கு பின் அவருக்கு வருமான வரித்துறை அளித்த அழுத்தமும் முக்கிய காரணமாக இருக்கலாம் என்று கூறுகிறார்கள்.
சிசிடி நிறுவனர் விஜி சித்தார்த் நேற்று மாலை காணாமல் போனார். நேற்று மாலை மங்களூர் நோக்கி சென்று கொண்டு இருந்த அவர் காணாமல் போனதை அடுத்து பெரிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
விஜி சித்தார்த் நேத்ராவதி ஆற்றில் விழுந்து தற்கொலை செய்திருக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகிறது. இதனால் நேத்ராவதி ஆற்றில் தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

இரண்டு பிரச்சனை
விஜி சித்தார்த்துக்கு மொத்தம் இரண்டு விதமான பிரச்சனைகள் தொல்லை கொடுத்து உள்ளது. அதன்படி மைன்ட் ட்ரீ என்ற நிறுவனத்தில் சித்தார்த் பங்குகளை வைத்து இருக்கிறார். இதில் 21% பங்குகளை மட்டும் இவர் விற்பதற்கு தீவிரமாக முயன்று வந்தார். கடைசியில் பிரபல எல் அன்ட் டி நிறுவனத்திடம் அதை விற்றார்.

என்ன சிக்கல்
இதில் இருந்து அவருக்கு நிறைய அழுத்தம் கொடுக்கப்பட்டது. பங்குகளை விற்றது தொடர்பாகவும், மீதமுள்ள பங்குகளை விற்க வேண்டும் என்று கூறியும் பலர் இவருக்கு அழுத்தம் கொடுத்து வந்துள்ளனர். இந்த அழுத்தம்தான் இவர் இப்படி தவறான முடிவு எடுக்க முக்கிய காரணம் என்று கூறுகிறார்கள்.

வருமான வரித்துறை
அதேபோல் இவர் தான் செலுத்த வேண்டிய வரியை விட குறைவான வரியை கட்டியதாக கூறப்படுகிறது. இவர் குறைவான வரி கட்டியதாக வருமான வரித்துறை பலமுறை இவருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அது மட்டுமில்லாமல் இவரின் 100 கோடி ரூபாய் வரி மற்றும் சிசிடி நிறுவனத்தின் 40 கோடி ரூபாய் வரியையும் முடக்கி உள்ளது.

300 கோடி ரூபாய்
300 கோடி ரூபாய் வரி கட்ட வேண்டிய நிலையில் இவர் 43 கோடி ரூபாய்தான் வரி கட்டி இருக்கிறார். இதனால் வருமான வரித்துறை அதிகாரிகள் இவருக்கு மோசமாக எச்சரிக்கை விடுத்தனர். இந்த இரண்டு அழுத்தமும் சேர்ந்து, இவருக்கு பெரிய சிக்கலாகி அது இப்போது தவறான முடிவு எடுக்க முக்கிய காரணம் ஆனது என்கிறார்கள்.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications