கொரோனா நெகட்டிவ் ரிப்போர்ட் போதும்.. தனிமைப்படுத்துவதற்கான விதியை மாற்றிய கர்நாடக அரசு.. முழு விவரம்
பெங்களூர்: கர்நாடகாவிற்கு வெளிமாநிலத்தில் இருந்து வரும் நபர்கள் தங்களுக்கு கொரோனா இல்லை என்று சோதனை ரிப்போர்ட்டை அளித்தால் அவர்கள் அரசின் தனிமை முகாமில் தங்க வேண்டிய அவசியம் இல்லை என்று அம்மாநில அரசு கூறியுள்ளது.
Recommended Video
இந்தியா முழுக்க பெரு நகரங்களில் கடந்த திங்கள் கிழமை விமான சேவை தொடங்கியது. டெல்லி, பெங்களூர், ஹைதராபாத், கொல்கத்தா, சென்னை உள்ளிட்ட நகரங்களில் விமான சேவை தொடங்கி உள்ளது. இதற்கான டிக்கெட் விலையும், பல்வேறு விதிமுறைகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.

விமானத்தில் இப்படி பிற மாநிலங்களுக்கு செல்லும் மக்களுக்கு பல்வேறு விதிமுறைகளை மாநில அரசுகள் விதித்து இருக்கிறது. கர்நாடகாவிற்கு விமானத்தில் தமிழ்நாடு, குஜராத், டெல்லி, மஹாராஷ்டிரா, ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசம் உள்ளிட்ட ஆறு மாநிலங்களில் இருந்து வரும் மக்கள் கண்டிப்பாக 14 நாள் தனிமைப்படுத்தப்படுவார்கள்.
7 நாள் அரசு முகாமில், 7 நாட்கள் வீட்டிலும் இவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். மற்றவர்கள் 7 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்படுவார்கள். இந்த நிலையில் இந்த விதியில் தற்போது புதிய விலக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி கர்நாடகாவிற்கு வெளிமாநிலத்தில் இருந்து வரும் நபர்கள் தங்களுக்கு கொரோனா இல்லை என்று சோதனை ரிப்போர்ட்டை அளித்தால் அவர் அரசின் தனிமை முகாமில் தங்க வேண்டிய அவசியம் இல்லை என்று அம்மாநில அரசு கூறியுள்ளது.
அதாவது ஐசிஎம்ஆர் பரிந்துரை செய்த மருத்துவமனைகளில் சோதனை செய்துவிட்டு, தங்களுக்கு கொரோனா இல்லை என்று உறுதி செய்தால், அவர்கள் அரசு முகாமில் தனிமைப்படுத்தப்பட மாட்டார்கள். அவர்கள் கர்நாடகா வருவதற்கு இரண்டு நாட்களுக்கு முன் இந்த சோதனையை செய்து இருக்க வேண்டும்.
இதனால் இவர்கள் யாரும் விமான நிலையத்தில் கொரோனா சோதனைக்கான எச்சில் மாதிரி எடுப்பதற்காக வரிசையில் காத்திருக்க வேண்டியது இல்லை. அதேபோல் தமிழ்நாடு, குஜராத், டெல்லி, மஹாராஷ்டிரா, ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசம் உள்ளிட்ட ஆறு மாநிலங்களில் இருந்து வரும் மக்கள் அரசு முகாமில் தங்க வேண்டிய அவசியம் இல்லை.
ஆனால் அதே சமயம் இவர்கள் நேரடியாக வீட்டிற்கு செல்லலாம். ஆனால் வீட்டில் இவர்கள் 14 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும் என்று அரசு கூறியுள்ளது.
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம்












Click it and Unblock the Notifications