ஆரம்பிச்சிட்டாரு தேவகவுடா! எத்தனை வருஷம் வாழ்வேன்னு தெரியல, பேரனை ஜெயிக்க வைங்க! கண்ணீருடன் பிரசாரம்
பெங்களூர்: தாம் இன்னும் எத்தனை ஆண்டுகள் வாழ்வேன் என தெரியவில்லை; என்னுடைய பேரன் பிரஜ்வல் ரேவண்ணாவை தேர்தலில் ஜெயிக்க வைக்க வேண்டும் என முன்னாள் பிரதமரும் மதச் சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் நிறுவனருமான தேவகவுடா கண்ணீர் மல்க பிரசாரம் செய்தார்.
கர்நாடகாவில் நாளை மறுநாள் முதல் கட்ட லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. கர்நாடகாவில் 14 தொகுதிகளில் முதல் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகன் குமாரசாமி மண்டியா தொகுதியிலும் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா ஹாசன் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

ஹாசன் தொகுதியில் பேரன் பிரஜ்வல் ரேவண்ணாவுக்காக தாத்தா தேவகவுடா 91 வயதிலும் தீவிர பிரசாரம் செய்து வருகிறார். ஹாசன் மாவட்டம் சத்திகரஹள்ளியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் தேவ கவுடா பேசியதாவது: காவிரி நதிநீர் பிரச்சனையில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அநீதி இழைக்கிறார். கர்நாடகாவின் 28 தொகுதிகளிலும் பாஜகவை வெல்ல வைப்போம். அப்போதுதான் காவிரி பிரச்சனைக்கு பிரதமர் மோடியால் தீர்வு காண முடியும்.
91 வயதாகும் நான் இன்னும் எத்தனை ஆண்டுகள் வாழ்வேன் என தெரியாது. என் உயிர் உள்ளவரை கர்நாடகா விவசாயிகளுக்காகவே பாடுபடுவேன் என்றார். அப்போது கண்ணீர் விட்டார் தேவகவுடா. உடனே கூட்டத்தினரும் நிர்வாகிகளும் தண்ணீரை குடித்துவிட்டு பேசுங்க என்றனர். கண்ணீரை துடைத்துக் கொண்டபடியே பேசிய பேரன் பிரஜ்வல் ரேவண்ணாவை வெற்றி பெற வைக்க வேண்டும் என வாக்கு சேகரித்தார்.
யார் இந்த பிரஜ்வல் ரேவண்ணா?: நாட்டின் இளம் எம்பிக்களில் ஒருவர். 2019-ல் ஹாசன் லோக்சபா தொகுதியில் இருந்து எம்பியாக வென்றவர். ஆனால் 2019 தேர்தலின் போது தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் தவறான சொத்து விவரங்களை தெரிவித்தார் என்ற வழக்கில் அவரை எம்பி பதவியில் இருந்து நீக்கி கர்நாடகா உயர்நீதிமன்றம் 2023-ல் தீர்ப்பளித்திருந்தது. இவரது தந்தை ரேவண்ணா, கர்நாடகா அமைச்சராகப் பணியாற்றியவர். தேவகவுடாவின் மூத்த மகன் தான் ரேவண்ணா. முன்னாள் முதல்வர் குமாரசாமியின் அண்ணன் மகன் பிரஜ்வால். குமாரசாமி மகன் நிகில் குமாரசாமியும் ஏற்கனவே அரசியலில் இருக்கிறார். 2019 லோக்சபா தேர்தலில் நிகில் குமாரசாமி தோற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications