கர்நாடக தேர்தலில் நடக்கப்போகும் “மேஜிக்”.. காங்கிரஸ் எடுத்த “ஆயுதம்” -ராகுலுடன் அணிவகுத்த கன்னடர்கள்
பெங்களூரு: கர்நாடகாவில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், அம்மாநிலத்தில் பெரும் வாக்கு சதவீதத்தை வைத்திருக்கும் தலித் மக்களை கவரும் வகையில் பல்வேறு வியூகங்களை வகுத்து காங்கிரஸ் கட்சி செயல்பட்டு வருகிறது.
மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசின் வகுப்புவாத அரசியலுக்கு எதிராக ஒற்றுமையை ஏற்படுத்த கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான ஒற்றுமை யாத்திரையை கடந்த 7 ஆம் தேதி தொடங்கினார் ராகுல் காந்தி.
கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில் நடக்கத் தொடங்கிய ராகுல் காந்தி 11 ஆம் தேதி கேரள எல்லையில் உள்ள முலகுமூடு கிராமத்திற்கு வந்தடைந்தார். தற்போது அவர் கர்நாடகாவில் நடைபயணத்தை அவர் மேற்கொண்டுள்ளார்.

தலித் குடும்பம்
நேற்று தும்கூரில் இருந்து சித்ரதுர்கா நோக்கி நடைபயணம் சென்ற ராகுல் காந்தி கோலாரை சேர்ந்த தலித் குடும்பத்தினரின் தோள் மேல் கை வைத்து அழைத்து சென்றார். ராகுலுடன் சென்ற தலித் பெண் ஷோபனாவின் மகன், கோயில் கம்பத்தை தொட்டதற்காக அவர்கள் ஊரை சேர்ந்த உயர்சாதி வெறியர்கள் அபராதம் விதித்து, குடும்பத்தையே ஊரைவிட்டு ஒதுக்கி வைத்தார்கள்.

தலித் இடஒதுக்கீடு
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அவர்களை தங்களோடு அழைத்துச் சென்று தார்மீக ஆதரவை வழங்கிய ராகுல் காந்தி தலித் மக்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். கர்நாடகாவில் மாநில பாஜக அரசு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பட்டியலின மக்களுக்கு 2 சதவீதமும் பழங்குடி மக்களுக்கு 4 சதவீதமும் வழங்கிய இரண்டு நாட்கள் கழித்து ராகுல் இவ்வாறு செய்துள்ளார்.

தலித் சாமியார்கள்
நேற்று ராகுல் காந்தி தலித் குடும்பத்துடன் நடைபயணம் மேற்கொண்ட அதே நாளில், "பட்டியலின மற்றும் பழங்குடியின சமுதாயத்தை சேர்ந்த சாமியார்கள் முதலமைச்சர் பசவராஜ் பொம்மையை சந்தித்து பேசி, இடஒதுக்கீடு வழங்கியதற்கு நன்றி தெரிவித்து வந்தனர். கர்நாடகாவில் அதிக வாக்கு விகிதத்தை கொண்ட பிரிவினராக பட்டியலின மக்கள் உள்ளனர்.

மல்லிகார்ஜுன கார்கே
எனவே அவர்களின் வாக்கு வங்கியை கைப்பற்ற பாஜக, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுமே பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் விளைவாகவே கடைசி நேரத்தில் அரசு இடஒதுக்கீட்டை அறிவித்துள்ளது. காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடும் மல்லிகார்ஜுன கார்கேவும் கர்நாடக மாநிலத்தின் பட்டியலின சமுதாயத்தை சேர்ந்தவர்தான். ஏறக்குறைய இவரது வெற்றி உறுதியாகிவிட்ட நிலையில் இதுவும் தேர்தலில் காங்கிரஸுக்கு பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications