பெங்களூர், ஒசூர் நகரங்களை சூழ்ந்த பனிமூட்டம் காலையிலேயே லைட் எரியவிட்டு ஓடிய வாகனங்கள்
பெங்களூர்: பெங்களூர், ஒசூர் நகரங்களில் இன்று காலை கடும் பனி மூட்டம் காணப்பட்டதால் வாகனங்கள் முகப்பு விளக்கை எரிய விட்டு இயங்கின.
Recommended Video
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் அதிகாலை முதல் பனிமூட்டம் காணப்பட்டது , இதன் காரணமாக தேசிய நெடுஞ்சாலை செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்ட படி சென்றது.

அருகில் செல்லும் வாகனங்கள் கூட தென் படாதவாறு கடும் பனிப்பொழிவு, கடுமையான குளிரும் காணப்பட்டது. இதன் காரணமாக வாகனங்கள் மெதுவாகச் ஊர்ந்து சென்றது.
இந்த பனியின் தாக்கம் காரணமாக காலை பணிக்கு செல்லும் தொழிலாளர்கள் பொது மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். பெங்களூரிலும் இன்று காலை குளிர் அதிகம் இருந்தது. சில நாட்கள் முன்பு குளிர் குறைந்த நிலையில் பெங்களூரில் மீண்டும் குளிர் அதிகரித்துள்ளது.

வானிலை நிலவரம் மாறி மாறி வருவதால், ஒசூர், பெங்களூர் உள்ளிட்ட நகர மக்கள் சளி, இருமல் போன்ற பாதிப்புகளுக்கு உள்ளாகி வருவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications