"பஞ்சு மிட்டாய் & கோபி மஞ்சூரியனுக்கு தடை!" தமிழகத்தை தொடர்ந்து கர்நாடகாவிலும் அதிரடி.. என்ன காரணம்
பெங்களூர்: உடலுக்கு ஆபத்தான நிறமிகள் சேர்க்கப்படுவதால் கர்நாடக மாநிலத்தில் ரோடமைன்-பி பயன்படுத்திச் செய்யப்படும் பஞ்சு மிட்டாய் மற்றும் கோபி மஞ்சூரியன் உணவுக்கு அம்மாநில அரசு தடை விதித்துள்ளது.
இந்த நவீன உலகில் நாம் சாப்பிடும் பல உணவுகள் நச்சுத்தன்மை நிறைந்ததாக மாறி வருகிறது. ஆனால், அதன் டேஸ்ட் சூப்பராக இருப்பதால் நச்சுத்தன்மையை மறந்து பலரும் அதை விரும்பி சாப்பிட்டு வருகின்றனர்.

அப்படி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடும் உணவாகப் பஞ்சு மிட்டாய் இருக்கிறது. இருப்பினும், பஞ்சு மிட்டாயில் உடலுக்கு ஆபத்தான நிறமிகள் இருப்பதாக சில வாரங்களாகப் புகார்கள் எழுந்துள்ளன.
கர்நாடகாவில் தடை: இதற்கிடையே கர்நாடக அரசு அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அதாவது உடலுக்கு ஆபத்தான நிறமிகள் சேர்க்கப்படுவது உறுதியானதால் கர்நாடக மாநிலத்தில் ரோடமைன்-பி பயன்படுத்திச் செய்யப்படும் பஞ்சு மிட்டாய் மற்றும் கோபி மஞ்சூரியன் உணவுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோடமைன்-பி என்ற நிறமிக்கும் முழுமையாகத் தடை விதித்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
பஞ்சு மிட்டாய் மற்றும் கோபி மஞ்சூரியன் என இரண்டையும் பலரும் விரும்பி சாப்பிட்டு வருகிறார்கள். அதிலும் குறிப்பாகப் பஞ்சு மிட்டாய் என்பது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவாக இருக்கிறது. இந்தச் சூழலில் தான் ரோடமைன்-பி பயன்படுத்திச் செய்யப்பட்டும் இந்த இரண்டிற்கும் கர்நாடக அரசு மொத்தமாகத் தடை விதித்துள்ளது.
தமிழ்நாடு: முன்னதாக கடந்த மாதம் தான் தமிழக அரசு பஞ்சுமிட்டாய்க்கு தடை விதித்து இருந்தது. மக்களின் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் ரோடமைன் பி கலந்திருப்பதால், பஞ்சு மிட்டாய் மற்றும் இந்த நிறமியைப் பயன்படுத்திச் செய்யப்படும் உணவுகளை உற்பத்தி செய்யவும் விற்பனை செய்யவும் தமிழக அரசு தடை விதித்தது.
அதேபோல வடக்கு கோவாவில் சாலையோரக் கடைகளில் 'கோபி மஞ்சூரியன்' விற்கத் தடை விதிக்கப்பட்டது. 'கோபி மஞ்சூரியன்' தயாரிக்கப்படும் சுகாதாரமற்ற சூழ்நிலைகள் குறித்து கவலை எழுப்பிய மபுசா நகரின் நகராட்சி கவுன்சில் தெரு கடைகள் சுகாதாரமற்ற முறையில் கோபி மஞ்சூரியன் செய்வதால் அவர்கள் கோபி மஞ்சூரியன் விற்கத் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.
-
"LPG கனெக்ஷன் மொத்தமாக நிறுத்தப்படும்.." மத்திய அரசு மிக முக்கிய எச்சரிக்கை! என்ன மேட்டர்? -
அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் விலையும் உயர்கிறது.. ஏப்ரல் 1 முதல் அமல்.. அதிர்ச்சி அறிவிப்பு -
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா












Click it and Unblock the Notifications