பெங்களூரு மர்ம சப்தத்துக்கு கிடைத்தது விடை! போர் விமானம் சூப்பர் சோனிக் வேகத்தில் சென்றதுதான் காரணம்
பெங்களூரு: பெங்களூருவையே அதிர வைத்த மர்ம் சப்தத்துக்கு ஒருவழியாக விடை கிடைத்துவிட்டது. பெங்களூருவில் வழக்கமாக போர் விமானங்கள் சூப்பர் சோனிக் வேகத்தில் சென்றதாலேயே பயங்கர சப்தம் கேட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
கர்நாடகா மாநில தலைநகர் பெங்களூருவில் இன்று பிற்பகல் பயங்கர இடி போன்ற சப்தம் கேட்டது. இந்த மர்ம சப்தம் குறித்து பல்வேறு செய்திகள் வலம் வரத் தொடங்கிவிட்டன.

பெங்களூருவை நோக்கி வேற்றுகிரக வாசிகளான ஏலியன்கள் படையெடுப்பதாக கதை பரவியது. வங்க கடலில் ஆக்ரோஷமாக நகர்ந்து கொண்டிருந்த ஆம்பன் புயலின் திருவிளையாடலால் வளிமண்டலத்தில் ஏற்பட்ட பெருவெடிப்புதான் இந்த ஓசை என்று கூறினார்கள்.
அதேநேரத்தில் மிராஜ் போன்ற போர் விமானங்கள் சூப்பர் சோனிக் வேகத்தில் செல்வதால் எழும் சோனிக் பூம்தான் இதற்கு காரணம் என்றும் கூறப்பட்டது. இருப்பினும் எந்த ஒருதரப்பும் உரிய விளக்கம் தராததால் பெர்ங்களூரு மர்ம சப்தத்துக்கான காரணம் தெரியாமல் இருந்து வந்தது.
இந்நிலையில் பாதுகாப்பு அமைச்சகம் இதுபற்றி விளக்கம் அளித்துள்ளது. அதில், வழக்கமாக போர் விமானங்கள் பயிற்சியில் ஈடுபடுவதை போல இன்றும் பெங்களூரூ விமான நிலையத்தில் இருந்து போர் விமானங்கள் புறப்பட்டன. புறநகர் பகுதியில் சூப்பர் சோனிக் வேகத்தில் பயிற்சியில் ஈடுபட்டன.
இதனால் எழுந்த சோனிக் பூம்தான் பயங்கர சப்தமாக கேட்டிருக்கிறது என விளக்கம் அளித்துள்ளது. ஒலியின் வேகத்தை விட ஒரு பொருள் காற்றில் வேகமாக பயணித்தால் எழக்கூடிய ஒலிதான் சோனிக் பூம். இந்த சோனிக் பூம் பயங்கர ஒலி ஆற்றலை உருவாக்கும். அத்துடன் இடி போன்ற ஓசையை ஏற்படுத்தும். இதுதான் பெங்களூருவில் கேட்ட சப்தத்துக்கும் காரணம்.
இந்த விளக்கத்துக்குப் பின்னராவது பெங்களூரு நகரம் அமைதியாக உறங்கட்டும்!
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications