கர்நாடகா, ஹைதராபாத், மத்திய பிரதேசம்.. ஒரே நேரத்தில் இந்து முஸ்லீம் மத மோதல்கள்.. உச்சக்கட்ட பதற்றம்
பெங்களூர்: கர்நாடகா, தெலுங்கானா, மத்தியப் பிரதேசம் ஆகிய 3 மாநிலங்களில் பல்வேறு இடங்களிலும் கடந்த வியாழக்கிழமை திடீரென வன்முறை வெடித்தது. மத நிகழ்வுகளின்போது இந்த வகுப்புவாத பதற்றங்கள் வெடித்தன. ஒரே நேரத்தில் 3 முக்கிய தென்னிந்திய நகரங்களில் அடுத்தடுத்து வெடித்த வன்முறைகளால் பதற்றம் அதிகரித்துள்ளது.
கர்நாடகாவின் பாகல்கோட்டில் சிவாஜி ஜெயந்தி ஊர்வலத்தின்போது மோதல்கள் ஏற்பட்ட நிலையில், மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூரில் ஒரு துர்கா கோயில் வளாகம் சேதப்படுத்தப்பட்டதாகக் கூறப்பட்டதால் பதற்றம் அதிகரித்தது. ஹைதராபாத்திலும் ரமலான் தொழுகையின்போது சிறிய வகுப்புவாத பதற்றம் ஏற்பட்டது.

மத்தியப் பிரதேசம்
மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூரில் உள்ள சியோரா என்ற இடத்தில் துர்கா கோயில் சேதப்படுத்தப்பட்டதாகத் தகவல் பரவியது. இதனால் அங்கு இரு குழுக்களிடையே மோதல் வெடித்தது. கல்வீச்சு சம்பவங்களும் கூட நிகழ்ந்தன. அங்குக் கோயிலில் ஆரத்தியும், அருகிலுள்ள மசூதியில் தொழுகையும் ஒரே நேரத்தில் நடந்தபோது இந்தச் சம்பவம் நடந்ததாக உள்ளூர் மக்கள் தெரிவித்தனர்.
ஒரு இளைஞர் கோயிலின் கிரில்லை சேதப்படுத்தியதாகக் கூறப்பட்ட நிலையில், முதலில் வார்த்தை மோதலாகப் பிரச்சினை வெடித்தது. ஆனால் பின்னர் அது பெரும் மோதலாகவும், அடுத்தடுத்து கல்வீச்சிலுமாக மாறியது. இதனால் கடுமையான மோதல் வெடித்தது. விரைந்து வந்த போலீசார், போராட்டக்காரர்களைக் கலைக்க லேசான தடியடி பயன்படுத்தினர். நேற்று மாலை இந்தச் சம்பவம் நடந்துள்ளது. நிலைமை ஓரளவுக்குக் கட்டுக்குள் வந்தாலும் கூட இன்றும் அந்தப் பகுதியில் பதற்றம் நீடிக்கிறது..
பதற்றம்
மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கோயிலுக்கு அருகேயும், மசூதிக்கு அருகேயும் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அங்கு அதிகாரிகள் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ராகவேந்திர சிங் மற்றும் மூத்த காவல்துறை அதிகாரி சம்பத் உபாத்யாய் விளக்கம் கொடுத்துள்ளனர். அதில் எந்த மத கட்டமைப்பும் சேதப்படுத்தப்படவில்லை என்றும், காயங்கள் குறித்த புகார்கள் இல்லை என்றும் குறிப்பிட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பாக 15க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆசாத் சவுக் பகுதி நீண்ட காலமாகவே பதற்றமான இடமாகக் கருதப்படுகிறது.. அங்குக் கோயில் மற்றும் அதை ஒட்டிய மசூதியில் ஒரே நேரத்தில் ஆரத்தி மற்றும் தொழுகை நடக்கும்போது அது தொடர்பாகச் சிக்கல்கள் வெடிக்கிறது.. தற்போது அப்பகுதிகளில் நிலைமை கட்டுக்குள் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கர்நாடகா
கர்நாடக மாநிலம் பாகல்கோட்டில், சிவாஜி ஜெயந்தி ஊர்வலம் பங்க மசூதி வழியாகச் சென்றபோது கல்வீச்சு நடந்ததால் பதற்றம் வெடித்தது. மசூதி பகுதியிலிருந்து கல் வீசப்பட்டதாக இந்து அமைப்புகள் குற்றம்சாட்டின. போலீஸ் கண்காணிப்பாளர் சித்தார்த் கோயல் மீது கற்கள் பட்ட நிலையில், அவருக்குத் தலையில் லேசான காயம் ஏற்பட்டது.
ஊர்வலத்தின்போது ஒலித்த சில பாடல் வரிகளுக்கு முஸ்லிம் குழுவினர் எதிர்ப்பு தெரிவித்ததே பதற்றத்திற்கு மற்றொரு காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், காவல்துறை உடனடியாகத் தலையிட்டு இரு தரப்பையும் கலைத்தது. இதையடுத்து பாகல்கோட் நகரில் அடுத்த நான்கு நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கல்வீச்சு வழக்கில் எட்டுப் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நிலைமை தற்போது கட்டுக்குள் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
ஹைதராபாத்
அண்டை மாநிலமான தெலுங்கானாவிலும் மோதல் வெடித்தது. ஹைதராபாத் நகரில் அம்பர்பேட்டிலும் மத மோதல் ஏற்பட்டது. ரம்ஜான் தொழுகை நடந்த மசூதி வழியே சிவாஜி ஜெயந்தி ஊர்வலம் சென்றது. அப்போது எழுந்த உரத்த இசை, கோஷங்களுக்கு முஸ்லிம்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே அங்கு வாக்குவாதமும் லேசான மோதலும் அரங்கேறின.
சுமார் 30% முஸ்லிம் மக்கள் வசிக்கும் அம்பர்பேட், மத உணர்வு மிகுந்த பகுதியாகும். நிலைமை உணர்ந்து, காவல்துறையினர் விரைந்து வந்து கூட்டத்தைக் கலைத்தனர். இதில் காயம், சேதம் இல்லை. மோதல் மேலும் பரவாமல் தடுக்க அங்குக் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications