கர்நாடகா சட்டசபை தேர்தல்: ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர்கள் 3 பேரின் வேட்புமனுக்களும் நிராகரிப்பு
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலில் வேட்பாளர்கள் தாக்கல் செய்த வேட்புமனு மீதான பரிசீலனையின் போது ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர்கள் 3 பேரின் வேட்புமனுக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளது. அது போல் அதிமுக வேட்பாளர் அன்பரசனின் வேட்புமனு ஏற்கப்பட்டுவிட்டது.
கர்நாடகா சட்டசபைக்கு வரும் மே 10 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 13 ஆம் தேதி நடக்கிறது. 224 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. கர்நாடகாவில் பாஜக- காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. ஜேடியூ, அதிமுக எடப்பாடி அணி , அதிமுக ஓபிஎஸ் அணி ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

இந்த வேட்புமனுக்களை தாக்கல் செய்ய நேற்று பிற்பகல் 3 மணியுடன் கால அவகாசம் முடிந்தது. வேட்புமனுக்கள் மீது இன்றைய தினம் பரிசீலனை செய்யப்பட்டது. 224 தொகுதிகளுக்கு 3632 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். அவர்களுள் 3327 ஆண்கள், 304 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் என மொத்தம் 3632 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். வேட்புமனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் ஏப்ரல் 24 ஆம் தேதியாகும். வேட்புமனுக்கள் இன்று பரிசீலனை செய்யப்பட்ட நிலையில் ஓபிஎஸ் தரப்பை சேர்ந்த 3 வேட்பாளர்களின் வேட்புமனுக்களும் நிராகரிக்கப்பட்டன. அவர்கள் மூவரும் புலிகேசி நகர், கோலார் தங்க வயல், காந்தி நகர் ஆகிய தொகுதிகளில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். அந்த வேட்புமனுக்களில் தவறு இருப்பதாக கூறி தேர்தல் அதிகாரிகள் அவற்றை நிராகரித்தனர்.
அது போல் புலிகேசி நகரில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அன்பரசனின் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் நேற்றைய தினம் அங்கீகரித்தது. அது போல் அவருக்கு இரட்டை இலை சின்னமும் ஒதுக்கப்பட்டது. இந்த நிலையில் புலிகேசி நகர் தொகுதியில் எடப்பாடி பழனிசாமி நிறுத்திய வேட்பாளரை எதிர்த்து நெடுஞ்செழியன் என்பவரை ஓபிஎஸ் வேட்பாளராக அறிவித்தார். இதைத் தொடர்ந்து கோலார் தங்க வயல் தொகுதிக்கு அனந்தராஜையும் காந்தி நகர் தொகுதிக்கு குமாரையும் வேட்பாளர்களாக அறிவித்திருந்தார். இந்த நிலையில் இந்த மூவரது வேட்புமனுக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளது ஓபிஎஸ்ஸுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா சட்டசபை தேர்தலில் வாக்களிக்கத் தகுதியானவர்கள் 5,21,73,579 பேராகும். அவர்களில் ஆண்கள் 2.62 கோடியும், பெண் வாக்காளர்கள் 2.59 கோடியும் உள்ளனர். தேர்தலில் மக்கள் வாக்களிக்க வசதியாக 58,282 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இவற்றில் நகர்ப்புற வாக்குச் சாவடிகள் 20,886 ஆகும். மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 36 தொகுதிகள் பட்டியலின வேட்பாளர்களுக்கும் 15 தொகுதிகள் பழங்குடியினத்தவர்களுக்கும் ஒதுக்கப்பட்டன. மாநிலத்தில் 80 வயதுக்குள் மேற்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 12.15 லட்சம் ஆகும். இது கடந்த 2018ஆம் ஆண்டு நடந்த தேர்தலை விட 32 சதவீதம் அதிகமாகும்.
இவர்களில் 16,796 வாக்காளர்கள் 100 வயதை எட்டியவர்கள், 100 வயதை கடந்தவர்கள். மாற்றுத்திறனாளிகள் 5.55 லட்சம் பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். கர்நாடகா சட்டசபை தேர்தலில் வாக்களிக்க 9.17 லட்சம் முதல்முறை வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர். 2023 ஏப்ரல் 1 ஆம் தேதியுடன் 18 வயது பூர்த்தியானவர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்கப்படுவர்.
கடந்த 2018ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் 80 இடங்களிலும் ஜேடிஸ் 37 இடங்களிலும் வென்றன. பாஜக ஆட்சி அமைக்க வரக் கூடாது என்பதற்காக காங்கிரஸ் அதிக தொகுதிகளை பெற்றாலும் ஜேடிஎஸ் ஆட்சி அமைக்க ஆதரவு தருவதாக தெரிவித்தது. அதன்படி குமாரசாமி முதல்வரானார். இதையடுத்து 2019 ஆம் ஆண்டு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கட்சி தாவலால் குமாரசாமி ஆட்சி கலைந்தது.
அதன்பின்னர் எடியூரப்பா முதல்வரானார். அவர் 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் பாஜகவின் வயது வரம்பு தகுதி அடிப்படையில் ராஜினாமா செய்தார். அதன்பிறகு முதல்வராக பசவராஜ் பொம்மை தேர்வு செய்யப்பட்டார். எனவே கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்கவும் பாஜக ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளவும் போராடுகிறது.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்!












Click it and Unblock the Notifications