சூப்பர் மார்க்கெட்களில் மாஸ்க்கிற்கு தடை.. காரணத்தை பாருங்க.. பெங்களூரில் இப்படியெல்லாமா நடக்குது?
பெங்களூர்: பெங்களூரில் சில சூப்பர் மார்க்கெட்டுகளில் பொதுமக்கள் மாஸ்க் அணிந்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் மாஸ்க் கட்டாயம் என்று போர்டு வைக்கப்பட்ட நிலையில் தற்போது மாஸ்க் அணிந்து செல்ல கூடாது என எழுதி ஒட்டப்பட்டுள்ளது. இதுபற்றி விசாரித்தபோது அதன் பின்னணியில் உள்ள திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.
மாஸ்க்.. ஒரு காலத்தில் மருத்துவமனையில் ஆபரேஷன் தியேட்டர்களில் மட்டுமே மருத்துவர்கள் அணிந்து வந்திருப்பதை நாம் பார்த்திருப்போம். அதன்பிறகு வெளிநாடுகளில் வசிப்போர் பொது இடங்களில் மாஸ்க் அணிந்திருப்பதை நாம் கவனித்து இருப்போம்.

ஆனால் கொரோனா எப்போது பரவ தொடங்கியதோ அதில் இருந்து மாஸ்க்கை அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். வீடு, பொது இடங்கள் அனைத்திலும் நாம் மாஸ்க் அணிந்து சென்று வந்தோம். தற்போது கொரேனா அச்சுறுத்தல் இல்லை. இதனால் நம்மில் பெரும்பாலானவர்கள் மாஸ்க் அணிவதை விட்டு விட்டோம்.
ஆனாலும் கூட இன்னும் பலர் பொது இடங்களில் தங்களின் பாதுகாப்பு கருதி மாஸ்க் அணிந்து செல்கின்றனர். இத்தகைய சூழலில் தான் பெங்களூர் கெங்கேரி உள்பட சில இடங்களில் அமைந்து இருக்கும் சூப்பர் மார்க்கெட்டுகளில் மாஸ்க் அணிந்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த சூப்பர் மார்க்கெட்டுகளின் நுழைவு வாயிலிலேயே No Mask Allowed என்று எழுதி ஒட்டப்பட்டுள்ளது.
இந்த சூப்பர் மார்க்கெட்டுகளில் செல்லும் மக்கள் மாஸ்க் கழற்றிவிட்டு தான் உள்ளே நுழைகின்றனர். மேலும் மாஸ்க் கழற்றாவிட்டால் சூப்பர் மார்க்கெட்டில் பணியாற்றுவோர் அதனை கழற்றும்படி சொல்கின்றனர். சூப்பர் மார்க்கெட்டுகளின் இத்தகைய நடவடிக்கை தற்போது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதுபற்றி விசாரித்தபோது தான் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. இதுபற்றி கெங்கேரியில் மாஸ்க் அணிய தடை விதித்துள்ள சூப்பர் மார்க்கெட் ஊழியர் கூறுகையில், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 2 சூப்பர் மார்க்கெட்டுகளில்ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருட்டு போய் உள்ளது. மாஸ்க் அணிந்து வருபவர்கள் தங்களின் முகத்தை மறைத்து பொருட்களை திருடி தாங்கள் கொண்டு வரும் பேக் அல்லது அணிந்திருக்கும் ஆடைகளுக்குள் மறைத்து எடுத்து செல்கின்றனர்.
அதன்பிறகு விலை குறைந்த 2 பொருட்களை எடுத்து பில் போட்டுவிட்டு வெளியேறுகின்றனர். மாஸ்க் அணிந்து திருடி செல்லும் நபர்களை கண்காணிப்பு கேமரா மூலம் கண்டுபிடித்தோம். ஒவ்வொரு நபர்களும் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.3 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை திருடி செல்கின்றனர். இதுபற்றி போலீசில் புகாரளித்தும் மதிப்பு குறைவு என்பதால் அவர்கள் வழக்குப்பதிவு செய்வது இல்லை. இதனால் தான் மாஸ்க் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது'' என்றார்.












Click it and Unblock the Notifications