Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெங்களூரில் பயங்கரம்.. சீரியல் நடிகை மீது சந்தேகம்.. பெப்பர் ஸ்பிரே அடித்து கத்தியால் குத்திய கணவர்!

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கன்னட சீரியலில் பிரபல நடிகையான மஞ்சுளா ஸ்ருதியின் நடத்தை மீது சந்தேகம் கொண்டு கணவர் கத்தியால் குத்தி கொடூரமாக தாக்கிய சம்பவம் தெரிய வந்துள்ளது. மஞ்சுளா ஸ்ருதியின் கழுத்து, தொடை உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமாக முறை கத்தியால் குத்தப்பட்ட நிலையில், அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கன்னட மொழியில் ஒளிபரப்பப்பட்டு வரும் அம்ருதாதாரே உள்ளிட்ட பிரபல சீரியல்களில் நடித்து வருபவர் மஞ்சுளா ஸ்ருதி. சீரியல்கள் மட்டுமல்லாமல் தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும் பணியாற்றி வந்திருக்கிறார். இவர் 2 நாட்களுக்கு அவரது கணவரால் கொடூரமாக தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Kannada Actress Manjula Shruti Brutally Stabbed by Husband Over Suspicion

20 ஆண்டுகளுக்கு முன்பாக அம்ரேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ஸ்ருதி. இவர்களுக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். ஹனுமந்த் நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வாடகைக்கு இருக்கின்றனர். சமீப காலமாக ஸ்ருதியின் நடத்தையின் மீது அம்ரேஷ் சந்தேகம் கொண்டுள்ளார். இதன் காரணமாக இருவருக்கும் இடையில் தொடர்ந்து சண்டை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக 3 மாதங்களுக்கு முன்பாகவே அம்ரேஷ்வை பிரிந்த ஸ்ருதி, அவரின் சகோதரர் வீட்டில் வசித்து வந்திருக்கிறார். இதனிடையே வீடு குத்தகை பணம் தொடர்பாக மீண்டும் சண்டை வந்திருக்கிறது. இதுகுறித்து ஸ்ருதி ஹனுமந்த் நகர் காவல் நிலையத்தில் அம்ரேஷ் மீது புகார் அளித்திருக்கிறார்.

இருப்பினும் இவர்கள் இருவரும் மீண்டும் கடந்த வியாழக் கிழமையன்று மீண்டும் சண்டையை முடித்து இணைந்து வாழ முடிவு செய்திருக்கின்றனர். இதனால் மீண்டும் தனது கணவர் அம்ரேஷ் வசிக்கும் வீட்டிற்கு ஸ்ருதி வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து குழந்தைகள் கல்லூரிக்கு புறப்பட்டு சென்றுள்ளனர். அதன்பின்னரே அம்ரேஷின் சுயரூபம் வெளியில் வந்துள்ளது.

குழந்தைகள் கல்லூரிக்கு புறப்பட்டு சென்ற உடன், அம்ரேஷ் அவரின் மனைவி ஸ்ருதியை உடனடியாக கொடூரமாக தாக்க தொடங்கி இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் ஸ்ருதி மீது முதலில் பெப்பர் ஸ்பிரேயை பயன்படுத்தி இருக்கிறார். அதன்பின் கத்தியால் தொடை, கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் குத்தி இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் வீட்டில் சுவற்றில் ஸ்ருதியை தலையை பலமாக மோத வைத்து காயத்தை ஏற்படுத்தி இருக்கிறார்.

இதன்பின் ஸ்ருதி விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ஹனுமந்த் நகர் காவலர்கள் அம்ரேஷை கைது செய்து, அவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்திருக்கின்றனர். அதேபோல் ஸ்ருதி - அம்ரேஷ் இடையிலான குடும்ப தகராறு தொடர்பாக ஏற்கனவே 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+