ஆளுநர் மாளிகையில் 'ராஜினாமா' எம்.எல்.ஏக்கள்- சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வலியுறுத்தல்
Subscribe to Oneindia Tamil
பெங்களூரு: கர்நாடகா ஆளுநர் வஜூபாயை ஜேடிஎஸ்- காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 6 பேர் கூட்டாக சந்தித்து பேசினர். அப்போது சட்டசபையில் முதல்வர் குமாரசாமி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
கர்நாடகாவில் பாஜக ஆட்சியைக் கைப்பற்ற உதவும் வகையில் ஜேடிஎஸ்- காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 13 பேர் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளனர். ஆனால் சட்டசபைக்கு சபாநாயகர் வரவில்லை.

அதனால் சட்டசபை செயலாளரிடம் ஜேடிஎஸ்-காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ராஜினாமா கடிதம் கொடுத்தனர். அதனைத் தொடர்ந்து கர்நாடகா ஆளுநர் வஜூபாயை இந்த எம்.எல்.ஏ.க்கள் கூட்டாக சந்தித்தனர்.
இச்சந்திப்பின் போது முதல்வர் குமாரசாமி சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்று ஆளுநரிடம் அவர்கள் வலியுறுத்தினர்.












Click it and Unblock the Notifications