கர்நாடகா பந்த் பெங்களூரில் எப்படி இருக்கு? எந்தெந்த சேவைகள் இல்லை? நோட் பண்ணுங்க மக்களே
பெங்களூர்: கர்நாடகாவில் இன்று கன்னட அமைப்பினர் பந்த் போராட்டத்தை அறிவித்துள்ளனர். இந்த பந்த் போராட்டம் காலையிலேயே பிசுபிசுத்துப்போனது. பெங்களூரில் பந்த் எப்படி இருக்கு? எந்தெந்த சேவைகள் உள்ளது? எந்தெந்த சேவைகள் இல்லை? என்பது பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
மகாராஷ்டிரா எல்லையில் பெலகாவி அமைந்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் கர்நாடகா அரசு போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான பஸ்சில் பெலகாவியில் இருந்து பாலேகுந்திரி என்ற இடத்துக்கு சென்று கொண்டிருந்தது. பஸ்சில் இருந்த பெண் ஒருவர் மராத்தியில் பேசி டிக்கெட் கேட்டார். அதற்கு கண்டக்டர் மகாதேவ் ஹுக்கேரி, ‛‛எனக்கு மராத்தி மொழி தெரியாது. கன்னடத்தில் பேசுங்கள்'' என்று கூறினார்.

இது பிரச்சனையை ஏற்படுத்தியது. அப்போது மராத்தி மொழி பேசுவோர் கண்டக்டர் மகாதேவ் ஹுக்கேரியை தாக்கினர். இதனை கன்னட அமைப்பினர் கண்டித்தனர். இந்த சம்பவத்தை கண்டித்து பந்த் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. கன்னட கூட்டமைப்பு தலைவர் வாட்டாள் நாகராஜ் இந்த பந்த் போராட்டத்தை அறிவித்துள்ளார்.
பெலகாவியில் செயல்பட்டு வரும் மகாராஷ்டிரா ஏகிகிரண் சமிதி, சிவசேனா உள்ளிட்ட மகாராஷ்டிரா அமைப்புகளை ரத்து செய்ய வேண்டும் என்பது தான் பிரதான கோரிக்கையாக உள்ளது. அதேபோல் மகாராஷ்டிரா எல்லையில் அமைந்துள்ள பெலகாவி மாவட்டத்தில் கன்னட மக்களின் பாதுகாப்பு மற்றும் உரிமையை காக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று கன்னட அமைப்பினர் பெங்களூர் உள்பட மாநிலம் முழுவதும் பந்த் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
இன்று காலை 6 மணிக்கு தொடங்கிய பந்த் போராட்டம் இன்று மாலை 6 மணி வரை 12 மணிநேரம் நடைபெற உள்ளது. இந்த பந்த் போராட்டத்துக்கு மாநிலம் முழுவதும் பல்வேறு அமைப்பினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். பெங்களூர் உள்பட மாநிலம் முழுவதும் அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்கத்தினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனால் இன்று காலை 7 மணி நிலவரப்படி பெங்களூர் மாநகர அரசு பேருந்தான பிஎம்டிசி பஸ்கள் வழக்கம்போல் இயங்கின. அதேபோல் தமிழகம் - கர்நாடகா இடையே பஸ் சேவைகள் வழக்கம்போல் உள்ளது.
ஓலா, உபர் உள்பட பல வாடகை கார் ஓட்டுநர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் பந்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இருப்பினும் குறைந்த அளவில் அந்த வாகனங்கள் இயங்கி வருகிறது. அதேபோல் ஹோட்டல்கள் குறைந்த அளவில் திறக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை எதுவும் விடப்படவில்லை. மெட்ரோ ரயில்கள் வழக்கம்போல் இயங்கி வருகிறது. அதேபோல் ரயில் நிலையங்களில் ரயில்கள் இயங்கி வருகின்றன. பஸ், ரயில் நிலையம், மெட்ரோ ரயில் நிலையங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் பெங்களூர் கேஆர் மார்க்கெட்டில் வழக்கம்போல் கடைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளது. திரையரங்குகளில் காலை முதல் மதியம் வரை மட்டும் திரைப்படம் ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர பல இடங்களில் மக்கள் பந்துக்கு ஆதரவு கொடுக்காமல் வழக்கம்போல் வாகனங்களில் வெளியே நடமாடி வருகின்றனர். இதனால் கர்நாடகா முழுவதும் வாட்டாள் நாகராஜ் அறிவித்த பந்த் போராட்டம் பெங்களூரில் பிசுபிசுத்துப்போய் உள்ளது.
பெங்களூரில் சுதந்திர பூங்காவில் மட்டும் போராட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பிற இடங்களில் போராட்டம் நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு பெங்களூரில் சுதந்திர பூங்கா, மைசூர் வங்கி சர்க்கிள், அனந்த்ராவ் சர்க்கிள் உள்ளிட்ட பல இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு?












Click it and Unblock the Notifications