கர்நாடகா: "ஆர்எஸ்எஸ் வந்தாலும் முடியாது" எடியூரப்பாவிற்கு ஆவேசமாக பதில் கொடுத்த ஜெகதீஷ் ஷெட்டர்!
பெங்களூர்: பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சி சார்பாக உப்பள்ளி-தார்வார் தொகுதியில் போட்டியிடும் ஜெகதீஷ் ஷெட்டர் ஜெயிப்பது கடினம் என்று எடியூரப்பா கூறியிருந்தார். இந்த நிலையில், இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஜெகதீஷ் ஷெட்டர் பேசியுள்ளார்.
பாஜக தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்க மறுத்ததால் அக்கட்சியில் இருந்து விலகிய ஜெகதீஷ் ஷெட்டர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். உப்பள்ளி-தார்வார் தொகுதியில் போட்டியிட ஜெகதீஷ் ஷெட்டருக்கு காங்கிரஸ் கட்சி வாய்ப்பு வழங்கியுள்ளது.

ஜெகதீஷ் ஷெட்டரை வீழ்த்த பாஜக ஒரு பக்கம் வியூகம் வகுத்து வரும் நிலையில், கண்டிப்பாக வெற்றி பெற்றாக வேண்டும் என்று ஜெகதீஷ் ஷெட்டர் தீவிரம் காட்டி வருகிறார். இந்த நிலையில், இன்று கர்நாடகாவிற்கு வந்த ராகுல் காந்தியை ஜெகதிஷ் ஷெட்டர் சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெகதீஷ் ஷெட்டர் கூறியதாவது:-
உப்பள்ளி-தார்வார் மத்திய தொகுதியில் எனக்கு மக்களின் ஆதரவு உள்ளது. காங்கிரஸ் கட்சியின் பலமும் இருப்பதால் என்னை எதுவும் செய்ய முடியாது. விசாரணை அமைப்புகள் மூலம் என்னை கண்காணிக்க சட்ட விரோதமாக எதையும் நான் செய்யவில்லை. நாக்பூரில் இருந்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் வந்தாலும் என்னை வீழ்த்த முடியாது. சமூக வலைத்தளங்களில் எனக்கு எதிராக தவறான பிரசாரம் செய்கிறார்கள்.
வீட்டில் உட்கார்ந்து கொண்டு செய்யப்படும் இத்தகைய பணியால் எனது வெற்றிக்கு பாதிப்பு வராது. சமூக விலைத்தளத்தில் எனக்கு எதிராக தவறான பிரசாரம் செய்கிறார்கள். வீட்டில் அமர்ந்து செய்யப்படும் இந்த பணியால் எனது வெற்றியின் மீது எந்த தாக்கமும் ஏற்படாது. நாக்பூரில் இருந்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் வந்தாலும் என்னை தோற்கடிக்க முடியாது. அவர்களுக்கு உள்ளூர் மக்களின் மனநிலை, இங்குள்ள சூழ்நிலை என்னவென்று தெரியாது.

பாஜக என்னை மரியாதைக்குறைவாக நடத்தியது. அதனால்தான் நான் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தேன். இந்தக் கட்சியின் முக்கிய தலைவராக ராகுல் காந்தி உள்ளார். எனவே அவரிடம் பல விஷயங்கள் குறித்து பேசினேன். பாரதிய ஜனதாவில் லிங்காயத் சமூக தலைவர்கள் ஓரங்கட்டப்படுவது உள்பட பல விஷயங்கள் குறித்து பேசினோம். நான் போட்டியிடும் தொகுதியில் காங்கிரசை சேர்ந்த ஒருவர் போட்டியாக மனு தாக்கல் செய்துள்ளார். அவருடன் கட்சியினர் பேசி வருகிறார்க்ள். எல்லாம் சரியாகிவிடும் என்ற நம்பிக்கை இருக்கிறது" என்றார்.
முன்னதாக நேற்று பாஜக மூத்த தலைவரான எடியூரப்பா நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், ஜெகதீஷ் ஷெட்டரை ஷீட்டர் (ஏமாற்றுக்காரர்) என்று கடுமையாக விமர்சித்து இருந்தார். மேலும் ஜெகதீஷ் ஷெட்டருக்கு மாநிலங்கவை உறுப்பினர் பொறுப்பு மத்திய அமைச்சர் பதவி வழங்குவதாக அமித்ஷா கூறியும் ஏற்க மறுத்தார். அதற்கான பலனை ஷெட்டர் அனுபவிப்பார். ஜெகதீஷ் ஷெட்டர் அந்த தொகுதியில் வெற்றி பெறுவது மிகவும் கடினம்" என்று கூறியிருந்தார்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications