இன்னொரு இட்லி கொடுங்க.. 7வது மாடியில் இருந்து குதிக்கும் முன் கொரோனா நோயாளி பேசிய கடைசி வார்த்தை
பெங்களூரு: " எனக்கு ரொம்ப பசியாக இருக்கு, எனக்கு இன்னொரு இட்லி கொடுங்க" இதுதான் பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளி, 7வது மாடியில் இருந்து குதிக்கும் முன்பு பேசிய கடைசி வார்த்தை ஆகும்.
தெற்கு பெங்களூருவில் உள்ள திலக்நகரைச் சேர்ந்த ஆட்டோரிக்ஸா ஓட்டுனருக்கு (50 வயது) ஏப்ரல் 24ம் தேதி கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதே நாளில் அவருடைய மனைவிக்கும் (45வயது) கொரோனா உறுதி செய்யப்பட்டது.
இதற்கிடையே அவருடைய மனைவி (45 வயது) கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். அதன்பிறகு ஆட்டோ டிரைவரின் குடும்பத்தினர் யாருமே அருடன் பேசவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவர் மனம் உடைந்து காணப்பட்டாராம்.

தற்கொலை
இந்நிலையில் பெங்களுரு விக்டோரியா மருத்துவமனையின் துருமா கேர் சென்டரில் 7வது மாடியில் ஆட்டோ டிரைவர் கொரோனாவுக்கு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். அவர் திங்கள்கிழமை அன்று "எனக்கு ரொம்ப பசியாக இருக்கு இன்னொரு இட்லி கொடுங்க" என்று கேட்டிருக்கிறார். இதன்பிறகு அவர் திடீரென படுக்கையில் இருந்து எழுந்து சென்று 7வது மாடியில் இருந்து தீயணைப்புக்காக வைக்கப்பட்ட அவசர கால வழி வழியாக கீழே குதித்தார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதை சற்றும் எதிர்பார்க்காத மற்ற நோயாளிகள் மற்றும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.

டிரைவர் வேதனை
இதற்கிடையே "நிமோனியா தவிர, அந்த ஓட்டுனருககு நாள்பட்ட சிறுநீரக கோளாறு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் ஹெபடைடிஸ் சி தொற்று இருந்தது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், ஏப்ரல் 25 அன்று அவருக்கு டயாலிசிஸ் செய்யப்பட்டது. அவருக்கு பல வியாதிகள் இருந்தன. இதனால் விரைவில் இறந்துவிடுவார் என உயிரிழந்த ஆட்டோ டிரைவர் தன்னிடம் அடிக்கடி கூறியதாக ஐ.சி.யுவில் அவருடன் இருந்த மற்றொரு நோயாளி தெரிவித்தார்.

குடும்ப உறுப்பினர்கள்
மூத்த சுகாதார அதிகாரிகள் உயிரிழந்த நோயாளி பற்றி கூறுகையில், அந்த நோயாளி அனுமதிக்கப்பட்ட நாளிலிருந்து, அவரது குடும்ப உறுப்பினர்கள் யாரும் அவருடன் தொலைபேசியில் பேச முயற்சிக்கவில்லை, இது அவரை மேலும் வருத்தப்படுத்தியது. அவருடைய குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் அழைத்திருந்தால் கூட அவர் இறந்திருக்கமாட்டார் . அவர் ஒவ்வொரு நாளும் எங்களிடம் கேட்பார். எங்களிடம் எந்த பதிலும் இருக்காது என்றார்கள்.

கல்யாணம் செய்திருக்கக்கூடாது
நான் கல்யாணமே செய்திருக்கக்கூடாது. இப்போது திலக்நகர் மக்கள் அனைவரும் என்னை சபித்திருப்பார்கள். நான் என்ன செய்வது? நான் இனி வாழ விரும்பவில்லை, "என்று அவர் ஒரு சுகாதார அதிகாரியிடம் முந்தைய நாள் இரவு படுக்கையில் கூறியிருக்கிறார். அத்துடன் முன்னா பாய் எம்.பி.பி.எஸ்' காட்சிகளை அவர் அடிக்கடி மருத்துவர்களிடம் பேசியிருக்கிறார்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்?












Click it and Unblock the Notifications