கர்நாடகாவை உலுக்கும் ஒப்பந்ததாரர் தற்கொலை- மல்லிகார்ஜூன கார்கே மகனின் அமைச்சர் பதவிக்கு வேட்டு?
பெங்களூர்: கர்நாடகா ஒப்பந்ததாரர் சச்சின் தற்கொலைக்கும் அமைச்சர் பிரியங்க் கார்கேவுக்கும் (காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மகன்) எந்த தொடர்பும் இல்லை; பிரியங்க் கார்கே அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யும் பேச்சுக்கே இடம் இல்லை என அம்மாநில துணை முதல்வர் டிகே சிவகுமார் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். மேலும் ஒப்பந்ததாரர் சச்சின் தற்கொலை விவகாரத்தில் தம் மீது பாஜகவினர் சேற்றை வாரி இறைக்கின்றனர் என்றும் அமைச்சர் பிரியங்க் கார்கே குற்றம்சாட்டியுள்ளார். ஆனால் பிரியங்க் கார்கே, அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துதான் ஆக வேண்டும் என கர்நாடகா மாநில பாஜக தலைவர் விஜயேந்திரா வலியுறுத்தி உள்ளார்.
கர்நாடகா மாநிலத்தில் வால்மீகி வளர்ச்சி வாரியத்தில் முறைகேடு நடைபெற்றது மிகப் பெரும் சர்ச்சையாக வெடித்தது. வால்மீகி வளர்ச்சி வாரிய அதிகாரியின் தற்கொலையால் இந்த விவகாரம் வெளியே வந்தது. இதனால் அமைச்சர் நாகேந்திரா பதவியை ராஜினாமா செய்தார்.

இந்த நிலையில் ஒப்பந்ததாரர் சச்சின் தற்கொலை விவகாரம் கர்நாடகாவில் பெரும் புயலைக் கிளப்பி இருக்கிறது. ஒப்பந்ததாரர் சச்சின் தற்கொலைக்கு அமைச்சர் பிரியங்க் கார்கேதான் காரணம்; ஆகையால் அவர் ராஜினாமா செய்தாக வேண்டும் என எதிர்க்கட்சிகளான பாஜக, ஜேடிஎஸ் போர்க்கொடி தூக்கி உள்ளன. ஆனால் தமக்கும் சச்சின் தற்கொலைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்கிறார் அமைச்சர் பிரியங்க் கார்கே.
இது தொடர்பாக அமைச்சர் பிரியங்க் கார்கே கூறுகையில், எனக்கு எதிராக பாஜகவினர் சேற்றைத்தான் வாரி வீசுகிறார்கள். எனக்கு எதிரான ஆதாரத்தை பாஜகவினர் வெளியிட வேண்டும். பாஜக குற்றம்சாட்டிவிட்டதாலேயே நான் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட முடியுமா? என் வீட்டை கூட பாஜகவினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தலாம். இந்தப் போராட்டங்களைக் கண்டு மக்கள் சிரிக்கத்தான் செய்வார்கள் என்றார்.
இதேபோல கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவகுமார் கூறுகையில், சச்சின் தற்கொலைக்கும் அமைச்சர் பிரியங்க் கார்கேவுக்கும் எந்த தொடர்புமே இல்லை. சச்சின் தற்கொலை செய்யும் முன்னர் எழுதிய கடிதத்தில் பிரியங்க் கார்கே பெயரை குறிப்பிடவும் இல்லை. அவரது நேர்மையை பற்றி எங்களுக்கு தெரியும். ஆகையால் பிரியங்க் கார்கே ராஜினாமா என்ற பேச்சுக்கே இடம் கிடையாது என்றார்.
ஆனால் கர்நாடகா மாநில பாஜக தலைவர் விஜயேந்திரா, பிரியங்க் கார்கேதான் சச்சின் தற்கொலைக்கு காரணம். ஆகையால்தான் பிரியங்க் கார்கே ராஜினாமா செய்ய வேண்டும் என்கிறோம். சச்சின் தற்கொலை வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்றார்.
-
அடிதடி..கோஷ்டி பூசல்! பழைய ஃபார்முக்கு திரும்பிய காங்கிரஸ்! செல்வப் பெருந்தகைக்கு எதிராக திரண்ட டீம் -
அடம்பிடித்து ஈரோடு கிழக்கை கேட்டு வாங்கிய காங்கிரஸ்.. இப்போ எங்க போச்சு! நெட்டிசன்கள் சரமாரி கேள்வி! -
காங்கிரஸ் கட்சியின் தமிழக தேர்தல் பொறுப்புகளில் இருந்து விலகியது ஏன்? மாணிக்கம் தாகூர் விளக்கம்! -
கொங்கு வேளாளர் கவுண்டரை புறக்கணிச்சிட்டாங்க... காங்கிரஸ் மீது ஜோதிமணி எம்பி குற்றச்சாட்டு -
குளச்சல் பிரின்ஸ், மயிலாடுதுறை ராஜ்குமார் உள்பட 5 காங். சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு வாய்ப்பு மறுப்பு! -
3 புது முகங்கள்.. சில எதிர்பார்க்காத சாய்ஸ்.. காங்கிரஸ் வேட்பாளர்கள்.. 27 பேரின் ரியல் பின்னணி -
காங்கிரஸில் இணைந்த 6 நாளில் பென்னாகரத்தில் ஜி.கே.எம்.தமிழ்க் குமரன் போட்டி! தந்தையை எதிர்க்கிறாரா? -
இன்னும் 2 நாட்கள்தான் இருக்கு! காங்கிரஸ், பாஜக வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் ஏன் இழுபறி? -
ராகுல் களத்தில் இறங்கியவுடன் காங்கிரஸுக்கு நல்ல செய்தி! கேரளாவில் மாபெரும் வெற்றி உறுதி! புதிய சர்வே -
பாஜகவில் பஞ்சாயத்து.. காங்கிரஸில் கலகம்! என்ன தான் பிரச்சனை! எப்போது வரும் வேட்பாளர் பட்டியல்? -
85% ஓவர்.. இன்னும் சில மணி நேரங்களில் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல்.. செல்வப்பெருந்தகை அப்டேட்! -
“இன்று இரவுக்குள் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை ராகுல் காந்தி வெளியிடுவார்"- ஈரோட்டில் சொன்ன ஸ்டாலின்












Click it and Unblock the Notifications