Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புலி நிறைந்த காட்டில் இரவு முழுதும் தவித்த 2 வயது குழந்தை.. தேடிச்சென்று மீட்ட நாய்.. திக்திக் சம்பவம்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகாவில் டீ எஸ்டேட்டில் மாயமான 2 வயது பெண் குழந்தை புலிகள் நிறைந்த வனப்பகுதிக்குள் நுழைந்தது. அந்த வனப்பகுதியில் ஒரு முழு இரவையும் கழித்த பெண் குழந்தையை 100க்கும் அதிகமானவர்கள் தேடி சென்ற நிலையில் நாய் ஒன்று பத்திரமாக மீட்டு வந்தது அனைவரையும் நெகிழ வைத்தது.

கர்நாடகா மாநிலம் குடகு மாவட்டம் பி செட்டிகேரி கிராமத்தில் உள்ள டீ எஸ்டேட்டில் சுனில் என்பவர் தனது மனைவி நாகினியுடன் வேலை செய்து வருகிறார். இவர்கள் கடந்த மாதம் 23ம் தேதி பணிக்கு சேர்ந்தனர். இந்த தம்பதிக்கு 2 வயதில் குழந்தை உள்ளது. அந்த குழந்தையின் பெயர் சுனன்யா.

in-karnataka-missing-2-year-old-girl-spends-entire-night-near-tigers-roam-forest-and-finally-pet-dog

டீ எஸ்டேட்டில் உள்ள வீட்டில் தங்கி அவர்கள் பணியாற்றி வந்தனர். சுனில் - நாகினி தம்பதியை போல் அங்கு ஏராளமான எஸ்டேட் தொழிலாளர்கள் தங்கி உள்ளனர். இந்நிலையில் தான் மாலை 6 மணியளவில் குழந்தை சுனன்யா, 2 குழந்தைகளுடன் சேர்ந்து வீட்டு அருகே விளையாடி கொண்டிருந்தது.

அதன்பிறகு சுனன்யாவுடன் விளையாடிய 2 குழந்தைகள் வீடு திரும்பினர். மாறாக சுனன்யா மாயமானாள். வீட்டுக்கு குழந்தை வராததால் சுனில் - நாகினி தம்பதி அதிர்ச்சியடைந்தனர். இந்த டீ எஸ்டேட்டின் அருகே வனப்பகுதி உள்ளது. அங்கு புலி நடமாட்டம் உள்ளது. இதனால் அவர்கள் அதிகமான பயந்தனர். இதையடுத்து உடனடியாக போலீசார் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி சக தொழிலாளர்களுடன் சேர்ந்து அவர்கள் குழந்தையை தேட தொடங்கினர்.

போலீசார், வனத்துறையினரும் வந்துதேடும் பணியை தொடங்கினர். மொத்தம் 100 பேர் குழந்தையை தேடுனர். இந்த தேடுதல் பணியில் 4 நாய்களும் இணைந்தன. அந்த நாய்களும் குழந்தையை தேடும் பணியில் ஈடுபட்டது. இரவு நேரமாகியும் குழந்தை கிடைக்கவில்லை. தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்தது. இரவு 7 மணிக்கு தொடங்கிய பணி 9.30 மணி வரை நடந்தது. இந்த வேளையில் வனப்பகுதியையொட்டிய பகுதியில் புலியின் கால்தடம் பதிவாகி இருந்தது. அதுமட்டுமின்றி காட்டெருமை செத்து கிடந்தது. இதனால் அவர்கள் பயந்துபோயினர்.

இருப்பினும் தேடுதல் பணியை கைவிடவில்லை. நள்ளிரவை தொடர்ந்த மறுநாள் காலையிலும் தேடும் பணி தொடங்கியது. மறுநாள் காலை 6.30 மணிக்கு ஒரியோ என பெயரிடப்பட்ட நாய் திடீரென்று ஒரு இடத்தில் நின்று குரைத்தது. இதையடுத்து அங்கு சென்று பார்த்தபோது குழந்தை சுனன்யா இருந்தார். வனப்பகுதிக்கும், டீ எஸ்டேட்டுக்கும் இடையே உள்ள புதரில் குழந்தை கிடைத்தது. இதனால் அனைவரும் ஹேப்பியாகினர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+