Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பரபரத்த பெங்களூர்.. ஆட்டோ டிரைவராக மாறி மக்களோடு கலந்த ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாதி.. அதிரடி கைது

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகா மாநிலம் பெங்களூரில் ஆட்டோ டிரைவாக ஊடுருவியிருந்த ஜம்மு காஷ்மீரின் ஹிஸ்புல் முஜாஹிதீன் இயக்கத்தைச் சேர்ந்த ஹூசைன் என்ற பயங்கரவாதி அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Recommended Video

    வெற்றி! Agni 4 Missile Test | Tiffin Box-ல் குண்டு அனுப்பிய Pak ஆதரவு தீவிரவாதிகள் | *DefenceWrap

    ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள் கடந்த வாரம் பெங்களூரு வந்திருந்தனர். அப்போது பல வழக்குகளில் தேடப்படும் பாகிஸ்தான் ஆதரவு ஹிஸ்புல் முஜாஹிதீன் இயக்கத்தைச் சேர்ந்த பயங்கரவாதி ஹுசைன் பெங்களூரில் பதுங்கி இருப்பதாகவும் அவரை கைது செய்ய உதவ வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.

    JKs Hizbul Mujahideen terrorist arrested in Bengaluru

    இதனையடுத்து ஹூசைனை பெங்களூரு போலீசார் வலைவீசி தேடத் தொடங்கினர். இந்த ஆபரேஷனில் ராஷ்டிரிய ரைஃபில்ஸ் மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரும் இணைந்தனர்.

    இந்த தேடுதல் நடவடிக்கையில் ஆட்டோ டிரைவராக மாறுவேடத்தில் இருந்த ஹூசைனை போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். பெங்களூர் ஶ்ரீராமபுரா பகுதியில் மனைவியுடன் கடந்த 2 ஆண்டுகளாக ஹூசைன் தங்கி இருந்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இது தொடர்பாக போலீஸ் வட்டாரங்களில் விசாரித்த போது, ஜம்மு காஷ்மீரின் கிஸ்த்வார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தாலிப் ஹூசைன். 2016-ம் ஆண்டு ஹிஸ்புல் முஜாஹிதீன் இயக்கத்தில் இணைந்தவர். அந்த இயக்கத்துக்கு இளைஞர்களை சேர்க்கும் மூளைச் சலவை செய்யும் பணி ஹூசைனுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது.

    தாலிப் ஹூசைனுக்கு 2 மனைவிகள். இவர்களில் ஒருவர் ஜம்மு காஷ்மீரில் இருக்கிறார். மற்றொரு மனைவியுடன் பெங்களூரு ஶ்ரீராமபுரா பகுதியில் குடியிருந்து வாடகைக்கு ஆட்டோ ஓட்டி வந்தார் ஹூசன். இந்த ஆட்டோவின் உரிமையாளருக்கு கூட ஹூசைனின் பின்புலம் தெரியாதாம்.

    JKs Hizbul Mujahideen terrorist arrested in Bengaluru

    தற்போது பெங்களூர் போலீசிடம் பிடிபட்ட ஹூசைன் எதற்காக இங்கே பதுங்கி இருந்தார்? பெங்களூரில் நாசவேலைகளுக்கு ஏதேனும் சதித்திட்டம் தீட்டப்பட்டிருந்ததா? ஹுசைன் யாருடன் எல்லாம் தொடர்பில் இருந்தார்? என துருவிதுருவி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இது தொடர்பாக கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை கூறுகையில், ஜம்மு காஷ்மீர் போலீசார் பெங்களூரில் தீவிரவாதிகளை கைது செய்துள்ளனர். அவர்களுக்கு கர்நாடகா மாநில போலீசார் உதவி செய்துள்ளனர். சந்தேக நபர்களின் நடமாட்டங்களை போலீசார் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர் என்றார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+