ஹாய் கய்ஸ் இதை ட்ரை பண்ணுங்க... ஆடை அலங்காரத்தில் பிரதமரை கலாய்த்த பிரகாஷ்ராஜ்
பெங்களூர்: பிரதமர் நரேந்திர மோடி நேபாளம் சென்று திரும்பிய நிலையில் ‛ஹாய் ஹயிஸ் இதை ட்ரை பண்ணுங்க' என நேபாள உடை அணிந்து நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார். இதன்மூலம் பிரதமர் நரேந்திர மோடியின் ஆடை அலங்காரத்தை பிரகாஷ்ராஜ் கலாய்த்துள்ளதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழி படங்களில் நடித்து வருபவர் நடிகர் பிரகாஷ் ராஜ். இவர் 2019 மக்களவை தேர்தலில் பெங்களூர் மத்திய தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு 28 ஆயிரத்து 906 ஓட்டுகள் பெற்று தோல்வியடைந்தார்.
முன்னதாக 2017 ல் அவரது தோழியும், பத்திரிகையாளருமான கவுரி லங்கேஷ் பெங்களூரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். அன்று முதல் பிரகாஷ் ராஜ் மத்திய அரசுக்கும், பாஜகவினருக்கும் எதிராக கருத்துகள் கூறி வருகிறார்.

பிரகாஷ் ராஜ் தொடர் விமர்சனம்
இதுதொடர்பான கருத்துக்களை பிரகாஷ்ராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் #justasking என பதிவிட்டு வருகிறோம். தொடர்ச்சியாக அரசியல் சார்ந்த பதிவுகளை அவர் பதிவிட்டு வருகிறார். குறிப்பாக மத்திய பாஜக அரசையும், அவர்களின் செயல்பாட்டையும் விமர்சனம் செய்து வருகிறார். சமீபத்தில் கூட பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக டுவிட் செய்த குஜராத் எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானிக்கு ஆதரவாகவும், பாஜகவை விமர்சித்தும் பிரகாஷ் ராஜ் கருத்து வெளியிட்டு இருந்தார்.

பாரம்பரிய உடையில் பிரகாஷ் ராஜ்
இந்நிலையில் தான் தற்போது அவர் இன்னொரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பிரகாஷ் ராஜ் நேபாள பாரம்பரிய உடை அணிந்து இருக்கும் 2 போட்டோக்களை வெளியிட்டுள்ளார். இதில் ஒரு போட்டோவில் அரசியல்வாதிகள் மக்களை பார்த்து கையசைப்பது போல் பிரகாஷ் ராஜ் உள்ளார். மேலும் இந்த பதிவில் ‛‛எனது தலைவரால் ஊக்கம் பெற்றுள்ளேன். ஹாய் கய்ஸ் ஏன் நீங்களும் இதை முயற்சித்து பார்க்க கூடாது'' என தெரிவித்துள்ளார்.

நெட்டிசன்கள் கூறுவது என்ன?
இதன்மூலம் நான் நேபாள பாரம்பரிய உடை அணிந்து உள்ளேன். இதுபோன்ற வித்தியாசமான உடைகளை நீங்களும் ஏன் அணிய கூடாது என பிரகாஷ் ராஜ் கேட்டுள்ளார். மேலும் எனது தலைவரால் ஊக்கம் பெற்றுள்ளேன் என கூறியதன் பின்னணியில் அவர் தலைவர் என பிரதமர் நரேந்திர மோடியை குறிப்பிட்டுள்ளதாக நெட்டிசன்கள் கூறுகின்றனர்.

காரணம் என்ன?
அதாவது பிரதமர் நரேந்திரமோடி ஒவ்வொரு மாநிலங்கள், வெளிநாடுகளுக்கு செல்லும்போது அந்த மக்களின் பாரம்பரிய உடைகள், தொப்பிகளை அணிவதை வழக்கமாக வைத்துள்ளார். புத்த பூர்ணிமாவையொட்டி பிரதமர் நரேந்திர மோடி மே 16ல் நேபாள நாட்டுக்கு சென்றார். புத்தர் பிறந்ததாக கருதப்படும் லும்பினிக்கும் சென் போதி மரத்துக்கும் நீர் ஊற்றினார். அங்கு நேபாள பிரதமர் ேஷர் பகதூர் தியூபாவை சந்தித்து 6 ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டது. இதனை மனதில் வைத்து தான் நடிகர் பிரகாஷ் ராஜ் இத்தகைய பதிவை செய்துள்ளதாக இணையதளவாசிகள் கருத்துகள் தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் பிரகாஷ் ராஜூக்கு எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.
-
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்












Click it and Unblock the Notifications