கர்நாடகா: பாஜக வேட்பாளர் பட்டியலால் பிரளயம்-. ஜெயநகர் தொகுதியில் 1,200 பேர் கூண்டோடு விலகல்!
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலுக்கான பாஜகவின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் அக்கட்சியில் பெரும் பிரளயத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஜெயநகர் தொகுதியை என்.ஆர். ரமேஷுக்கு ஒதுக்காததைக் கண்டித்து அவரது ஆதரவாளர்கள் 1,200 பேர் பாஜகவில் இருந்து கூண்டோடு விலகுவதாக அறிவித்துள்ளனர்.
கர்நாடகாவில் 224 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக மே 10-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் நாளை தொடங்க உள்ளது.

கர்நாடக தேர்தலுக்கான வேட்பாளர்களை ஜேடிஎஸ், காங்கிரஸ் கட்சிகள் ஏற்கனவே அறிவித்தன. இரு கட்சிகளிலும் வேட்பாளர்கள் பட்டியலை முன்வைத்து மிகப் பெரிய சலசலப்பு ஏற்படவில்லை. ஜேடிஎஸ் கட்சியில் ஹாசன் தொகுதியில் தமக்குதான் சீட் வேண்டும் என்று கேட்கிறார் தேவ கவுடா மருமகள் பவானி. ஆனால் குமாரசாமியோ இதனை ஏற்க மறுக்கிறார். இந்த விவகாரம் வரும் நாட்களில் விஸ்வரூபம் எடுக்கும்.
காங்கிரஸ் கட்சியில் 11 முஸ்லிம் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். ஆனால் 25 முதல் 30 முஸ்லிம் வேட்பாளர்களை காங்கிரஸ் அறிவித்திருக்க வேண்டும் என்ற அதிருப்தி குரல் எழுந்தது. அதேபோல தேர்தலில் தமக்கு போட்டியிட சீட் தராத காரணத்தால் மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் சபாநாயகருமான ககோடு திம்மப்பா மகள் ராஜநந்தினி இன்று எடியூரப்பாவை சந்தித்து பாஜகவில் இணைந்தார்.
பாஜகவைப் பொறுத்தவரையில் முதல் கட்டமாக நேற்று 189 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்தது. இந்த வேட்பாளர் பட்டியலில் தங்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படும் என்பதால் முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், முன்னாள் துணை முதல்வர் ஈஸ்வரப்பா போர்க்கொடி தூக்கினர். இதில் ஜெகதீஷ் ஷெட்டர் தாம் தேர்தலில் போட்டியிடுதான் தீருவேன் என அடம்பிடித்துக் கொண்டிருக்கிறார். இதற்காக டெல்லிக்கும் சென்றுள்ளார். ஆனால் ஈஸ்வரப்பாவோ, ஒட்டுமொத்த தேர்தல் அரசியலுக்கே முழுக்குப் போடுவதாக அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து நேற்று முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது முதலே சிட்டிங் எம்.எல்.ஏக்கள் பலரது ஆதரவாளர்களும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போதைய நிலையில் 10க்கும் மேற்பட்ட சிட்டிங் எம்.எல்.ஏக்கள் பாஜகவுக்கு எதிராக கலகக் குரல் எழுப்பி ஆதரவாளர்களை போராட வைத்துள்ளனர். மற்றொரு முன்னாள் துணை முதல்வர் லட்சுமண் சவதி பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இதேபோல பெங்களூரு ஜெயநகர் தொகுதியில் என்.ஆர்.ரமேஷுக்கு சீட் தராததைக் கண்டித்து அங்கும் போராட்டம் வெடித்தது. என்.ஆர். ரமேஷ் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதுடன் பாஜகவில் இருந்து விலகுவதாகவும் அறிவித்துள்ளனர். என்.ஆர். ரமேஷுக்கு கட்சி மேலிடம் வாய்ப்பு தராததைக் கண்டித்து 1,200 பேர் பாஜகவில் இருந்து கூண்டோடு விலகுவதாக அறிவித்துள்ளனர்.
இதேபோல ஈஸ்வரப்பா ஆதரவாளர்களான ஷிவமோகா மேயர் உள்ளிட்ட 19 பேர் பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்காததால் பாஜக எம்.எல்.சி சங்கர் தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
-
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் தாமரையின் அசத்தல்! முழு அதிரடி பலன்கள் இதோ -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
TN Election: 1-ல்தான் பாஜக ஜெயிக்குமா? திமுக 180-ஆ? டெல்லியை அதிர வைத்த ANS அதிர்ச்சி சர்வே! -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா! -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
“காருக்குள் வைத்து தவறாக நடக்க முயற்சி”.. பாஜக முக்கிய நிர்வாகி மீது மகளிரணி தலைவி பரபரப்பு புகார் -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை! -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
சாத்தூர் தொகுதியில் போட்டியா? எங்கும் போட்டியிடுவேன்.. நயினார் நாகேந்திரன் நேரடியாக சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications