முஸ்லிம்களின் வாக்குரிமையை பறிக்க வேண்டும்.. கர்நாடகா ஒக்கலிகா ஜாதி மடாதிபதி பேச்சால் கடும் சர்ச்சை!
பெங்களூர்: இந்தியாவில் முஸ்லிம்களின் வாக்குரிமையை பறிக்க வேண்டும் என்று கர்நாடகாவை சேர்ந்த ஒக்கலிகா கவுடா ஜாதி மடாதிபதி சந்திரசேகரநாத் சுவாமி பேசியிருப்பது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. வக்ஃப் வாரிய சொத்து விவகாரத்தில் விவசாயிகளுக்கு கர்நாடகா காங்கிரஸ் அரசு நோட்டீஸ் அனுப்பியதைக் கண்டித்து பெங்களூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சந்திரசேகரநாத் சுவாமி இந்தக் கருத்தை தெரிவித்திருந்தார்.
கர்நாடகா மாநிலத்தின் விஜயாப்புரா, யாதகிரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் கர்நாடகா மாநில காங்கிரஸ் அரசு நோட்டீஸ் அனுப்பியது. அதில் உங்களிடம் உள்ள நிலம் வக்ஃப் வாரியத்துக்கு சொந்தமானது; இந்த நிலத்தை உடனே காலி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இது கர்நாடகா விவசாயிகளை பெரும் அதிர்ச்சியடைய வைத்தது. விவசாயிகளுக்கு ஆதரவாக பாஜக போராட்டத்தில் களமிறங்கியது.

கர்நாடகா மாநில காங்கிரஸ் அரசைக் கண்டித்து பெங்களூரு சுதந்திர பூங்காவில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒக்கலிகா கவுடா ஜாதி மடாதிபதி சந்திரசேகரநாத் சுவாமி பேசுகையில், விவசாயிகளின் நிலத்தை வக்ஃபு வாரியத்துக்கு சொந்தமானது என அரசு கூறுவது அரசியல்தான். வாக்குகளைப் பெறுவதற்காகவே இப்படி அரசியல்வாதிகள் அரசியல் செய்கின்றனர். நமது நாட்டுக்கு நல்ல பெயர் வரவேண்டும் என நினைத்தால் முதலில் முஸ்லிம்களின் வாக்குரிமையை பறித்துவிட வேண்டும். வக்ஃபு வாரியம் என்ற ஒன்றையே ரத்து செய்தாக வேண்டும். அப்போதுதான் இந்த நாட்டு மக்களுக்கு நிம்மதியே கிடைக்கும் என்றார்.
ஒக்கலிகா கவுடா ஜாதி மடாதிபதி சந்திரசேகரநாத் சுவாமியின் இந்த சர்ச்சைப் பேச்சுக்கு முஸ்லிம் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
-
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி












Click it and Unblock the Notifications