கொரோனா ஊழல்: 'அந்த நீதிபதி' தலைமையில் கமிஷன்.. பெயரை சித்தராமையா சொன்னதும் பாஜக தலைகள் தெறி ஓட்டம்!
பெங்களூர்: கர்நாடகாவில் கொரோனா கால முறைகேடுகள் தொடர்பாக விசாரணை நடத்தப்படும்; நீதிபதி குன்ஹா தலைமையில் விசாரணை கமிஷன் அமைப்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக அம்மாநில முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளது முந்தைய பாஜக ஆட்சியாளர்களை அலறவைத்தது.
சும்மா பேரு கேட்டாவே அதிருதுல்ல.. என்ற வசனம் நிச்சயம் கர்நாடகா நீதிபதி குன்ஹாவுக்கு பொருந்தும். மறைந்த முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கை முழுமையாக விசாரித்தவர். எந்த பேரங்களுக்கும் அடிபணியாமல் நேர்மையாக விசாரணை நடத்தி சர்வ வல்லமை படைத்தவர்களாக தங்களை காட்டிக் கொண்ட ஜெயலலிதா, சசிகலா அண்ட் கோவினரை சிறையில் தள்ளியவர். என்னதான் ஜெயலலிதா மறைந்தாலும் சசிகலா 4 ஆண்டு காலம் பெங்களூரில் சிறைவாசம் அனுபவிக்க காரணமாக இருந்தவர் நீதிபதி குன்ஹா. தமிழ்நாட்டின் அரசியல் சரித்திரத்தில் நீதிபதி குன்ஹா என்ற பெயர் அப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்தப் பின்னணியில் கர்நாடகா முதல்வர் சித்தராமையா இன்று ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கர்நாடகாவில் முந்தைய பாஜக ஆட்சியில் கோவிட்19 கொரோனா காலத்தில் அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளில் ஏகப்பட்ட முறைகேடுகள் நடந்தன. இந்த முறைகேடுகள் குறித்து விசாரிக்கப்படும். இம்முறைகேடுகளை ஓய்வு பெற்ற நீதிபதி குன்ஹா தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்து விசாரிப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம் என்றார்.
இது தொடர்பாக ஏற்கனவே கர்நாடகா மாநில அரசு அதிகாரிகளுடன் முதல்வர் சித்தராமையா ஆலோசனை நடத்தி இருக்கிறார். அத்துடன் முந்தைய பாஜக அரசில் 40% கமிஷன், ஒப்பந்ததாரர்களிடம் இருந்து பெற்றது தொடர்பாகவும் விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தல் நடைபெறும் நிலையில் கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசு, பாஜகவினருக்கு எதிராக விசாரணைகளை தீவிரமாக்கி வருவதால் அக்கட்சியின் சீனியர் தலைவர்கள் பெரும் கலக்கத்தில் இருந்து வருகின்றனராம்.












Click it and Unblock the Notifications