Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்சூரி போட்ட சந்திரயான் 3 பிரக்யான் ரோவர்! இனி நிலவே நமக்குதான்.. இஸ்ரோ வெளியிட்ட மாஸ் அப்டேட்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட சந்திரயான் 3 பிரக்யான் ரோவர் வெற்றிகரமாக 100 மீட்டர் தொலைவு வரை ஆய்வு செய்துள்ளதாக இஸ்ரோ கூறியுள்ளது. இது தொடர்பான படத்தையும் X சோஷியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

பல பில்லியன் ஆண்டுகளாக சூரிய ஒளியே படாமல் இருந்த நிலவின் தென் துருவத்தில் உள்ள பள்ளத்தாக்குகளில் நீர் இருப்பதற்கான சாத்தியங்களை சந்திரயான்-1 விண்கலம் கண்டுபிடித்து சொன்னது. அதன் பின்னர் நிலவை யார் ஆக்கிரமிக்கப்போகிறார்கள் என்கிற போட்டி தொடங்கியது. இதனையடுத்து நிலவில் ரோவரை இறக்கி அதில் அதன் மூலம் ஆய்வு செய்ய சந்திரயான்-2 திட்டத்தை செயல்படுத்தியது இஸ்ரோ.

Chandrayaan 3 Pragyan rover has successfully probed and crossed 100 meters of South Pole of Moon

ஆனால் இந்த திட்டத்தில் ஏற்பட்ட சிறிய தொழில்நுட்ப தவறால் நிலவில் தரையிறங்க இருந்த ரோவர் வேகமாக மோதி உடைந்தது. இருப்பினும் இதனை கொண்டு சென்ற ஆர்பிட்டர் தற்போது வரை செயல்பட்டு வருகிறது. எனவே மீண்டும் மற்றொரு ரோவரை அனுப்புவது என்று முடிவெடுத்து சந்திரயான்-3 திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஏற்கெனவே நடந்த தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு மீண்டும் அந்த தவறு நடக்காதவாறு இஸ்ரோ மிகச்சரியாக இந்த மிஷனை செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில் கடந்த ஜூலை மாதம் 14ம் தேதி பூமியிலிருந்து ஏவப்பட்ட சந்திரயான் -3 விண்கலம் கடந்த ஆகஸ்ட் மாதம் 23ம் தேதியன்று மாலை 6.04 மணிக்கு நிலவில் மெல்ல தரையிறங்கி வரலாற்று சாதனை படைத்தது. விண்வெளி துறையில் ஜாம்பவானாக இருந்த ரஷ்யா அனுப்பிய லூனா 25 விண்கலம் திட்டமிட்டபடி தரையிறங்காமல் நிலவில் மோதி உடைந்தது. இந்நிலையில் இந்தியா படைத்தது வரலாற்று சாதனையாக உலக நாடுகள் பார்க்கின்றன.

நிலவில் தரையிறங்கிய விக்ரம் லேண்டரிலிருந்து வெளியே வந்த பிரக்யான் ரோவர் வெற்றிகரமாக தனது ஆய்வை மேற்கொண்டு வருகிறது. சமீபத்தில் இந்த ரோவர் சில தனிமங்களை கண்டுபிடித்து சொன்னது. அதாவது, நிலவில் ஆக்சிஜன், சல்பர், அலுமினியம், கால்சியம், அயர்ன், குரோமியம், டைட்டேனியம், மாங்கனீஸ், சிலிக்கான் உள்ளிட்ட தனிமங்கள் இருப்பதை ரோவரில் உள்ள எல்ஐபிஎஸ் கருவி கண்டுபிடித்திருக்கிறது.

அதேபோல இங்கு ஹைட்ரஜன் இருக்கிறதா? என்பதை குறித்தும் ஆய்வு மேற்கொண்டு வருகிறது. ஏனெனில் ஹைட்ரஜன் இருக்கும் இடத்தில்தான் நீர் இருக்கும். ஹைட்ரஜன் இரண்டு பங்கும் ஆக்ஸிஜன் ஒரு பங்கும் சேர்ந்தால்தான் (H2O) நீர் உருவாக முடியும். எனவே ரோவர் ஆக்ஸிஜன் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறது. அதேபோல தற்போது கண்டுபிடிக்கப்பட்ட தனிமங்களில் சல்பரை பிரக்யான் இருப்பதை ரோவர் நின்ற இடத்திலிருந்தே உறுதி செய்திருக்கிறது.

இதற்கு முன்னர் வேறு எந்த நாட்டின் ரோவரும் இப்படி சல்பரை கண்டுபிடித்ததில்லை. அதேபோல டைட்டேனியம் கண்டுபிடித்திருப்பது நிலவின் தென் துருவத்தின் மீதான ஆர்வத்தை மேலும் அதிகரித்துள்ளது. அதாவது, இந்த தனிமம் உலகின் மிகவும் அரிதானது. பூமியில் வெறும் 0.63 சதவிகிதம் மட்டுமே இருக்கக்கூடிய தனிமம் இது. இதை கொண்டுதான் விமானங்கள் மற்றும் ராக்கெட்டுகள் உருவாக்கப்படுகின்றன. இரும்பை போல கனமாக இல்லாமல் லேசானதாக இருக்கும். ஆனால் இதன் உறுதி திறன் அபாரமானதாக இருக்கும். எனவே இந்த தனிமத்திற்கு பூமியில் டிமான்ட் அதிகம்.

இப்படி இருக்கையில் தற்போது இந்த ரோவர் நிலவில் 100 வரையிலான தனது ஆய்வை வெற்றிகரமாக முடித்திருக்கிறது. இது தொடர்பான தகவலை இஸ்ரோ வெளியிட்டிருக்கிறது. நிலவில் பள்ளங்களை கடந்து பாதுகாப்பாக ரோவர் வளைந்து செல்லும் பாதையையும் இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+